'இனி நான் வழக்கறிஞர்'

'இனி நான் வழக்கறிஞர்'

3 mins read
be3de5ef-09a5-4749-9777-3f7e077349cf
-

ஒரு குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த பிறகு சொந்த நாடான இங்­கி­லாந்­தில் அமைதியாக வசித்து வரு­கி­றார் ஏமி ஜாக்­சன்.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக இந்­தியா பக்­கம் வர­மு­டி­ய­வில்லை என்ற வருத்­தம் உள்­ள­தாம். எனி­னும் ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்ள இந்தி, தமிழ், தெலுங்­குப் படங்­க­ளைப் பார்த்து ரசித்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை தென்­னிந்­திய திரை­யு­ல­கில் முன்­னணி நடி­கை­யாக வலம் வந்த ஏமி, இப்­போது முழு­நே­ரக் குடும்­பத் தலைவி ஆகி­விட்­டா­ராம். எனி­னும் இணை­யத் தொடர்­களில் நடிக்­கக் கேட்டு சிலர் அணு­கி­யுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"இப்­போ­தைக்கு மீண்­டும் நடிப்­பது குறித்து எந்த முடி­வும் செய்­ய­வில்லை. சில கதை­க­ளைக் கேட்­டுள்­ளேன். நடிப்­பதா இல்­லையா என்­பது குறித்து விரை­வில் முடி­வெ­டுக்க வாய்ப்­புண்டு," என்­கி­றார்.

16 வய­தி­லேயே மாட­லிங் துறை­யில் ஜொலிக்­கத் தொடங்­கிய ஏமி, பிறகு இந்­திப் படங்­களில் நடிக்­கத் தொடங்­கி­னார். இங்­கி­லாந்­தில் பிறந்து வளர்ந்­தா­லும்­கூட இவர் தமி­ழில் வச­னங்­களை மனப்­பா­டம் செய்து கூடு­மா­ன­வரை பிழை­யின்றி பேசி­யதை தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­னர் பல­ரும் பாராட்­டி­னர்.

"இந்­தக் கார­ணத்­தால்­தான் தமிழ் ரசி­கர்­கள் மன­தில் எனக்­கும் இடம் கிடைத்­த­தாக விமர்­ச­கர்­கள் கூறி­யுள்­ள­னர்.

"என்­னைப் பொறுத்­த­வரை விளம்­ப­ரம் அல்­லது திரைப்­படங்­கள் என எது­வாக இருந்­தா­லும் முழு அர்ப்­ப­ணிப்­பு­டன் இருந்­தால்­தான் வெற்றி பெற முடி­யும்.

"ரஜி­னி­யு­டன் '2.0' படத்­தில் நடித்த பிறகு 'சூப்­பர் கேர்ள்' என்ற இணை­யத் தொட­ரில் நடித்­தேன். அதன்­பி­றகு குடும்­பத்­த­லை­வி­யாக பொறுப்­பு­கள் அதி­க­ரித்­த­தால் நடிக்க முடி­ய­வில்லை," என்­கி­றார் ஏமி ஜாக்­சன்.

இப்­போது அவர் வெறும் மாடல் அழகி, நடிகை மட்­டு­மல்ல, வழக்­க­றி­ஞ­ரா­க­வும் தேர்ச்சி பெற்­றுள்­ளார். இது­கு­றித்த தக­வலை இன்ஸ்­ட­கி­ரா­மில் பதிவு செய்­துள்­ளார்.

ஏமி, செல்­லப் பிரா­ணி­க­ளின் காதலி என்­பது அவ­ரு­டன் நெருக்­க­மாக உள்­ள­வர்­க­ளுக்­குத் தெரி­யும். இதன் கார­ண­மா­கவே விலங்­கு­க­ளைப் பாது­காக்க தீவி­ர­மா­கச் செயல்­படும் 'பீட்டா' அமைப்­பின் தூது­வ­ராக உள்­ளார்.

பல ஆண்­டு­க­ளாக இந்­தப் பணி­யில் ஈடு­பட்­டி­ருப்­ப­தும் ஏரா­ள­மான விலங்­கு­க­ளைக் காப்­பாற்­றி­ய­தும் மனி­த­நே­ய­முள்ள ஒரு பெண்­ணாக தமக்கு மன­நி­றைவு அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஏமி.

தற்­போது தென்­னாப்­பி­ரிக்­கா­வில் தந்­தங்­க­ளுக்­காக யானை­கள் வேட்­டை­யா­டப்­ப­டு­வது மிகுந்த வருத்­த­ம­ளிப்­ப­தாக கண்கலங்­கு­கி­றார்.

"அந்த யானை­க­ளைப் பாது­காக்க அனைத்­து­வித நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கி­றோம். இது­தொ­டர்­பான எனது உணர்­வு­களை கவி­தை­க­ளாக வடித்­துள்­ளேன்," என்று சொல்­லும் ஏமி, குழந்­தை­தான் தனது உல­கம் என்­பதை உணர்ந்­துள்­ளா­ராம்.

எங்கு சென்­றா­லும் தன் குழந்­தை­யு­டன்­தான் செல்­கி­றார்.

"எனது மக­னின் முழுப்பெயர் ஆன்ட்­ரி­யாஸ் ஜாக்ஸ் பன­யிடோ. சுருக்­க­மாக 'ஏஜிபி' என அழைப்­போம். என் வாழ்க்­கைக்கு அர்த்­தம் கொடுத்­தி­ருப்­பது என் மகன்­தான். எனக்­கும் என் கண­வ­ருக்­கும் வாழ்க்­கை­யின் ஒளி என்­றால் அது எங்­கள் மகன்­தான். அவ­னுக்கு சிறந்த முன்­மா­தி­ரி­யா­க­வும் நண்­பர்­

க­ளா­க­வும் பாது­கா­வ­லர்­க­ளா­க­வும் இருப்­பதே எங்­கள் லட்­சி­யம்," என்று சொல்­லும் ஏமி, பய­ணங்­க­ளை­யும் வெகு­வாக நேசிப்­ப­வர்.

ஒவ்­வொரு பய­ணத்­தின்­போ­தும் பல ஆங்­கில நாவல்­களைப் படித்துவிடு­வா­ராம்.

இப்­போ­தும்­கூட ஓய்வு நேரம் கிடைத்­தால் புத்­த­கங்­க­ளில்­ மூழ்­கிப் போவ­தா­கச் சொல்­கி­றார்.

"புத்­த­கங்­கள் தவிர, உடற்­ப­யிற்­சி­தான் எனது அடுத்த விருப்­பம். தாய்மை அடைந்­த­போ­து­கூட நான் பல்­வேறு உடற்­ப­யிற்­சி­களைச் செய்­ததை சிலர் விமர்­சித்­த­னர்.

"ஆனால், மருத்­து­வரின் ஆலோ­சனைப்­படி நாம் உடற்­ப­யிற்சி செய்­வ­தில் தவ­றில்லை.

"இப்­போ­தும்­கூட உடற்பயிற்சியும் யோகா­வும்­தான் எனது உடல்­ந­ல­னுக்கு கார­ண­மாக உள்­ளன," என்று சொல்­லும் ஏமி ஜாக்­சன், மீண்­டும் இந்­தி­யா­வுக்கு வர­வேண்­டும், அங்கு சில மாதங்­கள் தங்க வேண்­டும் என விரும்­பு­கிறாராம்.