மாதேஷ் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'சண்டக்காரி' படம். ஸ்ரேயா நாயகியாக நடிக்கிறார்.
தமிழில் அறவே வாய்ப்பு இல்லாத நிலையில் இந்தப் படம் மீண்டும் தனக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறாராம் ஸ்ரேயா.
இந்நிலையில் நேரம் தவறாமை, முழு அர்ப்பணிப்புடன் நடிப்பது என்று ஸ்ரேயா பல வகையிலும் ஒத்துழைத்ததாகப் பாராட்டுகிறார் மாதேஷ்.
"என் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்பதால்தான் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்ய நினத்தேன். பெரிய நடிகை என்பதால் பந்தா செய்வாரோ என்று உள்ளுக்குள் ஒருவிதத் தயக்கம் இருந்தது.
"ஆனால், ஒருசில மும்பை நடிகைகளைப் போல் தமக்குப் பாதுகாப்புப் படை வேண்டும், அதிக சம்பளம் தரவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதுமட்டுமல்ல, குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதுடன் எந்த வகையிலும் இடையூறாக இருக்க மாட்டார். மேலும் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் மற்றவர்கள் நடிப்பதை முடிந்தவரை பார்த்துக் கொண்டு இருப்பார். இந்த அர்ப்பணிப்புதான் அவர் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படக் காரணம்," என்கிறார் மாதேஷ்.
இவர் 'மதுர', 'மோகினி', 'மிரட்டல்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

