'கிருமியால் வந்த மாற்றம்'

'கிருமியால் வந்த மாற்றம்'

3 mins read
97dbba1a-4673-4c8e-931a-a66efe2c1e0a
-

மீண்­டும் படப்­பி­டிப்பு தொடங்­கப்பட்டது தனக்கு உற்சாகம் அளித்தபோதி­லும், மிகுந்த கவ­னத்­து­டன் இருக்க வேண்­டி­யுள்­ளது என்­கி­றார் நடிகை சாந்­தினி தமி­ழ­ர­சன்.

வீட்­டில் பெற்­றோ­ரும் பாட்டி தாத்­தா­வும் இருக்­கி­றார்­க­ளாம். எனவே, தன் மூல­மாக அவர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டக் கூடாது என்­ப­தால்­தான் இரட்­டிப்­புக் கவ­னம் தேவைப்­ப­டு­வ­தா­கச் சொல்­கி­றார்.

தற்­போது 'வார்ட் 126' என்ற படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் சாந்­தினி. ஊர­டங்கு தளர்­வு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் படப்­பி­டிப்பு தொடங்கி இருப்­ப­தும் படக்­கு­ழு­வி­ன­ரைச் சந்­திப்­ப­தும் மகிழ்ச்சி அளிக்­கி­ற­தாம்.

"கொரோனா பெருந்­தொற்­றுக் கால­கட்­டம் சுகா­தா­ரம், பாது­காப்பு ஆகி­ய­வற்­றின் முக்­கி­யத்­து­வத்தை நமக்கு உணர்த்தி உள்­ளது. மேலும், பல விஷ­யங்­களை மாற்றி அமைத்­துள்­ளது.

"உதா­ர­ண­மாக, படப்­பி­டிப்­பின் போது முகக்­க­வ­சம் அணிய வேண்­டி­யுள்­ளது. இத­னால் நமது ஒப்­பனை கலைந்­து­போகும். அதி­லும் குறிப்­பாக உதட்­டுச்­சா­யம் அழிந்­து­வி­டும். அத­னால் முகக்­க­வ­சம் அணி­யும் முன்பு உதட்­டுச்­சா­யத்தை நாமே அழித்­து­வி­டு­வது நல்­லது.

"இத­னால் பல­முறை ஒப்­ப­னையை சரி­செய்ய வேண்­டி­உள்­ளது. முன்­பெல்­லாம் படப்­பி­டிப்­பின் இடை­வெ­ளி­யில் இஷ்­டம்­போல் சாப்­பி­டு­வேன். இப்­போது அவ்­வாறு செய்­வ­தில்லை.

"கொரோனா பெருந்­தொற்று அச்­சு­றுத்­தல் இருக்­கும் வேளை­யில் உண­வுக்­கட்­டுப்­பா­டும் நல்ல சுகா­தார பழக்க வழக்­கங்­களும் தேவை. இத­னால் படப்­பிடிப்பின்­போது எனக்கு வீட்­டில் இருந்தே அம்மா சமைத்த உணவு வந்­து­வி­டும். நோய் எதிர்ப்­புச் சக்­தியை அளிக்­கும் உணவு வகை­க­ளாகப் பார்த்து அம்மா சமைத்து அனுப்­பு­கி­றார்.

"அதே போல் முன்­பெல்­லாம் வீட்­டில்­தான் உடற்­ப­யிற்சி மேற்­கொள்­வேன். இப்­போது படப்­பி­டிப்­புக்கு இடை­யே­யும் உடற்­பயிற்­சிக்கு நேரம் ஒதுக்­கு­கி­றேன். விவேக கைக்­க­டி­கா­ரத்­தைக் கட்­டிக்­கொண்டு தின­மும் பத்­தா­யி­ரம் அடி­க­ளா­வது நடக்க வேண்­டும் என்­ப­து­தான் எனது இலக்கு.

"இப்­படி உண­வுக்­கட்­டுப்­பாடு, உடற்­ப­யிற்­சி­யின் மூலம் உடல்­ந­ல­னைப் பேண முடி­கிறது. மற்­ற­வர்­களும் இதைச் செய்ய வேண்­டும் என்­ப­து­தான் எனது அறி­வுரை.

"தின­மும் படப்­பி­டிப்பு முடிந்து வீடு திரும்­பும்­போது எனக்­காக வீட்­டில் நான்கு பெரி­ய­வர்­கள் காத்­தி­ருப்­பது நினை­வுக்கு வரும். நான் சற்று கவ­னக்­கு­றை­வாக இருந்­தால் அவர்­க­ளுக்கு ஏதே­னும் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும் என்ற நினைப்பே என்னை கூடு­தல் கவ­னத்­து­டன் இயங்க வைக்­கிறது.

"தற்­போது நடித்து வரும் படங்­க­ளைத் தவிர வேறு வாய்ப்­பு­கள் எதை­யும் ஏற்­க­வில்லை. இயல்­பு­நிலை திரும்­பிய பிற­கு­தான் எல்­லா­வற்­றி­லும் தெளி­வாக முடி­வெ­டுக்க இய­லும்.

"தகுந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளு­டன் தான் படப்­பி­டிப்­பு­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இருந்­தா­லும் மன­துக்­குள் ஒரு­வித அச்ச உணர்வு நில­வு­கிறது. இதை மறைத்து பலன் இல்லை.

"முன்பு படப்­பி­டிப்­புத்­த­ளம் கல­க­லப்­பாக இருக்­கும். இப்­போது நம்­மைச் சுற்றி இருப்­ப­வர்­களை அடை­யா­ளம் காண்­பது கூட கடி­ன­மாக இருக்­கிறது. கார­ணம் எல்­லோ­ருமே முகக்­க­வ­சம் அணிந்­து­தான் வலம் வரு­கி­றோம்.

"ஒரு வகை­யில் இந்த கொரோனா கிருமி நம்மை பொறுப்­புள்ள மனி­தர்­க­ளாக மாற்­றி உள்­ளது என­லாம். வீட்­டில் இருப்­ப­வர்­கள், நம்­மு­டன் நெருங்­கிப் பழ­கு­ப­வர்­க­ளின் நல­னில் கூடு­தல் அக்­கறை ஏற்­பட்­டுள்­ளது. நம்­மால் பிறர்க்கு பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டாது என்று நினைக்­கும் போதே நாம் சரி­யாக இருக்க வேண்­டும் என்ற எண்­ண­மும் மன­தில் வேரூன்றி விடு­கிறது.

"பெருந்­தொற்று முடி­வுக்கு வந்­தா­லும் நாம் தொடர்ந்து கவ­னத்­து­டன் செயல்­பட்­டால்­தான் வாழ்க்கை இயல்­பாக இருக்­கும்," என்­கி­றார் சாந்­தினி.

, :   

சாந்தினி