அருண் விஜய் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் 'சினம்'.
ஜி.என்.ஆர்.குமரவேலன் திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்.
"இது யதார்த்தமான கதையம்சம் கொண்ட படம். காவல்துறையை மையமாக வைத்து ஏற்கெனவே வெளியான படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும்.
"நாட்டில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு பிரச்சினை குறித்து அலசி உள்ளோம். கதை நாயகன் 'பாரிவெங்கட்' கதாபாத்திரம் நியாயத்தை மட்டுமே பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
"பாலக் லால்வானி நாயகியாக நடித்துள்ளார். கதைக்கேற்ற நடிப்பை வழங்கியுள்ளார்," என்கிறார் இயக்குநர் குமரவேலன்.
இப்படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

