'மாநாடு' படத்தின் பின்னணிக் குரல் பதிவு பணி தொடக்கம்

1 mins read
c0e5b26c-fcdc-4a92-9df0-d3567f293c20
'மாநாடு' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன். -

'மாநாடு' படத்­துக்­கான பின்­ன­ணிக் குரல் பதி­வைத் தொடங்கி உள்­ளார் சிம்பு.

இப்­ப­டத்­தின் முதல் பாடல் இன்று வெளி­யாக உள்ள நிலை­யில், படம் குறித்த எதிர்­பார்ப்பு அவரது ரசி­கர்­கள் மத்­தி­யில் அதி­

க­ரித்­துள்­ளது.

சுரேஷ் காமாட்சி தயா­ரிக்க, வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் உரு­வாகி உள்­ளது 'மாநாடு'.

இப்­ப­டத்­தில் அர­சி­யல் நெடி இருக்­கும் என்­றும் 'மங்­காத்தா' போல் பொழு­து­போக்கு அம்­சங்­கள் நிறைந்த பட­மாக இருக்­கும் என்­றும் பல­வி­த­மான ஆரூ­டங்­கள் நிலவு­கின்­றன. ஆனால், படக்­கு­ழு­வி­னர் எது­கு­றித்­தும் இது­வரை வாய்­தி­றக்­க­வில்லை.

இதற்­கி­டையே 'மாநாடு' படத்­தின் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி இருப்­ப­தாக கூறி­யுள்­ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சிறு வய­தில் சிம்பு நடித்த படங்­களை தாம் ஆர்­வத்­து­டன் பார்த்­த­தாகக் கூறு­கி­றார்.

"சிம்பு சார் நடித்த 'சர­வணா' படம் வெளி­யா­ன­போது நான் பள்­ளிக்­கூட மாணவி. படம் வெளி­யா­னது தெரிந்­த­தும் எப்­ப­டி­யா­வது உட­னுக்­கு­டன் பார்த்­து­விட வேண்­டும் என்று நானும் தோழி­களும் திட்­டம் போட்­டோம்.

"இதையடுத்து அனைவரும் ஒருநாள் பள்ளிக்குப் போகாமல் மொத்தமாக கிளம்பிச் சென்று 'சரவணா' படத்தை திரையரங்கில் பார்த்தோம்.

"அதுபோன்ற உற்சாகத் தரு ணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி கிடைத்துவிடாது. எப்போதாவது அனுபவிக்கும் தருணங்களை வாழ் நாள் முழுதும் மறக்க இயலாது," என்கிறார் பிரியா பவானி சங்கர்.

'மாநாடு' படம் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் வெளியாக உள்ளது.