மணிரத்னம் ஒன்பது இயக்குநர்களை வைத்து ஒன்பது குறும்படங்களை 'நவரசா' எனும் தலைப்பில் இணையத்தொடர் ஒன்றைத் தயாரித்திருக்கிறார். அந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. அதில் சூர்யா நடித்திருக்கும் ஒரு குறும்படமும் உள்ளது.
அதனால் அவரின் ரசிகர்கள்
ஆவலுடன் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் சென்ற ஊரடங்கின்போது 'புத்தம் புது காலை', 'பாவக்கதைகள்', 'குட்டி ஸ்டோரி' உள்ளிட்ட 'ஆந்தாலஜி' திரைப்
படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதனால் பல இயக்குநர்கள் 'ஆந்தாலஜி' திரைப்படம் எடுப்
பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் தயாரிப்பாளராக 'ஆந்தாலஜி' படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.
கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கே.வி. ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கி உள்ளனர்.
இந்த ஒன்பது கதைகளில் சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், நித்யா மேனன், ரோபோ சங்கர், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அழகம் பெருமாள், ரித்விகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' வெற்றிப்படங்களைத் தந்த கௌதமும் சூர்யாவும் மூன்றாவது முறையாக 'நவரசா'வில் இணைந்திருக்கின்றனர்.
இவர்களின் தொடருக்கு
'கமலும் கதாம்பரியும்' என பெயரிடப்பட்டுள்ளது. கெளதம் வாசுதேவ் இதற்கு முன்பு ஒரு சில 'ஆந்தாலஜி' படங்களை இயக்கி இருந்தாலும் சூர்யாவிற்கு இதுதான் முதன்முறை.
இந்நிலையில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் 'நவரசா' இணையத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையத்தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து இருக்கின்றனர்.
சூர்யா, கௌதம் இணைந்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் இந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்ற ஆவலில் காத்திருக்கின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.
இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் சூர்யாவின் 40வது படத்தை இப்போது இயக்கி வருகிறார்.
அந்தப் படத்தைப் பற்றி அவர் கூறுகையில், "கார்த்தி நடித்
திருந்த 'கடைக்குட்டி சிங்கம்' எப்படி அவருடைய ரசிகர்களுக்கு சிறப்பான படமாக அமைந்ததோ அதுபோல் இந்தப் படம் சூர்யா ரசிகர்களுக்கு அமையும்.
"அதுமட்டுமல்லாமல் படத்தின் தலைப்பு, காட்சிகள் ஆகியவற்றில் சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறேன். இதன் மூலம் சூர்யா ரசிகர்களுக்கு சிறப்பான படத்தைக் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
"அண்மைக் காலமாக சூர்யா கிராமத்து வேடங்களில் அதிரடி காட்டி வரும் நிலையில், இந்த படமும் ஒரு வித்தியாசமான சூர்யாவை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டும்," என்று அவர் கூறினார்.
இந்தப் படத்தில் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு என பலரும் நடிக்கிறார்கள்.
சூர்யா நடிக்கும் இந்தப் படத்திற்கு முதன்முறையாக டி.இமான் இசையமைக்கிறார்.

