சம்யுக்தா: தமிழிலும் சாதிப்பேன்

3 mins read

மலை­யா­ளத்­தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கி­விட்ட மன­நி­றைவு இருந்­தா­லும் தமி­ழில் சாதிக்­க­வேண்­டும் என்று விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் சம்­யுக்தா மேனன்.

'களரி' படத்­தில் நாய­கன் கிருஷ்­ணா­வின் பாச­மிகு தங்­கை­யாக அறி­மு­க­மா­னார் சம்­யுக்தா. அதை­ய­டுத்து வெளி­யான 'ஜூலைக் காற்­றில்' படத்­தில் இவ­ரது பாங்­கான நடிப்பு பல­ரை­யும் கவ­னிக்க வைத்­தது.

பிறகு மலை­யா­ளக் கரை­யோ­ரம் ஒதுங்­கி­ய­வருக்கு அங்கு அடுத்­த­டுத்து பல வாய்ப்­பு­கள் அமைந்­தன. பிறகு கன்­னட மொழி­யி­லும் முத்­திரை பதித்­த­வர் நீண்ட இடை­வெ­ளிக்­குப்­பி­றகு மீண்­டும் தமி­ழுக்கு வரப் போகி­றா­ராம்.

இரண்டு முன்­னணி இயக்­கு­நர்­க­ளி­டம் கதை கேட்­டி­ருப்­ப­தா­க­வும் விரை­வில் அந்­தப் படங்­கள் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பு­கள் வெளி­யா­கும் என்­கி­றார். தமிழிலும் சாதிப்பேன் என்று சொல்லும் சம்யுக்தா கிரா­மப்­பு­றத்­தில் பிறந்தவர்.

சிறு­வ­யது முதலே சினிமா மீது ஆர்­வம் அதி­கமாம். இதே­போல் ஆன்­மி­கத்­தி­லும் மிகுந்த ஈடு­பாடு உண்டு. சினிமா மீதான ஆசை­யால் கிரா­மத்­தி­லி­ருந்து ரயி­லேறி நகர்ப்­பு­றத்­துக்கு வந்­துள்­ளார்.

"சினி­மா­வில் அறி­மு­க­மா­ன­போது ஒப்­பனை, உடை­ய­லங்­கா­ரம் குறித்து எது­வும் தெரி­யாது. படப்­பி­டிப்பு துவங்கி இரண்­டா­வது நாளே நமது உடல் சரு­மம் சுற்றி கறுப்பா­கி­வி­டும். வெளி­யில் நிற்­கும்­போ­தும் படப்­பி­டிப்­பில் பயன்­ப­டுத்­தும் விளக்கு­க­ளின் முன்பு நிற்­கும்­போ­தும் எது­போன்ற முகப்­பூச்­சு­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தும் தெரி­யாது. அதன்­பி­றகு ஒவ்­வொன்­றை­யும் படிப்­ப­டி­யா­கத் தெரிந்­து­கொண்டு இன்று ஓர­ளவு நிலைத்து நிற்­ப­தா­கக் கரு­து­கி­றேன்," என்று சொல்­லும் சமந்­தா­வுக்கு கைத்­தறி ஆடை­கள்­தான் விருப்­ப­மா­ன­வை­யாம்.

மலை­யா­ளத்­தில் இவர் நடித்த 'தீவண்டி' படம் பெரிய அள­வில் பேசப்­பட்­டது. பி­ற­கு­தான் சம்­யுக்­தாவை பிற மொழி­க­ளி­ல் நடிக்க அழைத்­துள்­ள­னர். சிறு வயது முதல் தன்னை அன்­பு­டன் வளர்த்த தாத்­தா­தான் தனது வளர்ச்­சிக்­குக் கார­ணம் என்று நெகிழ்­கி­றார் சம்­யுக்தா. கடைசி காலத்­தில் அவரை தாம் ஒரு குழந்­தை­யைப் போல் கவ­னித்­துக் கொண்­ட­தா­க­வும் சொல்­கி­றார்.

"சிறு­வ­ய­தில் எனக்கு சோறூட்­டு­வ­தில் தொடங்கி அனைத்­தை­யும் தாத்­தா­தான் அன்­பு­டன் செய்­வார். அன்­பைத் தவிர வேறு எதை­யும் அவ­ரி­டம் நான் கண்­ட­தில்லை. ஆனால் 2018ஆம் ஆண்டு அவர் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்டு படுத்த படுக்­கை­யாகி விட்­டார். சிறு­வ­ய­தில் அவர் என்­னைக் கவ­னித்­துக்கொண்­ட­து­போல் நான் அவ­ரைக் கவ­னித்­துக்கொள்­ளும் பாக்­கி­யம் கிடைத்­தது.

"அந்­தச் சம­யத்­தில் சென்­னை­யில் இருந்து ஓர் அழைப்பு வந்­தது. புதுப்­ப­டத்­தில் நடிப்­ப­தற்­கான நடிப்­புத் தேர்வு நடப்­ப­தா­க­வும் அதில் பங்­கேற்க வரு­மா­றும் அழைத்­த­னர். விமா­னம் ஏறி காலை­யில் சென்­னைக்­குச் சென்று வேலையை முடித்து­விட்டு மாலைக்­குள் ஊர் திரும்பி விட­லாம் என்று கணக்­கிட்­டுச் சென்னை சென்­றேன்.

"காலை­யில் தாத்­தா­வின் உட­லைச் சுடு­நீ­ரில் துடைத்­து­விட்டு, உணவு தயார் செய்து வைத்து, அவ­ரி­டம் விடை­பெற்­றுச் சென்­றேன். சென்­னை­யில் வேலை முடிந்து கிளம்­பி­ய­போது ஊரி­லி­ருந்து அம்­மா­வின் தொலை­பேசி அழைத்­தது. அவ­ரது குரல் கர­க­ரத்­தது. தாத்­தா­வின் உடல்­நிலை திடீ­ரென மிக­வும் மோச­மா­கி­விட்­ட­தா­கச் சொன்­னார்.

"மன­தைத் திடப்­ப­டுத்­திக்­கொண்டு ஊர் திரும்­பி­னேன். ஆனால், நான் சென்­னை­யி­லி­ருந்து கிளம்­பும் முன்பே தாத்தா இறந்­து­விட்­டார். அம்­மா­தான் அதைச் சொல்­ல­வில்லை. கடைசி நேரத்­தில் தாத்­தா­வு­டன் ஏதும் பேச­மு­டி­ய­வில்லை என்ற வருத்­தம் காலத்­துக்­கும் என் மன­தில் தேங்கி நிற்­கும்," என்­கி­றார் சம்­யுக்தா மேனன்.

தாத்­தா­வின் ஆசிர்­வா­தத்­து­டன் தம்­மால் திரை­யு­ல­கில் சாதிக்­க­மு­டி­யும் என்று நம்­பு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வ­ருக்கு ஆன்­மிக யாத்­தி­ரை­கள், விடு­மு­றைப் பய­ணங்­கள் ஆகி­ய­வற்­றில் ஆர்­வம் அதி­க­மாம்.

தமது 10 வய­தில் பள்­ளிக்­கூ­டத்­தில் சுற்­றுலா பய­ண­மாக ஜம்மு காஷ்­மீருக்கு சென்று வந்­தது இன்­னும் பசு­மை­யாக நினை­வில் உள்­ளது என்­கி­றார். அப்­போது தனது பழைய கைபே­சியை கொடுத்­தா­ராம் இவ­ரது தாத்தா.

"பயப்­ப­டா­மல் சென்று வா. உன்­னு­டன் கைபேசி வடி­வில் நான் இருப்­பேன் என்று தைரி­யம் அளித்­தார். அதன்­பி­றகு நிறைய பய­ணங்­கள் சென்­றி­ருக்­கி­றேன். வெளி­நாடு­க­ளுக்­குச் செல்­வ­தும் அங்கே சுற்­றித் திரி­வ­தும் எனக்­குப் பிடித்­த­மான ஒன்று.

"பல நாடு­கள் சென்று வந்த போதி­லும் பிடித்த இடம் என்­றால் என் தாய்­நாடு இந்­தி­யா­தான். இங்­குள்ள கலா­சா­ர­மும் உணவு முறை­யும் கொட்­டிக் கிடக்­கும் இயற்­கை­யின் அழ­கும்­தான் இதற்­குக் கார­ணம்," என்று சொல்­லும் சம்­யுக்தா ஊர­டங்கு கார­ண­மாக கடந்த ஓராண்­டாக எங்­கும் பய­ணம் மேற்­கொள்ள முடி­ய­வில்லை என வருந்­து­கி­றார்.

ஐஸ்­லாந்து செல்­ல­வேண்­டும், நல்ல மழைக்­கா­லத்­தில் சீறிப்­பாய்ந்து வரும் அதி­ரப்­பள்ளி அரு­வியை நேரில் ரசிக்க வேண்­டும் என்­ப­தெல்­லாம் சம்­யுக்­தா­வின் ஆசை­களில் சில.