தென்னிந்திய நடிகைகள் மீதான ரசிகர்களின் பார்வை மாறி இருக்கிறது என்கிறார் ராஷி கண்ணா.
அனுஷ்கா, சமந்தா போன்ற திறமையான நடிகைகளாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முன்பெல்லாம் பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்த ரசிகர்கள், இப்போது நன்கு நடிக்கத் தெரிய வேண்டும் என்கின்றனர். இது நல்ல மாற்றம்," என்கிறார் ராஷி.

