'நண்பர்களுக்காக வாழ்பவர் விஜய்'

'நண்பர்களுக்காக வாழ்பவர் விஜய்'

3 mins read
19c426b3-bbec-4868-876e-decd9b212e70
-

உலக சுற்­றுச்­சூ­ழல் தினத்­தை­யொட்டி காடு, மலை­களில் சுற்­றித்­தி­ரிந்து அங்கு எடுத்த பல படங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்டு இருக்­கி­றார் மாள­விகா மோக­னன். அத்­து­டன் நடி­கர் விஜய் நண்­பர்­க­ளுக்­காக வாழ்பவர் என்று குறிப்­பிட்டு அவ­ரு­டன் தனக்­கி­ருக்­கும் நட்­பைப் பற்றி விளக்­கி­

யி­ருக்­கி­றார். மேலும் ஊர­டங்­கின்­போது சமை­யல் கற்­றுக் கொண்­ட­தா­க­வும் பதி­விட்டு இருக்­கி­றார் மாள­விகா.

மலை­யா­ளத்­தில் வெளி­யான 'பட்­டம் போலே' மலை­யா­ளப் படத்­தின் மூலம் திரைத்­து­றைக்கு அறி­மு­க­மா­னார் நடிகை மாள­விகா மோக­னன். அந்­தப் படத்­தில் துல்­கர் சல்­மா­னுக்கு ஜோடி­யாக நடித்­தி­ருந்­தார்.

அதைத் தொடர்ந்து கன்­ன­டம், இந்தி என அடுத்­த­டுத்து அறி­மு­கத்தை கொடுத்து பிர­ப­ல­மாகி வந்த மாள­விகா மோக­னன் தமி­ழில் கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில் 'பேட்டை' படத்­தில் நடித்­தார். அந்­தப் படத்தில் சசி­கு­மா­ருக்கு ஜோடி­யாக நடித்­தி­ருந்தார். அதில் இவர் கொஞ்ச நேரமே வந்­தா­லும் மிக முக்­கி­ய­மான வேட­மாக இருந்­தது. அதன் பிறகு தமிழ் படங்­களில் நடிக்க காத்­தி­ருந்­தார்.

அந்த சம­யத்­தில் விஜய்க்கு ஜோடி­யாக நடிக்க பல முன்­னணி நடி­கை­கள் போட்டி போட்­டுக்கொண்டு இருந்­த­னர்.

அதிர்­ஷ்டக் காற்று மாள­விகா மீது வீசி­யது. விஜய்­யின் 'மாஸ்­டர்' படத்­தில் ஒப்­பந்­த­மாகி அனை­வ­ரை­யும் திரும்­பிப் பார்க்க வைத்­தார்.

விஜய், மாள­விகா மோக­னன் முதல்முறை­யாக இணைந்து நடித்த 'மாஸ்­டர்' திரைப்­ப­டம் மிகப்­பெ­ரிய அள­வில் வெற்றி பெற்று உலக அள­வில் பல்­வேறு வசூல் சாத­னை­களைச் செய்­தது. அத­னைத்­தொ­டர்ந்து பல மொழி­க­ளி­லி­ருந்­தும் மாள­வி­கா­வுக்கு வாய்ப்­பு­கள் வரத்­தொ­டங்­கி­யுள்­ளன. இவர் பொறு­மை­யாக கதை­யைக் கேட்டு, நல்ல திற­மை­யான இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் நடிக்­க­வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் கதை­க­ளைத் தேர்வு செய்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், ரசி­கர்­க­ளைக் கவ­ரும் வண்­ணம் காடு, மலை போன்ற பகு­தி­க­ளுக்­குச் சென்று வந்த படங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்டு இருக்­கி­றார் மாள­விகா. அத்­து­டன் அவர் நடி­கர் விஜய் பற்றி மிக­வும் பெரு­மை­யாக பதி­விட்டு இருக்­கி­றார்.

"விஜய் நண்­பர்­க­ளுக்­காக எப்­போ­தும் இருப்­ப­வர். அவ­ரது நட்­பின் அளவை விவ­ரிக்­கவே முடி­யாது. எந்த நேரத்­திலும் அவ­ரு­டன் தொடர்பு கொள்­ள­லாம். உடனே அவர் பேசு­வார். உதவி வேண்­டு­மென்­றா­லும் உடனே செய்­வார். என்­னி­டம்

மட்­டு­மல்ல, அவ­ரது மற்ற நண்­பர்­க­ளி­ட­மும் அவர் அப்­ப­டித்­தான் நடந்துகொள்­வார்.

"என்­னு­டைய சில நண்­பர்­கள் வேலை இல்­லை­யென்­றா­லும் வேலை இருப்­ப­து­போல் காட்­டிக்­கொள்­வார்­கள். ஆனால் விஜய் எவ்­வ­ளவு வேலை இருந்­தா­லும் நம்­மு­டன் பேசு­வார்.

"நான், விஜய், ஆடை வடி­வ­மைப்­பா­ளர் பல்­லவி மூவ­ரும் ஒரு வாட்ஸ்­அப் குரூப்­பில் இருக்­கி­றோம். நாங்­கள் அதன்­

மூ­லம் அடிக்­கடி பேசிக்­கொள்­வோம். அப்­போது எல்­லாம் விஜய் வாயி­லி­ருந்து தவ­றாக, எதிர்­ம­றை­யாக ஒரு வார்த்­தை­கூட வந்­தது இல்லை. எப்­போ­துமே அவ்­வ­ளவு உற்­சா­க­மாக, நேர்­

ம­றை­யான சிந்­த­னை­யு­டன் இருப்­பார். மிக­வும் இனி­மை­யான நபர்.

"படப்­பி­டிப்­புக்­குத் தயா­ரான பிறகு அன்­றைய நாளுக்­கான படப்­பி­டிப்பு ரத்­தா­னால் நாங்­கள் புலம்­பு­வோம். இதற்­கா­கவா இவ்­வ­ளவு சீக்­கி­ரம் எழுந்­தோம் என்­றெல்­லாம் பேசு­வோம். ஆனால் அதைக்­கூட விஜய் எளி­தா­கவே எடுத்­துக்­கொள்­வார். பர­வா­யில்லை. இப்­படி நடப்­பது சக­ஜம்­தான் என்று கூறி எங்­களை ஆறு­தல்­பட வைத்து, அவ­ரும் சக­ஜ­மாக எடுத்­துக்­கொள்­வார். அவ­ரி­ட­மி­ருந்து நிறைய கற்­றுக்­கொள்­ள­வேண்­டும்," என்று கூறி­னார்.

ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தால் வெளி­யி­லும் செல்ல முடி­ய­வில்லை. மேலும் படப்­பி­டிப்­பு­களும்

இல்­லா­த­தால் வீட்­டில் இருந்­த­படி சமை­யல் கற்­றுக்­கொள்ள தொடங்கி அவற்­றைக் காணொ­ளி­யாக எடுத்து மாளவிகா தன் இன்ஸ்­டா­கி­ராம் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

தனது நடிப்பால் அசுர வளர்ச்சி அடைந்து வரும் தனுஷ், இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து 'D43' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜனவரியில் முடிவடைந்துள்ளது. ஊரடங்கிற்குப் பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது படக்குழு.