'தேசிய விருது கிடைக்கலாம்'

'தேசிய விருது கிடைக்கலாம்'

3 mins read
f8e0e8bb-d02d-4232-b729-e2e5fcf4c030
-

சில நடி­கர், நடி­கை­கள் நடித்து வரும் படங்­கள் குறித்த அண்­மைத் தக­வல்­கள், அவர்­க­ளின் அடுத்த நகர்­வு­கள் குறித்து தெரிந்து கொள்­வ­தில் ரசி­கர்­க­ளுக்கு எப்­போ­துமே ஆர்­வம் இருக்­கும். அத்­த­கைய தக­வல்­க­ளின் தொகுப்பு இது.

'பிசாசு 2' படத்­தில் ஆண்ட்­ரியா வெளிப்­ப­டுத்­தி­யுள்ள இயல்­பான நடிப்­புக்­காக அவ­ருக்­குத் தேசிய விருது கிடைக்­கக்­கூ­டும் என்­கி­றார் அதன் இயக்­கு­நர் மிஷ்கின். அந்­த­ளவு தனது கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப பக்­கு­வ­மாக நடித்­துள்­ளா­ராம் ஆண்ட்­ரியா.

'பிசாசு 2' படம் தனது வழக்­க­மான பாணி­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்­றா­லும் சில புதிய விஷ­யங்­கள் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும் என்­கி­றார் மிஷ்­கின்.

ஆண்ட்­ரியா முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க, கௌரவ வேடத்­தில் அசத்தி உள்­ளா­ராம் விஜய் சேது­பதி. கார்த்­திக் ராஜா­வின் இசை கதைக்கு கச்­சி­த­மா­கப் பொருந்­தி­யுள்­ளது என்­கி­றார்.

இந்­நி­லை­யில் டுவிட்­ட­ரில் ரசி­கர்­க­ளு­டன் உரை­யா­டி­னார் மிஷ்­கின். அப்­போது ஆண்ட்ரி யாவை முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வைத்­தி­ருப்­பது குறித்து ரசி­கர்­கள் சிலர் கேட்க, அவர் திற­மை­யான நடிகை என்­றும் இம்­முறை தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தாம் நம்­பு­வ­தா­க­வும் கூறி­னார் மிஷ்­கின். மேலும், விஜய் போன்ற நடி­கரை வைத்து படம் இயக்­கி­னால் அது ஜேம்ஸ்­பாண்ட் பாணி­யில் அமைந்த பட­மாக இருக்­கும் என்­றார்.

புரட்சி இளை­ய­ராக அதர்வா

நடி­கர் அதர்வா தமது அடுத்த படத்­தில் புரட்சி சிந்­தனை கொண்ட இளை­ய­ராக நடித்­துள்­ளார். 'அட்­ரஸ்' என்ற தலைப்­பில் உரு­வாகி உள்ள இந்­தப் படத்தை ராஜ­மோ­கன் இயக்­கு­கி­றார். உண்­மைச் சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு உரு­வாகி உள்ள இப்­ப­டத்­தில் அதர்­வா­ ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் காளி.

சிறு வேடம் என்­றா­லும் நட்­புக்­காக நடித்­துள்­ளா­ராம். இதில் அவ­ரது ஜோடி­யாக பூஜா காவேரி நடித்­துள்­ளார். நேற்று வெளி­யான இப்­ப­டத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டிக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

கனமான பாத்திரத்தில் தனுஷ்

தனது சகோ­த­ரன் செல்­வ­ரா­க­வன் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'நானே வரு­வேன்' படத்­துக்­கான பணி­க­ளைத் துவங்கி விட்­டா­ராம் தனுஷ். தனது கதா­பாத்­தி­ரத்தை மெரு­கேற்­று­வ­தற்­கான பயிற்­சி­யி­லும் தேட­லி­லும் ஈடு­பட்­டுள்­ளா­ராம்.

இப்­ப­டத்­துக்­கான புகைப்­ப­டம் எடுக்­கும் வேலை முடிந்­துள்­ளது. விரை­வில் படத்­தின் சுவ­ரொட்டி வெளி­யா­கு­மாம். ஆகஸ்ட் 20ஆம் தேதி படப்­பி­டிப்பு துவங்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதி­லும் தனு­சுக்கு கன­மான கதா­பாத்­தி­ரத்தை அளித்­துள்­ளா­ராம் செல்வா.

ரத்­ன­கு­மார் இயக்­கத்­தில் சந்­தா­னம்

'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்­களை இயக்­கிய ரத்­ன­கு­மார் அடுத்து சந்­தா­னத்தை வைத்து ஒரு படம் இயக்க உள்­ளார்.

அவர் சொன்ன கதை பிடித்­துப் போன­தால் உடனே கால்­ஷீட் ஒதுக்­கி­விட்­டா­ராம் சந்­தா­னம்.

அவ­ரது நடிப்­பில் அடுத்து 'டிக்­கி­லோனா', 'சர்­வர் சுந்­த­ரம்' ஆகிய படங்­கள் வெளி­யீடு காணத் தயா­ராக உள்­ளன. அதை­ய­டுத்து 'சபா­பதி' படத்­தில் நடித்து வரு­கி­றார். இதன் எழு­பது விழுக்­காடு படப்­பி­டிப்பு முடிந்து விட்­ட­தாம்.

'துப்­பாக்கி' இரண்­டாம் பாகத்­தில் கமல்

கமல்­ஹா­சன் இப்­போது லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'விக்­ரம்-2' படத்­தில் நடித்து வரு­கி­றார். அதை முடித்த கையோடு அவர் 'துப்­பாக்கி' படத்­தின் இரண்­டாம் பாகத்­தில் நடிப்­பார் என்ற தக­வல் வெளி­யாகி உள்­ளது.

ஏ.ஆர். முரு­க­தாஸ் இயக்­கத்­தில் வெளி­யான முதல் பாகத்­தில் விஜய் நடித்­தி­ருந்­தார். இரண்­டா­வது பாகத்­தி­லும் அவ­ரையே நடிக்க வைக்க விரும்­பி­னார் முரு­க­தாஸ்

எனி­னும் கதை பிடிக்­கா­த­தால் விஜய் ஒதுங்கி விட்­ட­தா­க­வும் இத­னால் ஏமாற்­ற­ம­டைந்த முரு­க­தாஸ் கமலை அணுகி இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

முதல் பாகத்­தில் விஜய் நடித்த உள­வுப்­பி­ரிவு அதி­காரி வேடத்­தில்­தான் கமலை நடிக்­கக் கேட்­டுள்­ளா­ராம் முரு­க­தாஸ். அவர் நடிப்பது உறுதியானதும் இப்படம் ­கு­றித்த அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கக்­கூ­டும்.