'மேயாத மான்', 'ஆடை' படங்களை இயக்கியவர் ரத்ன குமார். இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.
இதுபற்றி டுவிட்டரில், "15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம்.
"அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவ
மனைக்குச் சென்று தேறினர். சிலர் வீட்டிலிருந்தே உடல் தேறினர். ஒருவருக்கு கொரோனா என்றதும் முதலில் எளிதாக எடுத்துக்கொண்டோம். பின்னர் ஒவ்வொருவராக பாதிக்கப்பட்டபோது அதிக மன உளைச்சலுக்கு ஆளானோம். அந்த அபாய நிலையைக் கடந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறது வீடு,'' எனப் பதிவிட்டுள்ளார்.

