'பேய்கள் என்றால் பயம்'

'பேய்கள் என்றால் பயம்'

3 mins read
f756f43f-7ef4-4616-859b-c1413f5ff714
-

முன்­னணி நாய­கர்­க­ளு­டன் நடிக்­க­வில்லை என்றோ பெரிய இயக்­கு­நர்­கள் அல்­லது படத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளின் படங்­களில் வாய்ப்பு கிடைக்­க­வில்லை என்றோ நிக்கி கல்­ராணி கவ­லைப்­ப­டு­வ­தில்லை.

தன்­னைத் தேடி­வ­ரும் கதை­களும் கதா­பாத்­தி­ரங்­களும் பிடித்­தி­ருந்­தால் ஏற்­றுக் கொள்­கி­றார். நடிக்க ஒப்­புக்­கொண்ட படங்­க­ளுக்­காக அவை வெளி­யீடு காணும்­வரை தம்­மால் முடிந்த அனைத்து வகை­யி­லும் படக்­கு­ழு­வுக்கு ஒத்­து­ழைப்பு தரு­கி­றார் என்று நிக்கி கல்­ரா­ணியை கோடம்­பாக்­கத்­தி­னர் பாராட்­டு­கி­றார்­கள்.

பெரிய விரு­து­களைவிட இத்­த­கைய வார்த்­தை­கள்­தான் தம்மை உற்­சா­கப்­ப­டுத்­து­வ­தாக நெகிழ்­கி­றார் நிக்கி.

அண்­மை­யில் இவ­ரது நடிப்­பில் வெளி­யான 'இடி­யட்' திரைப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு இணை­யத்­தில் வெளி­யாகி நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் பேர் இதைப் பார்த்­தி­ருப்­ப­தாக வெளி­யான தக­வல் நிக்­கியை இரு­ம­டங்கு மகிழ்ச்சி அடைய வைத்­துள்­ளது.

இந்­தப் படத்­தில் அழ­கான பேய், காதல் தேவதை என இரு­வி­தத் தோற்­றங்­களில் அசத்­து­வா­ராம்.

"நகைச்­சு­வை­யும் திகி­லும் கலந்த பட­மாக 'இடி­யட்' உரு­வாகி உள்­ளது. கொரோனா நெருக்­கடி காலத்­தில் மக்­கள் எந்­நே­ர­மும் கவ­லை­யு­ட­னும் பயத்­து­ட­னும் இருக்­கி­றார்­கள்.

"அப்­ப­டிப்­பட்ட உணர்­வு­கள் எல்­லாம் இந்­தப் படத்­தைப் பார்க்­கும்­போது மறைந்து­ போ­கும். இரண்டு மணி நேரம் வாய் விட்­டுச் சிரிக்­க­வும் ஒவ்­வொரு காட்­சி­யை­யும் ரசிக்­க­வும் முடி­யும்," என்று உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார் நிக்கி.

'மர­கத நாண­யம்' படத்­தில் இவர் ஆண் குர­லில் பேசு­வ­து­போல் சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­தப் படத்­தி­லும் அப்­ப­டிப்­பட்ட காட்­சி­கள் உள்­ள­ன­வாம்.

"மிர்ச்சி சிவாவை வெறுப்­பேற்றி பய­மு­றுத்­து­வ­து­போல் சில காட்­சி­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன," என்று சொல்லி சிரிக்­கும் நிக்கி கல்­ராணி, இப்­போது சென்­னை­யி­லேயே குடி­யேறி விட்­டா­ராம். தமிழ்­நாட்டு மக்­களை தமக்கு ரொம்­பப் பிடிக்­கும் என்­கி­றார்.

"தமிழ் மக்­கள் என்­னைத் தங்­கள் வீட்­டுப்­பெண்­ணாக ஏற்­றுக்­கொண்டு கொண்­டா­டு­கி­றார்­கள். இந்த அன்பு தனித்­து­வ­மா­னது. அத­னால் நானும் மன­தார சென்­னைப் பெண்­ணாகிவிட்­டேன்.

"சென்­னை­யில் உள்ள ஒவ்­வொரு நொடி­யும் நான் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றேன்," என்று சொல்­லும் நிக்கி, ஊர­டங்­கின்­போது அனை­வ­ரும் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும் என அறி­வு­றுத்­து­கி­றார்.

சென்­னை­யில் இரண்டு செல்­லப் பிரா­ணி­களை வளர்க்­கி­றா­ராம். அதே­போல் அவ­ரது பெங்­க­ளூரு வீட்­டி­லும் நான்கு நாய்க்­குட்­டி­களை வளர்க்­கி­றார். கடந்த சில நாட்­க­ளாக இந்த செல்­லப் பிரா­ணி­க­ளு­டன் விளை­யா­டித்­தான் பொழு­தைப் போக்­கு­கி­றார்.

"என்­னைப் பொறுத்­த­வரை சும்மா உட்­கார்ந்­தி­ருப்­பது பிடிக்­காது. நான் இருக்­கும் இடத்­தின் சூழ்­நி­லை­யும் என்­னைச் சுற்றி இருப்­ப­வர்­களும் கல­க­லப்­பாக இருக்­க­வேண்­டும் என விரும்­பு­வேன். ஏதா­வது பேசி அனை­வ­ரை­யும் சிரிக்க வைப்­பது என் வழக்­கம். எந்த விஷ­ய­ மாக இருந்­தா­லும் யாராக இருந்­தா­லும் மன­தில் வைத்­துக்கொள்­ளா­மல் நேருக்கு நேர் பேசி­வி­டு­வேன். என்­னு­டைய இந்­தப் போக்கு பல­ருக்­குப் பிடிப்­ப­தில்லை. அது­கு­றித்து நான் கவ­லைப்­ப­டு­வ­தும் இல்லை.

"அம்மா செய்­யும் பிரி­யாணி ரொம்­பப் பிடிக்­கும். ஊர­டங்­கின்­போது அவர் பல­வி­த­மான பிரி­யா­ணி­க­ளைச் செய்து தரு­கி­றார்.

"எனக்­குப் பிடித்­த­மான கிரிக்­கெட் வீரர் சச்­சின் டெண்­டுல்­கர். அவர்

கள­மி­றங்கி விளை­யா­டு­வதை நேரில் பார்த்து கைதட்டி ரசிக்­க­வேண்­டும் என்­பது எனது நீண்­ட­நாள் ஆசை. ஆனால், அது நிறை­வே­று­வற்­குள் சச்­சின் விளை­யாட்­டி­லி­ருந்து ஓய்வு பெற்­று­விட்­டார்," என்று சொல்­லும் நிக்கி கல்­ரா­ணிக்கு, நிஜத்­தில் பேய்­கள் என்­றால் ரொம்­பப் பய­மாம்.

பேய்ப் ­ப­டங்­கள் எதை­யும் பார்க்க மாட்­டா­ராம். ஒரு­வேளை நிஜ­மா­கவே தன் கண் முன்­னால் ஒரு பேய் வந்து நின்­றால் ஓடிச்­சென்று தன் தாய்க்­குப் பின்­னால் ஒளிந்­து­கொள்­வேன் என்று சொல்­லும்­போதே முகத்­தில் பயம் தெரி­கிறது.