அள்ளித் தரும் திரையுலகம்

அள்ளித் தரும் திரையுலகம்

3 mins read
da6f4f0f-4fb1-4d7d-8fca-ea9f90b1c24f
சூர்யா -

கொரோனா பர­வல் தடுப்­புப் பணிக்கு நிதி அளிப்­ப­தில் தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­னர் முனைப்­பா­க­வும் அக்­க­றை­யு­ட­னும் உள்­ள­னர்.

உச்ச நட்­சத்­தி­ர­மான ரஜினி முதல் புது நாய­கர்­கள் வரை பல­ரும் தங்­க­ளால் முடிந்த தொகையை அளித்து வரு­கி­றார்­கள்.

கொரோனா பர­வல் தடுப்­புப் பணிக்கு தாரா­ள­மாக நிதி வழங்­கு­மாறு தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து நடி­கர் ரஜினி ஒரு கோடி ரூபாய் நிதி அளித்­துள்­ளார்.

இதே­போல் நடி­கர் சிவ­கு­மார் குடும்­பத்­தா­ரும் ஒரு கோடி வழங்கி உள்­ள­னர். ரஜி­னி­யைப் பொறுத்­த­வரை தமி­ழ­கத்­தில் புதிய முதல்­வ­ராக மு.க.ஸ்டா­லின் பொறுப்­பேற்­றுக் கொண்ட உட­னேயே தமது வாழ்த்­தைத் தெரி­வித்­தார்.

கொரோனா நிதி குறித்து தக­வல் அறிந்­த­தும் உட­ன­டி­யாக தனது உத­வி­யா­ளரை அழைத்து நிதி கொடுப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யச் சொன்­னா­ராம்.

இதை­ய­டுத்து ரஜி­னி­யின் மகள் ஐஸ்­வர்­யா­வும் முதல்­வர் ஸ்டா­லி­னைச் சந்­தித்து நிதி வழங்­கி­யுள்­ளார்.

நடி­கர் சிவ­கு­மார் தன் மகன்­கள் சூர்யா, கார்த்தி ஆகி­யோ­ரு­டன் முதல்­வரை நேரில் சந்­தித்து நிதி­ய­ளித்­தார். ஏற்­கெ­னவே தமக்கு வாழ்த்­துத் தெரி­வித்­தி­ருந்த சிவ­கு­மா­ருக்­குப் புதிய முதல்­வர் நன்றி தெரி­வித்­தா­ராம்.

அதன்­பி­றகு ஓரிரு நிமி­டங்­கள் மறைந்த முதல்­வர் கரு­ணா­நிதி குறித்து சிவ­கு­மார் நினை­வு­கூர்ந்­த­தாக தெரி­கிறது.

நடி­கர் அஜித் இது­போன்று நிதி வழங்­கு­வ­தை­யும் உதவி செய்­வ­தை­யும் ரக­சி­ய­மாக வைத்­தி­ருப்­பார். எனி­னும் சில நாட்­கள் கழித்து விஷ­யம் வெளியே வந்­து­வி­டும்.

ஆனால் இந்த முறை கொரோனா தடுப்­புப் பணிக்கு 25 லட்­சம் ரூபாய் நிதி­ய­ளித்த கையோடு வங்கி மூலம் பணப்­ப­ரி­மாற்­றம் செய்­த­தாக அவ­ரது செய்­தித் தொடர்­பா­ளர் ஊட­கங்­க­ளி­டம் தெரி­வித்­தார். கவிஞர் வைரமுத்து ஐந்து லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

இயக்­கு­நர் ஏ.ஆர்.முரு­க­தாஸ் தன் பங்­குக்கு 25 லட்­ச­மும் சண்­டைப் பயிற்­சி­யா­ள­ரும் நடி­க­ரு­மான திலீப் சுப்­ப­ரா­யன் 1 லட்­ச­மும் நிதி அளித்­துள்­ள­னர்.

இயக்­கு­நர் சி.எஸ்.அமு­தன் 50 ஆயி­ரம் அளித்­துள்­ளார். பின்­னர் தனது டுவிட்­ட­ரில் பதி­விட்ட அவர், அனை­வ­ரும் தாரா­ள­மாக நிதி­ய­ளிக்க வேண்­டும் என வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

சன் தொலைக்­காட்சி 30 கோடி ரூபாய் நிதி­ய­ளிப்­ப­தா­கக் கூறி அனை­வ­ரை­யும் அசர வைத்­துள்­ளது.

தற்­போது ரஜி­னி­காந்த் நடிக்­கும் 'அண்­ணாத்த', விஜய் நடிக்­கும் 'தள­பதி 65', சூர்­யா­வின் 40வது படம் என மூன்று பிரம்­மாண்ட படங்­க­ளைத் தயா­ரித்து வரு­கிறது சன் பிக்­சர்ஸ்.

கிட்­டத்­தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் செல­விட்டு படங்­கள் தயா­ரிக்­கும் நிலை­யில், தமி­ழக அர­சுக்­கும் பெருந்­தொ­கையை நிதி வழங்­கி­யதை அடுத்து பல்­வேறு தரப்­பி­ன­ரும் இந்­நி­று­வ­னத்­துக்கு பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.

அஜித் நிதி வழங்­கிய பிற­கும் விஜய் சும்மா இருக்­க­லாமா என்று ஒரு­த­ரப்­பி­னர் சமூக வலைத்­த­ளங்­களில் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர். இதற்கு விஜய் தரப்பு பதி­லடி கொடுத்து வரு­கிறது.

இப்­ப­டித்­தான் கடந்த முறை தமி­ழக அர­சுக்கு நிதி வழங்­கு­வ­தில் விஜய், அஜித் ரசி­கர்­க­ளி­டையே இணைய வெளி­யில் மோதல் வெடித்­தது. அப்­போது அஜித்தை விட விஜய் அதிக தொகை கொடுத்­த­தாக கூறப்­பட்­ட­தால் விஜய் ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் அதைக் கொண்­டா­டி­னர்.

இதற்­கி­டையே கோடம்­பாக்­கத்­தில் உள்ள பல்­வேறு திரை­யு­லக சங்­கங்­களும் நிதி­யு­தவி அளிக்க தயா­ராகி வரு­கின்­றன.

அதே சம­யம் திரைப்­ப­டத் தொழி­லா­ளர்­க­ளின் நிலையை எண்­ணிப் பார்க்க வேண்­டும் என்ற கோரிக்­கை­யும் எழுந்­துள்­ளது.

கடந்த முறை ஊர­டங்­கின்­போது படப்­பி­டிப்­பு­கள் ரத்­தா­ன­தால் போதிய வரு­மா­ன­மின்றி திரைப்­ப­டத் தொழி­லா­ளர்­கள் தங்­கள் குடும்­பத்­து­டன் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு தவித்­த­னர்.

அப்­போது முன்­னணி நடி­கர்­கள், நடி­கை­கள் தங்­க­ளால் இயன்ற தொகை­களை தொழி­லா­ளர்­க­ளுக்கு அளித்­த­னர். அதே ­போன்று இம்­மு­றை­யும் தொழி­லா­ளர்­க­ளுக்கு உதவ சம்­பந்­தப்­பட்ட சங்­கங்­கள் உரிய நட­வ­டிக்­கையை உடனே மேற்­கொள்ள வேண்­டும் என பல­ரும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.