'எதிலும் ஒழுங்கு தேவை'

'எதிலும் ஒழுங்கு தேவை'

3 mins read

'இந்­தி­யன்-2' படப்­பி­டிப்பு எப்­போது துவங்­கும் என ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ரகுல் பிரீத்­சிங்.

தமிழ் மட்­டு­மல்­லா­மல் இந்­தி­யி­லும் இவ­ருக்­குத் தொடர்ந்து வாய்ப்­பு­கள் கிடைத்து வரு­கின்­றன. இந்­தி­யில் அர்­ஜுன் கபூர், அஜய் தேவ்­கன், ஜான் ஆப்­ர­காம் என முன்­னணி நடி­கர்­க­ளு­டன் 'டூயட்' பாடு­ப­வர் தெலுங்­கி­லும் வெற்றி வலம் வரு­கி­றார்.

பல மொழி­களில் நடிப்­ப­தால் கொரோனா கால­கட்­டத்­தில் ஊர­டங்கு இல்­லாத மாநி­லங்­களில் நடை­பெ­றும் படங்­களில் பங்­கேற்று வரு­கி­றா­ராம்.

உடல்­ந­லத்தை நல்­ல­வி­த­மா­கப் பேணு­வ­தும் உடற்­பயிற்சி உள்­ளிட்ட நல்ல பழக்க வழக்­கங்­க­ளா­லும்­தான் தம்­மால் தொடர்ந்து இடை­வி­டா­மல் உழைக்க முடி­கிறது என்­கி­றார் ரகுல்.

தனது ரசி­கர்­களும் தன்­னைப் போலவே நல­மு­டன் இருக்­க­வேண்­டும் என விரும்­பு­வ­தாக அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நான் ராணுவ குடும்­பத்­தில் பிறந்து வளர்ந்­த­வள். அத­னால் என் குழந்­தைப் பரு­வம் மிக­வும் கட்­டுக்­கோப்­பா­க­வும் கட்­டுப்­பா­டு­க­ளு­ட­னும் இருந்­தது. இப்­போ­து­கூட எனது அனைத்­துச் செயல்­க­ளி­லும் ஒரு­வித ஒழுங்கு இருக்­கும்.

"பள்ளி நாட்­களில் காலை ஐந்­தரை மணிக்கே தூக்­கத்­தில் இருந்து எழுப்பிவிடு­வார்­கள். அப்­போது­தான் பள்­ளிப் பேருந்­தைப் பிடிக்க முடி­யும். விடு­முறை தினங்­கள், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் அதி­க­பட்­சம் காலை எட்டு மணி வரை தூங்­கி­னாலே பெரிய விஷ­யம். அந்­த­ அள­வுக்­குக் கட்­டுப்­பா­டு­கள் இருக்­கும்," என்று குழந்­தைப்­ப­ரு­வத்தை நினைவு கூர்­கி­றார் ரகுல்.

பின்­னாட்­களில் தேசிய அள­வி­லான விளை­யாட்­டுப் போட்­டி­களில் தாம் பங்­கேற்க இத்­த­கைய கண்­டிப்­பான வளர்ப்­பு­தான் கார­ணம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தந்­தை­தான் தமது வெற்­றி­க­ளுக்­கான முக்­கி­யக் கார­ணம் என்­கி­றார்.

தின­மும் பள்­ளிப் பாடங்­க­ளைப் படிக்­கும் பழக்கம் இவ­ருக்கு இருந்­த­தில்­லை­யாம். தேர்­வுக்கு சுமார் மூன்று வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் பாடப்­புத்­த­கங்­க­ளைப் புரட்­டத் தொடங்­கு­வா­ராம்.

"அப்­படி இருந்­தும் அனைத்­துப் பாடங்­க­ளை­யும் முழு­மை­யா­கப் படித்­து­வி­டு­வேன். நல்ல மதிப்­பெண்­களும் பெறு­வேன். நான் இவ்­வாறு இடை­வி­டா­மல் படிப்­ப­தைப் பார்த்து ஒரு மணி நேர­மா­வது வெளியே சென்று விளை­யா­டி­விட்டு வா என்று அப்பா ஆறு­த­லா­கச் சொல்­வார்.

"நன்­றா­கப் படித்­தா­லும்­கூட மருத்­து­வ­ரா­கவோ பொறி­யி­ய­லா­ள­ரா­கவோ ஆகி­வி­டக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தேன்," என்று கூறி­யுள்­ளார் ரகுல் பிரீத்­சிங்.

கொரோனா கால­கட்­டத்­தில் எவ்­வாறு பாது­காப்­பாக இருக்­க­வேண்­டும் என்று தமது பேட்­டி­யில் விவ­ரித்­துள்­ளார் ரகுல்.

அண்­மைக்­கா­ல­மாக உடல்­ந­லம், நோய் எதிர்ப்பு சக்தி, மூச்­சுப் பயிற்சி, யோகா குறித்­துப் பேசு­வது மக்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்துவிட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், உடற்­ப­யிற்சி என்­றாலே அது விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கா­னது எனப் பல­ரும் நினைப்­பது தவறு என்­கி­றார்.

தின­மும் ஒரு மணி நேர­மா­வது உடற்­ப­யிற்சி செய்­ய­வேண்­டும் என்று குறிப்­பி­டு­ப­வர் யோகா­ச­னம் என்­பது அழ­கான உணர்வு என்­கி­றார். சினி­மா­வில் உடலை வளைத்து நெளித்து நட­ன­மாட இவ­ருக்கு யோகா­ச­னம்­தான் கைகொ­டுக்­கி­ற­தாம்.

"பாட்டி வைத்­தி­யம் என்­பதை நம்­மில் பெரும்­பா­லா­ன­வர்­கள் கேள்­விப்­பட்­டி­ருப்­போம்.

"வீட்­டுச் சமை­யல் மூல­மாக அனைத்து உடல் உபா­தை­க­ளுக்­கும் தீர்வு காணக்­கூ­டிய மருத்­துவ முறை அது.

"அதே­போல் பாட்டி சமை­யல் என்­றும் கூறு­வார்­கள். அவற்றை நாம் பின்­பற்­றி­னால் நீண்­ட­காலம் நோயின்றி வாழ முடி­யும். என்­னைப் பொறுத்­த­வரை ஒழுங்­கான, ஒழுக்­க­மான வாழ்க்­கை­முறை இருந்­தால் எந்த நோயும் நம்மை அணு­காது. மேலும் பெரி­ய­வர்­கள் தங்­கள் அனு­ப­வத்தை வைத்­துக் கூறும் அறி­வு­ரை­க­ளை­யும் நாம் புறக்­க­ணித்­து­வி­டக் கூடாது," என்கிறார் ரகுல்.