சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள 'டாக்டர்' (படம்)திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியீடு காண்கிறது.
கடந்த மார்ச் 26ஆம் தேதியே இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிட இருந்தனர். கொரோனா நெருக்கடியால் அது சாத்தியமாகவில்லை.
இதனால் நேடியாக இணையத்தில் வெளியிடத் திட்டமிட்டனர். முன்னணி நிறுவனங்களுடன் இதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இணையத்தில் வெளியிடுவதுடன் தொலைக்காட்சி உரிமையையும் சேர்த்து 'ஓடிடி' நிறுவனங்கள் படத்தை விலைபேசின.
ஆனால், தொலைக்காட்சி உரிமை ஏற்கெனவே சன் டிவிக்கு விற்கப்பட்டு விட்டது. இதனால் ஓடிடி நிறுவனங்கள் ஒதுங்கிக்கொள்ள படத்தைத் திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புக்காக சிவா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

