'உதவி செய்வது நம் கடமை'

'உதவி செய்வது நம் கடமை'

3 mins read
3aeefe04-b564-4205-a57a-3d381eed206b
நிதி அகர்வால் -

கொரோனா கால­கட்­டத்­தில் வாழ்­வா­தா­ரங்­களை இழந்து தவிப்­ப­வர்­க­ளுக்­கும் மருத்­துவ உதவி தேவைப்­ப­டு­கி­ற­வர்­க­ளுக்­கும் உத­விக்­க­ரம் நீட்­டும் வகை­யில் புதிய இணை­ய­த­ளம் ஒன்­றைத் தொடங்கி உள்­ளார் இளம் நாயகி நிதி அகர்­வால்.

இதன் மூலம் தன்­னால் இயன்ற அளவு ஏழை­களுக்கு உதவி செய்ய திட்­ட­மிட்­டுள்­ளார். அவ­ரது இந்த நல்ல முயற்­சி­யில் பல தன்­னார்­வ­லர்­களும் சமூக சேவை­யாற்­றும் அமைப்­பு­களும் இணைந்­தி­ருப்­ப­தால் கூடு­தல் பலம் கிடைத்­தி­ருப்­ப­தாக உணர்­கி­றா­ராம்.

"கொரோனா முதல் அலை­யை­விட இரண்­டா­வது அலை ஆபத்­தா­னது. பல வகை­யி­லும் மனி­த­வாழ்க்­கை­யில் சேதங்­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. எனக்கு நெருக்­க­மான குடும்ப உறுப்­பி­னர்­களும் நண்­பர்­களும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட பிறகே அதன் தீவி­ரம் எனக்­குப் புரிந்­தது.

"கடந்த இரண்டு மாதங்­களில் மட்­டும் எனக்­குத் தெரிந்த பலர் கிரு­மித்­தொற்­றால் முடங்­கிப் போயி­னர். யாரை­யும் அரு­கில் இருந்து கவ­னித்­துக்­கொள்­ளவோ, உதவி செய்­யவோ இய­ல­வில்லை. அத­னால் கடும் மன அழுத்­தம் ஏற்­பட்­டது.

"மருத்­து­வ­ம­னை­யில் படுக்­கை­க­ளுக்­கா­க­வும் உயிர்­வாயு, மருந்­து­க­ளுக்­கா­க­வும் பல­ரைத் தொடர்பு­கொள்ள வேண்டி இருந்­தது.

"இது தொடர்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் ஏரா­ள­மான பதி­வு­க­ளைக் காண்­கி­றேன். அவற்­றுள் எவை நம்­ப­க­மா­னவை என்­பது தெரி­ய­வில்லை. ஓர­ளவு வசதி படைத்த நமக்கே மிகக் கடி­ன­மான சூழ­லாக இருக்­கும்­போது அன்­றாட உண­வுக்கே அல்­லா­டும் ஏழை மக்­க­ளின் நிலை­மையை யோசித்­துப் பாருங்­கள். அவர்­க­ளுக்­கெல்­லாம் நாம்­தானே உத­வ­வேண்­டும்," என்று கேட்­கி­றார் நிதி அகர்­வால்.

எனி­னும் இந்­தக் கேள்­வி­யோடு நிறுத்­திக்­கொள்­ளா­மல் இணை­ய­த­ளம் தொடங்­கும் வரை அவர் சென்­ற­தற்கு பல­ரும் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.

சென்னை, ஹைத­ரா­பாத்­தில் தனக்­கென இரு குழுக்­களை அமைத்­துள்­ளார் நிதி. கார­ணம், தமி­ழி­லும் தெலுங்­கி­லும்­தான் தற்­போது திரைப்­ப­டங்­களில் நடித்து வரு­கி­றார்.

அத­னால் இரு நக­ரங்­க­ளி­லும் தமக்­குத் தெரிந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­கம் என்­கி­றார்.

"எதற்­காக இணை­ய­த­ளம் தொடங்­க­வேண்­டும் என்று சிலர் கேட்­கி­றார்­கள். சமூக வலைத்­த­ளங்­களில் இடம்­பெ­றும் அனைத்­தை­யும் அதில் தீவி­ர­மா­கச் செயல்­படும் அனை­வ­ரை­யும் நம்­பி­விட இய­லாது.

"இணை­ய­த­ளம் என்று வரும்­போது அதன்­மூ­லம் நம்­மைத் தொடர்பு கொள்­ப­வர் பல விவ­ரங்­க­ளைத் தெரி­விக்க வேண்டி இருக்­கும். ஒரு­வர் மீது அதிக நம்­ப­கத்­தன்மை ஏற்­படும். தவிர, பல விஷ­யங்­க­ளைச் சரி­யா­கத் திட்­ட­மி­ட­வும் இணை­ய­த­ளம் உத­வி­க­ர­மாக இருக்­கும்," என்­கி­றார் நிதி.

பல இளை­ஞர்­கள், தக­வல் தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள் இவ­ரு­டன் இணைந்­துள்­ள­னர். சமூக சேவை­யாற்­றும் அமைப்­பு­களும் இணைந்­த­பி­றகு நாடு முழு­வ­தும் உள்ள ஏழை­க­ளுக்கு உதவ முடி­கி­ற­தாம்.

"தற்­போது எனது சக்­திக்கு உட்­பட்ட அள­வில் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்கி ஏழை­க­ளுக்­கும் ஆத­ர­வற்­ற­வர்­க­ளுக்­கும் உதவி வரு­கி­றேன். சேவை மனப்­பான்மை உள்ள யார் வேண்­டு­மா­னா­லும் எங்­க­ளு­டன் இணை­ய­லாம்.

"மிக விரை­வில் நாடு முழு­வ­தும் உயிர்­வாயு, மருந்­து­களை தேவைப்­படு­பவர்­க­ளுக்கு ஏற்­பாடு செய்ய இருக்­கி­றோம்.

"'கொவிட் -19' தாக்­கம் மிக விரை­வில் முடி­வுக்கு வரும் என நம்­பு­கி­றேன். ஆனால், அதன் பிற­கும் எங்­க­ளு­டைய இணை­ய­த­ள­மும் சேவை­களும் தொட­ரும். இது எனக்கு மிகுந்த மன­நி­றை­வைத் தரு­கிறது," என்­கி­றார் நிதி அகர்­வால்.

இளை­யர்­களும் வசதி படைத்­த­வர்­களும் தங்­க­ளால் இயன்ற சேவையை ஆற்ற வேண்­டும் என்­றும் வேண்­டு­கோள் விடுக்­கி­றார்.

ஊர­டங்­குக்­குப் பிற­கு­தான் படப்­பிடிப்பு­கள் மீண்­டும் தொடங்­கும் என்­ப­தால் ஓய்வு நேரத்­தில் இவ்­வாறு சேவை­யாற்­று­வ­தைத் தவிர சமை­ய­லி­லும் திரைப்­ப­டங்­க­ளைப் பார்ப்­ப­தி­லும் பொழு­தைப் போக்­கு­கி­றா­ராம்.

தற்­போது தமி­ழில் உத­ய­நி­தி­யு­ட­னும் தெலுங்­கில் பவன் கல்­யா­ணு­ட­னும் இரண்டு படங்­களில் நடித்து வரும் நிதி அகர்­வால், தமி­ழில் சர­ள­மா­கப் பேச­வும் பயிற்சி மேற்­கொண்­டுள்­ளார்.

"தின­மும் நட­னத்­துக்­கென கணி­ச­மான நேரத்தை ஒதுக்­கு­கி­றேன். நட­னம் எனக்­குப் பிடித்­த­மான விஷ­யம்.

"அதன்­மூ­லம் மனதை ஒரு­மு­கப்­ப­டுத்த முடி­கிறது. இத­னால் எதி­லும் திட்­ட­மிட்­டும் கச்­சி­த­மா­க­வும் செயல்­பட முடி­கிறது. விரை­வில் இயல்பு வாழ்க்கை திரும்­பும் என நம்­பு­கி­றேன். பொது­மக்­கள் அரசு மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் வெற்­றி­பெற உதவ வேண்­டும்," என்­கி­றார் நிதி அகர்­வால்.