ரகுல்: கிசுகிசு இன்றி நிம்மதி

ரகுல்: கிசுகிசு இன்றி நிம்மதி

3 mins read
2920d144-885d-4e09-90d6-7069d9870dbd
-

தன்­னைப்­பற்றி எழு­தப்­படும் காதல் கிசு­கி­சுக்­கள் பெரு­ம­ள­வில் குறைந்­துள்­ள­தால் தான் இப்­போது பெரும் நிம்­ம­தி­யு­டன் இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார் நடிகை ரகுல் பிரீத் சிங் (படம்).

தமி­ழில் 'தடை­யற தாக்க', 'என்­னமோ ஏதோ', 'தேவ்', 'தீரன் அதி­கா­ரம் ஒன்று' உள்­ளிட்ட படங்­களில் நாய­கி­யாக நடித்­தி­ருந்த ரகுல், இப்­போது கமல்­ஹா­ச­னின் 'இந்­தி­யன் 2', சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'அய­லான்' போன்ற படங்­களில் நடித்து வரு­கி­றார்.

இந்­தி­யி­லும் முன்­னணி நடி­கர்­க­ளின் ஜோடி­யாக நடித்து வரு­ப­வர், தெலுங்­குத் திரை­யு­ல­கி­லும் முன்­னணி நடி­கை­யாக வலம் வரு­கி­றார்.

தமி­ழக திரைச்­செய்தி ஊட­கங்­க­ளுக்கு ரகுல் அளித்­துள்ள பேட்­டி­யில், "கடந்த சில ஆண்­டு­க­ளாக இந்தி, தெலுங்கு நடி­கர்­க­ளு­டன் இணைத்து என்­னைப்­பற்றி பல­த­ரப்­பட்ட காதல் கிசு­கி­சுக்­கள் வெளி­வந்­தன. அவை அனைத்­துமே வதந்­தி­கள் என்­ப­தால் நான் அவற்­றுக்கு எல்­லாம் பதி­லே­தும் சொல்­லா­மல் மௌனம் காத்து வந்­தேன்.

"அதன்­பின்­னர், ஒரு சம­யத்­தில் பர­விய வதந்­தி­கள் எல்­லாம் மாய­மாக மறைந்­து­விட்­டன. இப்­போது என்­னைப் பற்றி எந்த கிசு­கி­சு­வும் வரா­த­தால் நிம்­ம­தி­யாக உணர்­கி­றேன்.

"இது­வரை நான் யாரு­டைய காதல் வலை­யி­லும் விழ­வில்லை. திரு­மண பந்­தத்­தின் மீது உண்­மை­யிே­லயே பெரும் நம்­பிக்கை கொண்­டுள்­ளேன்," என்று கூறி­யுள்ள ரகுல், "எனது கையைப் பிடிக்­கப்­போ­கும் என் வருங்­கால கண­வ­ருக்கு என்று சில தகு­தி­கள் இருக்­க­வேண்­டும் என்று நினைக்­கி­றேன்.

"இந்த விலை­ம­திப்­பற்ற வாழ்க்கைமீது அவ­ருக்கு ஓர் ஆர்­வ­மும் நோக்­க­மும் இருக்­க­வேண்­டும். நிச்­ச­ய மாக, ஆரோக்­கி­ய­ வாழ்க்­கை­மு­றையை அவர் நேசிக்­கவும் ­வேண்­டும்.

"என் திரு­ம­ணத்தை கடற்­க­ரை­யில் நடத்த ஆசை உள்­ளது. இக் கொடிய கொரோனா கால­கட்­டம் போன­பின்­னர்­தான் திரு­ம­ணம் கைகூ­டும்," என்­கி­றார் 30 வயது ரகுல்.

இத­னி­டையே, உடற்­ப­யிற்சி, உடல் ஆரோக்­கி­யம், கூந்­தல் பரா­ம­ரிப்பு குறித்த சில தக­வல்­க­ளை­யும் காெணாளி வழி சமூக ஊட­கங்­களில் அவர் பகிர்ந்து கொண்­டுள்­ளார்.

"குளிக்­கும்­போது தின­மும் தலை குளித்­தால் முடி பாதிக்­கப்­படும் அல்­லது கொட்­டி­வி­டும் என்று பல­ரும் நினைக்­கி­றார்­கள்.

"ஆனால், உண்மை அது­வல்ல. ஒவ்­வொரு நாளும் தலை குளிப்­ப­தால் எந்­தப் பாதிப்­பும் ஏற்­ப­டாது.

"ஒரு முழு முட்டை, வாழைப்­ப­ழத்­தைப் பயன்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­படும் 'ஹேர் மாஸ்க்' நல்ல பலன் தரும். அனைத்து இயற்­கைச் சத்­து­களும் இதில் நிறைந்­துள்­ள­தால் கூந்­தல் வளர்ச்­சிக்கு பெரி­தும் உத­வும் என்­பது என் அம்­மா­வின் அறி­வுரை.

"பிசு­பி­சுப்­பான தலை­முடி அழுக்கை ஈர்க்­கிறது, அது பொடு­குக்­கும் வழி­வ­குக்­கிறது. முடி­யின் வேர்க்­கால்­க­ளைப் பாதித்து முடி உதிர்வு, குறை­வான முடி­வ­ளர்ச்சி உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளுக்­கும் வழி­வ­குக்­கும்.

"எனவே, அதி­க­மாக வியர்க்­கும் கால­கட்­டத்­தில் ஒவ்­வொரு நாளும் தலை­முடிக்கு ஷாம்பு போட்டு குளிப்­பது நல்­லது," என்று ரகுல் காெணாளி­யில் பகிர்ந்து கொண்­டுள்­ளார். அத்­து­டன், முடி வளர்ச்­சிக்கு சத்­தான உணவை உட்­கொள்­வ­தும் முக்­கி­யம் என்­கி­றார்.

இதற்­கி­டையே, கொரோ னாவால் பாதிக்­கப்­பட்­ட­வர் களுக்கு உதவ ரகுல் நிதி திரட்டி வரு­கி­றார்.

இதன்­மூ­லம் கிடைக்­கும் நிதி­யைக் கொண்டு ஆக்­சி­ஜன், உயிர் காக்­கும் உப­க­ர­ணங்­களை வாங்­கவும் அவர் திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­த் தெரி­வித்­துள்­ளார்.

மக்­கள் தங்­க­ளால் முடிந்த உத­வியை உதவி தேவைப்­படுபவர்­க­ளுக்கு தயங்காமல் வழங்­க­வும் அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

கடந்த சில மாதங்­களுக்கு முன்­பு­தான், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, அதி­லி­ருந்து மீண்டு வந்­துள்­ளார் ரகுல்.

கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­படுபவர்­கள், உடல் வலி­மை­யைப் பெருக்­கிக்கொள்ள சத்­தான உண­வு­க­ளைச் சாப்­பி­டு­வது முக்­கி­யம். அதிக கலோ­ரி­கள் உள்ள உண­வைச் சாப்­பி­டு­வ­தைத் தவி­ருங்­கள். நன்கு செரி­மா­ன­மா­காத உண­வு­க­ளைச் சாப்­பிட வேண்­டாம். பால், வறுத்த, உறைந்த உணவு­களைத் தவிர்த்து விடுங்கள்.

நீர்ச்­சத்­துள்ள உண­வு­களை எடுத்­துக்­கொள்­ளுங்­கள். சூடான தேநீர், சூப் வகை­க­ளைச் சாப்­பிட வேண்­டாம் என்று சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் அறி­வு­றுத்தி உள்­ளார் ரகுல் பிரீத் சிங்.