'அன்பு நெகிழ வைக்கிறது'

'அன்பு நெகிழ வைக்கிறது'

3 mins read
0e3e4585-8421-4dc5-8636-68550433be9b
-

'கட்­டில்' படத்­தில் கூட்­டுக் குடும்­பத்­தைச் சேர்ந்த மரு­ம­க­ளாக கன­மான பாத்­தி­ரத்­தில் நடுத்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் சிருஷ்டி டாங்கே.

இதில் கர்ப்­பி­ணி­யா­க­வும் சில காட்­சி­களில் தோன்­று­வா­ராம். அந்­தக் காட்­சி­களில் நடித்­த­போ­து­தான் இந்­தி­யக் கலா­சா­ரம் எவ்­வ­ளவு தனித்­து­வ­மான சிறப்பு வாய்ந்­தது என்­ப­தைத் தாம் அறிந்து கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"கொரோனா பெருந்­தொற்று காலத்­தில் கர்ப்­பி­ணி­களை நாம் கவ­ன­மாகப் பார்த்­துக்­கொள்ள வேண்­டும். குடும்­பத்­தில் உள்ள அனை­வ­ருக்­கும் இந்­தப் பொறுப்பு உள்­ளது.

"இன்­னொர் உயி­ரைத் தாங்­கிக்கொண்­டி­ருக்­கும் அவர்­க­ளுக்கு மன அழுத்­தம் ஏற்­ப­டா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும். கர்ப்­பி­ணிப் பெண்­க­ளைக் கொண்­டாட வேண்­டும்," என்­கி­றார் சிருஷ்டி டாங்கே.

இந்­தப் படம் தமது திரைப்­ப­ய­ணத்­தில் முக்­கி­ய­மா­னது என்று குறிப்­பி­டு­ப­வர், கூட்­டுக் குடும்­பங்­களில் மரு­ம­க­ளின் பங்கு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதை இப்­ப­டம் மிக அழ­காக விவ­ரிக்­கும் என்­கி­றார்.

சிருஷ்டி டாங்கே நடிக்க வந்து 10 ஆண்­டு­க­ளா­கி­விட்­டன. எனி­னும் கடந்த ஆறு ஆண்­டு­க­ளா­கத்­தான் சினி­மா­வில் கவ­னம் செலுத்தி வரு­கி­றா­ராம்.

"நான் முத­லில் 'காத­லாகி' படத்­தில்­தான் அறி­மு­க­மா­னேன். அதன்­பி­றகு 'யுத்­தம் செய்' படத்­தில் நடித்து முடித்­தேன். ஆனால் அந்­தச் சம­யத்­தில் பட்­டப்­ப­டிப்பை முடிக்­க­வேண்டி இருந்­த­தால் மூன்று ஆண்­டு­கள் சினி­மாவை மறந்து படிப்­பில் கவ­னம் செலுத்­தி­னேன்.

"அதன்­பி­றகு பத்­தி­ரி­கைத் துறை­யில் முது­கலை டிப்­ளாமா படிக்க ஓராண்டு தேவைப்­பட்­டது. இப்­படி நான்கு ஆண்­டு­கள் முடிந்த பிறகே எனக்­குப் பிடித்­த­மான நல்ல கதை­க­ளா­கத் தேர்வு செய்து நின்று, நிதா­ன­மாக நடித்து வரு­கி­றேன்," என்­கி­றார் சிருஷ்டி டாங்கே.

மும்­பை­யைச் சேர்ந்­த­வர் என்­றா­லும் தம்மை தென்­னிந்­தி­யப் பெண்­ணா­கவே ரசி­கர்­கள் கருது­வ­தா­கச் சொல்­கி­றார். தமிழ் ரசி­கர்­க­ளின் அன்பு தம்மை நெகிழ வைப்­ப­தா­க­வும் கூறு­கி­றார்.

"தென்­னிந்­திய சினி­மா­வில் எனது பய­ணம் பல நல்ல விஷ­யங்­களைக் கற்­றுக் கொடுத்­தி­ருக்­கிறது. லட்­சக்­க­ணக்­கான ரசி­கர்­கள் கிடைத்­தி­ருக்­கி­றார்­கள். எனது நலம் விரும்­பும் நூற்­றுக்­கும் அதி­க­மான கலை­ஞர்­கள் கோலி­வுட்­டில் நண்­பர்­க­ளாக வாய்த்­துள்­ள­னர்," என்று சொல்­லும் சிருஷ்டி, 'மேகா' படத்­தில் இடம்­பெற்ற 'புத்­தம்­புது காலை' பாடல்­தான் தம்மை ரசி­கர்­க­ளு­டன் நெருக்­க­ம­டைய வைத்­த­தா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

படப்­பி­டிப்­பின்­போது அந்­தப் பாடலை முதன்­மு­றை­யா­கக் கேட்ட அந்த நொடி முதலே தாம் இளை­ய­ரா­ஜா­வின் தீவிர ரசி­கை­யாகிவிட்­ட­தாகச் சொல்­கி­றார்.

"இளை­ய­ராஜா என்­ப­வர் என்­னைப் பொருத்­த­வரை ஓர் இசைக்­க­ட­வுள். ஏரா­ள­மா­னோர் அந்­தப் பாடலை வைத்­து­தான் என்னை அடை­யா­ளம் காண்­கி­றார்­கள். 'கட்­டில்' படப்­பி­டிப்­பின்­போது ஒரு­நாள் ஒப்­ப­னை­யு­டன் நான் தங்­கி­ இருந்த தங்கு விடு­திக்­கு காரில் திரும்­பிக்­கொண்­டி­ருந்­தேன்.

"வழி­யில் காரை நிறுத்­திய காவல்­துறை ஆய்­வா­ளர் ஒரு­வர் முன் இருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்த உத­வி­யா­ள­ரி­டம் விசா­ரணை நடத்­தி­னார். என்­னைக் கைகாட்டி, 'அவர் சினிமா நடிகை' என்று உத­வி­யா­ளர் சொல்ல, 'பெய­ரைச் சொல்­லுப்பா' என்­றார் அந்த அதி­காரி.

"ஆனால் என் பெய­ரைச் சொன்ன பிற­கும் அவ­ருக்­குத் தெரி­வில்லை. உடனே என் உதவி­யா­ளர் 'புத்­தம்­புது காலை' பாட­லின் இரண்டு வரி­யைப் பாடி­ய­தும், 'தம்பி அந்­தக் கல்­யாண மண்­டபக் காட்­சி­யில் நட­ன­மா­டும் பெண்ணை நாய­கன் வளைத்து வளைத்­துப் புகைப்­ப­டம் எடுப்­பாரே அந்­தப் பெண்ணா' என்று ஆர்­வத்­து­டன் கேட்­டபடி மீண்­டும் காருக்­குள் பார்க்க, சட்­டென என்னை அடை­யா­ளம் கண்­டு­கொண்டு, 'ஓ நீங்­கள்­தானா, வாழ்த்­து­கள் மேடம்' என்று சொல்லி வழி­ய­னுப்­பி­னார்.

"இந்த மரி­யாதை கிடைக்க கார­ணம் 'மேகா' படத்­தின் இயக்­கு­நர் கார்த்தி ரிஷி­யும் ஒளிப்­பதி­வா­ளர் குரு­தே­வும்.... மிக முக்­கி­ய­மாக அந்த இசைக் கட­வு­ளும்­தான்," என்­கி­றார் சிருஷ்டி.

தம்மை மும்­பைப் பெண் என்று உண்­மை­யைச் சொன்­னா­லும் சென்னை மக்­கள் யாரும் நம்ப மறுக்­கி­றார்­க­ளாம். 'நீங்­கள் தமிழ்ப் பெண்­தான். பொய் சொல்­லா­தீர்­கள்' என்­று­கூட சிலர் கூறு­வ­தாக ஆச்­ச­ரி­யத்­து­டன் விவ­ரிக்­கி­றார்.

"இங்கே என்னை மறக்க யாரும் விரும்­ப­வில்லை. தங்­கள் வீட்­டுப் பெண்­ணைப் போல் என்னை நினைக்­கி­றார்­கள். இந்த அன்பு என்னை நெகிழ வைக்­கிறது," என்­கி­றார் சிருஷ்டி.

, :   

சிருஷ்டி டாங்கே