'இனி நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன்'

'இனி நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன்'

2 mins read
324f91a6-1d0e-4245-9889-b0f7b062179c
-

இனி வழக்­க­மான வணி­கப் படங்­களில் நடிக்க விரும்­ப­வில்லை என்­கி­றார் அஞ்­சலி.

தர­மான கதை அம்­சம் உள்ள, ரசி­கர்­களை மகிழ்­விக்­கக்­கூ­டிய படங்­களில் மட்­டுமே இனி தன்­னைப் பார்க்க முடி­யும் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழில் அஞ்­ச­லிக்கு எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் சரி­யாக அமை­ய­வில்லை. தொற்று நெருக்­க­டி­யால் புதுப்­படங்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறைந்­துள்ள நிலை­யில் கோடம்­பாக்­கத்­தில் இருந்து தெலுங்கு தேசம் பக்­கம் ஒதுங்­கி உள்­ளார்.

அங்கு உருப்­ப­டி­யான வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­ற­ன­வாம். அண்­மை­யில் தெலுங்­கில் இவர் நடித்த 'வக்­கீல் சாப்' படம் பெரும் வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. இதை­யடுத்து தெலுங்கு இயக்­கு­நர்­க­ளின் பார்வை அஞ்­சலி பக்­கம் திரும்­பி­யுள்­ளது.

பல இளம் இயக்­கு­நர்­க­ளி­டம் கதை கேட்டு வரும் அஞ்­சலி, ஊர­டங்கு முடி­வுக்­கு­வ­ரும்­போது தன் கைவ­சம் நான்­கைந்து படங்­க­ளா­வது இருக்­கும் என நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார். மேலும் 'வக்­கீல் சாப்' படத்­துக்கு ஆத­ர­வ­ளித்த ரசி­கர்­க­ளுக்கு நன்­றி­யும் தெரி­வித்­துள்­ளார்.

"பொது­வாக வணி­கப் படங்­கள் என்­றால் உடனே நடிக்க ஒப்­புக்­கொள்­வேன். ஆனால் நடிக்க வந்து இத்­தனை ஆண்டு­களுக்­குப் பிற­கும் ஒரே­மா­தி­ரி­யான படங்­களில் நடிப்­பது சலிப்பை ஏற்­ப­டுத்­து­கிறது.

"எனக்­குப் பொருத்­த­மான கதா­பாத்­தி­ரங்­களும் கதைக்­க­ளங்­களும் அமைந்­தால் எனது நூறு விழுக்­காடு திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யும். அத்­த­கைய படங்­கள் எனது தொழில் வாழ்க்­கை­யில் தலை­சி­றந்த படைப்­பு­க­ளாக மாறும்.

"இத்­தனை ஆண்­டு­க­ளாக என்­னை­யும் எனது பணி­யை­யும் நேசித்­துப் பாராட்­டி­ய­தற்கு நன்றி சொல்­லக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். இனி நல்ல படங்­க­ளைத் தந்து ரசி­கர்­களை மகிழ்­விப்­பேன்," என்று அஞ்­சலி குறிப்­பிட்­டுள்­ளார்.

நடிகை காஜல் அகர்­வா­லும் ஒரு முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றா­ராம். வேறொன்­று­மில்லை, தனது கண­வர் எப்­போது சொன்­னா­லும் திரை­யு­லகை விட்டு வில­கி­வி­டு­வேன் என்­கி­றார். அண்­மை­யில் தனது ரசி­கர்­க­ளு­டன் இணை­யம் வழி உரை­யா­டி­னார் காஜல். அப்­போது தமது கண­வர், அவ­ரின் குடும்­பத்­தார் தமக்கு அளித்­து­வ­ரும் ஆத­ரவு குறித்­துப் பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.

"எனது கண­வ­ரது பக்­க­ப­லம் இல்லை என்­றால் என்­னால் சினிமா உல­கில் நீடிக்க இய­லாது. திரு­ம­ணத்­திற்­குப் பிறகு எனக்­குத் தேவை­யான அனைத்­தை­யும் என் கண­வர் செய்­கி­றார்.

"எனவே, எனது திரை­யு­லக வாழ்க்கை குறித்து அவர் என்ன முடி­வெ­டுத்­தா­லும் அதை ஏற்­றுக்­கொள்­வேன். எவ்­வ­ளவு காலம் தொடர்ந்து நடிக்க முடி­யும் என்­பது எனக்­குத் தெரி­ய­வில்லை. ஆனால், நடித்­தது போதும் என்று என் கண­வர் கூறி­னால் அந்த நிமி­டமே திரை­யு­ல­கில் இருந்து வில­கி­வி­டு­வேன்," என்­கி­றார் காஜல்.

, :   

அஞ்சலி