'இதுவும் கடந்து போகும்'

'இதுவும் கடந்து போகும்'

1 mins read
69ddccbf-cf33-47fb-8af3-d63ee04ba4b3
-

நயன்­தாரா நடிப்­பில் 'நெற்­றிக்­கண்' படம் உரு­வாகி வரு­கிறது. இந்­தப் படத்­தின் பாடல் ஒன்று நேற்று முன்­தி­னம் வெளி­யா­னது. அந்­தப் பாடல் பல லட்­சம் உயிர்­களைக் கொன்று குவிக்­கும் கொரோ­னா­வும் 'நம்மை விட்­டுக் கடந்து போகும்' என்ற நம்­பிக்­கையை

வலி­யு­றுத்­து­வ­தாக நினைத்து ரசி­கர்­கள் பாடலை வர­வேற்­றி­ருக்­கி­றார்­கள்.

இயக்­கு­நர் மிலிந்த் ராவ் இயக்­கத்­தில் விக்­னேஷ் சிவன் தயா­ரிப்­பில்

உரு­வாகி உள்ள படம் 'நெற்­றிக்­கண்'. பார்­வை­யற்ற பெண்­ணாக இந்­தப்

படத்­தில் நயன்­தாரா நடித்­துள்­ளார். இசை­ய­மைப்­பா­ளர் கிரிஷ் இசை­யில் கார்த்­திக் நேத்தா வரி­களில் சித் ஸ்ரீராம் குர­லில் உரு­வாகி உள்­ளது 'இது­வும் கடந்து போகும்' பாடல்.

பாட­லின் ஒவ்­வொரு வரி­யும் வாழ்க்­கை­யின் வலி­க­ளை­யும் வாழ்க்­கைக்­குத் தேவை­யான ஏகப்­பட்ட தக­வல்­க­ளை­யும் அடுக்கி வைத்­தி­ருக்­கும் பெட்­ட­க­மாக உள்­ளது. பாட­லைக் கேட்ட மாத்­தி­ரத்­தில் ரசி­கர்­களை அடி­மை­யாக்கிவிடு­கிறது.

கொரோனா மட்­டு­மின்றி வாழ்­வின் பல சிக்­கலான தரு­ணங்களில்

இருந்­தும் நம்மைக் காக்­கும் அரு­ம­ருந்­தாக இந்தப் பாட­லில் உள்ள அனைத்து வரி­களும் இடம்­பெற்­றுள்­ளன.

'உடனே வலி­கள் மறைந்து போகாதே. சில நாள் வரைக்­கும் அதைச்

சீண்­டாதே. அது­வாய் மறக்­கும் பின் தோன்­றாதே' என்­ற வரி­கள் மன­மு­றிவு பிரச்­சி­னை­க­ளுக்கு மட்­டு­மின்றி தற்­கொலை உள்­ளிட்ட அனைத்து மோச­மான பிரச்­சி­னை­க­ளுக்­கும் தீர்­வ­ளிக்­கும் வரி­க­ளாக இந்தப் பாட­லில் இடம்­

பெற்­றுள்­ளன.

மேலும், இந்தப் பாடலைக் கேட்­டால் கொரோ­னா­வும் நம்மை விட்டு சீக்­கி­ரமே கடந்து போகும் என்­கிற நம்­பிக்­கை­யைத் தரு­வ­தாக கூறு­கின்­ற­னர் ரசி­கர்­கள்.