'சிரிக்க வைக்கும் படம்'

'சிரிக்க வைக்கும் படம்'

3 mins read

இயக்­கு­நர் ராதா­மோ­கன் கைவண்­ணத்­தில் உரு­வாகி வரு­கிறது 'மலே­சியா டூ அம்­னீ­சியா'. இது முழு­நீள நகைச்­சு­வைப் படம். மிக விரை­வில் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது.

இப்­ப­டி­யொரு வித்­தி­யா­ச­மான தலைப்பு வைக்க என்ன கார­ணம் என்று கேட்­டால், அந்த ரக­சி­யத்­தைச் சொல்ல முடி­யாது என்று சிரிக்­கி­றார் ராதா­மோ­கன்.

"தலைப்­புக்­கான கார­ணத்­தைச் சொன்­னால் கதை­யில் உள்ள சின்ன முடிச்சு அவிழ்ந்­து­விடும். பிறகு படம் பார்க்­கும் ஆர்­வம் போய்­வி­டும். எனவே படம் வெளி­யா­ன­தும் பாருங்­கள். அந்­தத் தலைப்பை வைத்­த­தற்­கான நியா­ய­மான கார­ணங்­கள் நிச்­ச­யம் புரி­யும்," என்­கி­றார் ராதா­மோ­கன்.

ஒரு பொய்­யைச் சொல்­லப்­போய் அது விப­ரீ­த­மாகி, பிறகு சூழ்­நிலை வேறு மாதி­ரி­யா­கி­வி­டும். சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் இந்­தச் சூழ்­நி­லையை எப்­ப­டிச் சமா­ளித்து வெளியே வரு­கி­றார்­கள் என்­ப­து­தான் படத்­தின் கதை­யாம்.

"இது­வரை பத்து படங்­க­ளுக்கு மேல் இயக்­கி­விட்­டேன். பொழு­து­போக்­குக்­காக படம் எடுத்­தா­லும் ரசி­கர்­க­ளின் மன­தில் எங்­கே­னும் ஓர் ஓரத்­தில் அந்­தப் படம் ஒட்­டிக்­கொள்ள வேண்­டும். படம் பார்ப்­ப­வர்­கள் தங்­கள் கவ­லை­களை மறந்து கொஞ்­சம் சிரிக்க வேண்­டும். அப்­ப­டி­யொரு படத்தை உரு­வாக்க வேண்­டும் என்ற நினைப்­பு­தான் இப்படம் உரு­வா­கக் கார­ணம்.

"இதில் காத­லும் நகைச்­சு­வை­யும் தூக்­க­லாக இருக்­கும். பொது­வாக மனித உணர்­வு­களை விவ­ரிக்­கும்­போ­து­கூட நகைச்­சு­வை­யைத்­தான் நான் துணைக்கு அழைப்­பேன். இப்­போது இருக்­கக்­கூ­டிய 'கொவிட்' நெருக்­க­டி­யில் சர்ச்­சைக்­கு­ரிய, மனதை பாதிக்­கக்­கூ­டிய கதைக்­க­ளங்­க­ளு­டன் உரு­வா­கும் படங்­க­ளைப் பார்க்­கும் மன­நிலை பல­ருக்கு இல்லை.

"இந்­தப் படத்­தின் தலைப்­பைக் கேட்­ட­துமே ஒரு விடு­மு­றைக்­கால உற்­சா­கம் மன­துக்­குள் தோன்­றும். கடை­சி­யாக எந்­தக் காட்­சிக்கு சிரித்­தோம் என்­பது மறந்­து­போ­கும் அள­வுக்­குத் தொடர்ந்து சிரிக்­க­வைக்­கும் கதை இது.

"விடி­யற்­கா­லை­யில் நடை­ப­யிற்­சிக்­காக பூங்கா பக்­கம் செல்­லும்­போது கூட்­ட­மாக நின்று பலர் சிரித்­துக்கொண்­டி­ருக்­கி­றார்­கள். இவ்­வாறு சிரிப்­ப­தும்­கூட பயிற்­சி­யாகிவிட்­டது. அப்­ப­டி­யா­னால் மக்­கள் சிரிப்­பதே அரி­தாகிவிட்­டதா என்று தோன்­றி­யது. அந்த உண்மை உறைத்­த­தும் ஒரு நகைச்­சு­வைக் கதை­யைப் பட­மாக்­க­வேண்­டும் என்ற எண்­ணம் இயல்­பா­கவே மன­தில் தோன்­றி­யது," என்­கி­றார் ராதா­மோ­கன்.

இதில் வைபவ், வாணி போஜன் இணைந்­துள்­ள­னர். மேலும் எம்.எஸ். பாஸ்­கர், கரு­ணா­க­ரன் இரு­வ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

"வைபவ் நாய­க­னாக மட்­டு­மல்ல, நகைச்­சு­வைக் கதாபாத்­தி­ரங்­க­ளுக்கு நன்­றா­கப் பொருந்­து­வார். வெங்­கட்­பி­ர­பு­வின் படங்­களில் வைபவ் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களில் அவர் பளிச்­சென்று தெரி­வார். இந்­தக் கதை­யைக் கேட்­ட­தும் அவர் தாமே தயா­ரிக்க முன்­வந்­தது வச­தி­யாக இருந்­தது.

"வாணி போஜ­னைப் பொறுத்­த­வரை தமிழ் தெரிந்த பெண் என்­ப­தால் பாத்­தி­ரத்தை உணர்ந்து நடிப்­பார். வழக்­கம்­போல் இந்­தப் படத்­தி­லும் எம்.எஸ். பாஸ்­கர் இருக்­கி­றார். அவ­ரி­டம் கதை­யைச் சொல்­லத் துவங்­கும் முன்பே இந்­தப் படத்­தி­லும் ஒரு காட்­சி­யி­லா­வது என்னை அழ­வைத்து விடு­வீர்­களே என்று சிரித்­த­படி கேட்­ட­வ­ரி­டம், அப்­படி நடக்க வாய்ப்பே இல்லை என்று உறு­தி­ய­ளித்­தேன். கரு­ணா­க­ர­னுக்கு அரு­மை­யான கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ளது," என்­கி­றார் ராதா­மோ­கன்.

இந்­தப் படத்­துக்கு பிரேம்ஜி இசை­ய­மைத்­துள்­ளார். பிரேம்ஜி நடிக்­கும்­போ­து­தான் அரட்­டை­ய­டிப்­பாரே தவிர, இசை­ய­மைப்­புப் பணி என்­றால் இவர் எது­கு­றித்­தும் யோசிக்­கா­மல் இசை­யில் மூழ்­கி­விடுவா­ராம்.

"எனது படங்­களில் நகைச்­சு­வை­தான் பின்­பு­ல­மாக இருக்­கும். வாழ்க்­கை­யின் எல்­லாப் பக்­கங்­க­ளி­லும் தொட்­டுப் பார்க்க விரும்­பு­கி­றேன். என் படங்களில் இடம்பெறும் நகைச்சுவையில் ஆபாசம் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். திடீரென என் மனதில் தோன்றும் கனவுகளில் வந்துவிழும் கதைகளைத்தான் படமாக்குகிறேன்," என்கிறார் ராதாமோகன்.