'அருமையான அனுபவம்'

'அருமையான அனுபவம்'

3 mins read
3c8ac2cf-296e-4e4a-bb13-902052506dda
-

வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம் என்­றாலே வித்யா­பா­லன் பெய­ரைத்தான் இயக்­கு­நர்­கள் முத­லில் பரி­சீ­லிக்­கி­றார்­கள். அந்த வகை­யில் தற்­போது 'ஷெர்னி' என்ற இந்­திப் படத்­தில் நடித்­துள்­ளார் வித்யா.

இதில் கண்­டிப்­பு­டன் செயல்­படும் வன இலாகா அதி­கா­ரி­யாக நடித்­துள்­ளா­ராம். மத்­தி­யப் பிர­தே­சத்­தில் உள்ள வனப்­ப­கு­தி­தான் கதைக்­க­ளம். அமித் மசுர்­கார் இயக்கி உள்ளார்.

முழுக் கதை­யை­யும் தனது தோளில் சுமந்­துள்­ளா­ராம் வித்யா. அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் வித்யா வின்­சன்ட்.

"இப்­ப­டி­யொரு கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­தன் மூலம் பல முக்­கி­ய­மான விஷ­யங்­க­ளைத் தெரிந்துகொண்­டேன். இந்­தப் படம் என் மனதில் பல்­வேறு வகை­யி­லும் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி உள்­ளது," என்­கி­றார் வித்யா.

விலங்­கு­களும் மனி­தர்­களும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சம அள­வில் சார்ந்­துள்­ள­னர் என்­றும் இதை ஒப்­புக்­கொள்­வ­து­டன், இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான இந்த உறவை வலுப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் கூறு­கி­றார்.

"உண்­மை­யைச் சொல்ல வேண்­டு­மென்­றால் விலங்­கு­க­ளுக்­கும் மனி­தர்­க­ளுக்­கும் எந்த வகை­யி­லும் தொடர்­பில்லை என்­பதே எனது எண்­ண­மாக இருந்­தது.

"வன வாழ்க்கை குறித்த எனது நிலைப்­பா­டும் அறி­வும் இப்­போது முற்­றி­லு­மாக மாறி­விட்­டது. மனி­தர்­க­ளின் செயல்­பா­டு­க­ளால் வனங்­களும் வன வாழ்க்­கை­யும் எந்­த­ள­வுக்­குப் பாதிக்­கப்­ப­டு­கின்­றன என்­பது குறித்த புரி­தல் இப்­போது வந்­துள்­ளது," என்­கி­றார் வித்யா.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 'ஷெர்னி' படத்­தின் படப்­பி­டிப்பு தொடங்­கி­யது. ஊரடங்கால் பணி­கள் நிறுத்­தப்­பட்டு பின்பு அக்­டோ­பர் மாதம் மீண்­டும் இந்­தப் படம் வள­ரத் தொடங்­கி­யது.

வனப்­ப­கு­தி­க­ளுக்கு மத்­தி­யில் படப்­பிடிப்பை நடத்­து­வ­தற்கு முன்பு தகுந்த பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளைச் செய்­தி­ருந்­த­ன­ராம். இருப்­பி­னும் கூடு­தல் விழிப்­பு­டன் செயல்­பட வேண்டி இருந்­த­தாம்.

"இதற்கு முன்பு பாது­காக்­கப்­பட்ட பகு­தி­யில் யானை­கள் மீது ஏறி அமர்ந்து வன விலங்­கு­கள் சுற்­றித் திரி­வதை நேரில் பார்த்­தி­ருக்­கி­றேன். ஆனால் இந்­தப் படத்­துக்­காக வனத்­தில் கூடா­ரம் அமைத்து தங்­கி­யது வித்­தி­யா­ச­மான, அரு­மை­யான அனு­ப­வ­மாக இருந்­தது.

"ஓய்வு நேரத்­தில் காட்­டுப் பகு­தி­யில் நீண்ட தூரம் நடந்து சென்­றேன். நாங்­கள் படப்­பிடிப்பு நடத்­தி­ய­போது கோடை காலம் என்­ப­தால் அவ்­வ­ளவு பசு­மை­யாக இல்லை. எனி­னும் பாது­காப்­பாக உணர்ந்­தேன்.

"இது இந்தி, இந்­திய ரசி­கர்­க­ளுக்­காக மட்­டுமே எடுக்­கப்­படும் பட­மல்ல, உல­கம் முழு­வ­தும் சென்று சேர­வேண்­டிய அம்­சங்­கள் இதில் உள்­ளன. நேர­டி­யாக இணை­யத்­தில் இப்­ப­டம் வெளி­யா­கும்.

"வீட்­டில் இருந்­த­ப­டியே ஓர் அடர்ந்த வனப்­ப­கு­தி­யில் சுற்றி வந்த அனு­ப­வம் ரசி­கர்­க­ளுக்­குக் கிடைக்­கும்.

"இன்­றுள்ள கொரோனா நெருக்­கடி காலத்­தில் இப்­ப­டி­யொரு வாய்ப்பு ரசி­கர்­க­ளுக்­குக் கிடைப்­பது என்­னைப் பொறுத்­த­வரை பெரிய விஷ­யம். எனவே, மறக்­கா­மல் இப்­ப­டத்­தைப் பாருங்­கள்," என்­கி­றார் வித்­யா­பா­லன்.

இந்­தப் படம் பிற­மொ­ழி­க­ளி­லும் மொழி­மாற்­றம் செய்­யப்­பட இருப்­ப­தா­கத் தக­வல். படத்­தின் முன்­னோட்ட காட்­சித் தொகுப்­புக்கு பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

"உல­கமே நெருக்­க­டி­யில் உள்ள வேளை­யில் நான் நடித்த இரண்டு படங்­கள் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கும் வாய்ப்­புக் கிடைத்­தது எனது அதிர்ஷ்­டம்.

"இதற்கு முன்பு இணை­யத்­தில் வெளி­யான 'சகுந்­த­லா­தேவி' ரசி­கர்­க­ளால் பாராட்­டப்­பட்­டது. அதே­போல் இந்­தப் பட­மும் வெற்றி பெறும் என நம்­பு­கி­றேன்.

"திரையுலகில் அண்மைய கால­மாக நிக­ழும் சில மாற்­றங்­களை நாம் நேர்­ம­றை­யான கோணத்­தில் பார்த்து வர­வேற்­க­ வேண்­டும் எனக் கரு­து­கி­றேன்.

"சில மாற்­றங்­க­ளால் சிறு பாதிப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும். எனி­னும் ஒப்­பீட்டு அள­வில் ஏரா­ள­மா­னோர் நல்ல பல­னைப் பெறு­கி­றார்­கள் என்­பது உறு­தி­யா­கும்­போது நாம் அதை வர­வேற்க வேண்­டும். இணையத்தில் நேரடியாக படத்தை வெளியிடுவது நல்ல மாற்று ஏற்பாடாக கருதப்பட வேண்டும்," என்று சொல்­லும் வித்­யா­பா­லன், நல்ல கதை­கள் அமை­யும் பட்­சத்­தில் தமிழ்ப் படங்­க­ளி­லும் நடிக்­கத் தயா­ராக இருப்­ப­தா­கச் சொல்கிறார்.