'உலகமே இருண்டு போனது'

'உலகமே இருண்டு போனது'

3 mins read
c2ec527f-d10b-4ecd-ac19-63cecd24a58e
-

'ராஜ­பீமா' படத்­தில் யானை­க­ளு­டன் இணைந்து நடித்த அனு­ப­வத்தை மறக்க இய­லாது என்கிறார் நடி­கர் ஆரவ்.

யானை­க­ளு­டன் எப்­ப­டிப் பேசிப் பழ­கு­வது, அவற்­றின் அன்பை எப்­ப­டிப் பெறு­வது என்­ப­தெல்­லாம் இவ­ருக்கு இப்­போது அத்­துப்­ப­டி­யாகி விட்­ட­தாம்.

இனி­மை­யான தரு­ணங்­க­ளைப் போலவே யானை­க­ளு­டன் நடித்­த­போது இவர் மிரண்­டு­போன சம்­ப­வங்­களும் நிகழ்ந்­த­ன­வாம்.

படப்­பி­டிப்­புக்கு முன்பு முந்­நூ­றுக்­கும் மேற்­பட்ட யானை­க­ளின் படங்­க­ளைப் பார்த்து இறு­தி­யாக பத்ரா என்ற யானை­யைத் தேர்வு செய்­தி­ருக்­கி­றார்­கள். அது கேர­ளா­வில் உள்ள பாலக்­காடு பகு­தி­யில் பயிற்று­விக்­கப்­பட்ட யானை.

"புகைப்­ப­டத்­தில் பார்த்­த­போது அந்த யானை­யின் உரு­வத்தை ஓர­ளவு கற்­பனை செய்து வைத்­தி­ருந்­தேன். ஆனால் நேரில் பார்த்­த­போது அதன் பிரம்­மாண்ட உரு­வம் என்னை அச­ர­டித்­தது. யானை­களுடன் நடிக்­க­வேண்­டும் என்று நினைத்­த­போதே ஒருவித அச்­சம் ஏற்­பட்­டது.

"பொது­வாக யானை­கள் அவற்­றுக்­குத் தெரிந்த மொழி­யில் இடப்­படும் உத்­த­ர­வு­க­ளைத்தான் பின்­பற்­றும். அந்த வகை­யில் எனக்கு பத்ரா யானை­யு­டன் பழக ஐந்து நாட்­கள் பயிற்சி அளிக்­கப்­பட்­டது.

"மலை­யா­ளம் தெரி­யும் என்­ப­தால் யானைப்­பாகன் சொல்­லிக் கொடுத்­ததை விரை­வில் கற்­றுக் கொண்­டேன்.

"ஆனால், பத்­ரா­வு­டன் நெருக்­க­மா­வ­தற்­குள் படப்­பிடிப்பை பாலக்­காடு பகு­தி­யில் இருந்து தாய்­லாந்­துக்கு மாற்றி­விட்­ட­னர். அங்கு புதிய சூழல், புது யானை என அனைத்­தை­யும் மீண்­டும் முத­லில் இருந்து தொடங்­கி­னோம். ஆனால் தாய்­லாந்து யானை­யு­டன் பழ­கு­வது அவ்­வ­ளவு எளி­தாக இருக்­க­வில்லை. நான் பேசி­ய­தும் அதற்­குப் புரி­ய­வில்லை. பயிற்­சி­யா­ளரை வைத்­துக் கொண்­டு­தான் படப்­பி­டிப்பை நடத்­தி­னோம்.

"அதே­ச­ம­யம் பத்­ரா­வு­டன் பழ­கி­யது தாய்­லாந்­தில் ஓர­ளவு கைகொ­டுத்­தது. படப்­பி­டிப்­பின்போது நடந்த சம்­ப­வம் என்னை மிரள வைத்­தது. மொத்­த படக்­கு­ழு­வி­ன­ரும் சேர்ந்து உயி­ரைக் காப்­பாற்­றி­னர்," என்று இன்­ன­மும்­கூட அதிர்ச்­சி­யில் இருந்து மீளா­த­வ­ராகப் பேசுகி­றார் ஆரவ்.

அப்­படி என்ன நடந்­தது?

குறிப்­பிட்ட ஒரு காட்­சி­யில் யானை தனது தும்­பிக்­கை­யால் இவ­ரது கையைப் பாசத்­து­டன் பிடித்­துக் கொள்­வது போல் படம்பிடிக்க இருந்­த­னர். அப்­போது அந்­தப் பயிற்­சி­யா­ளர் தாய்லாந்து மொழி­யில் உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பிக்க, அந்த யானை ஆரவ்­வின் கையைப் பிடித்து பல­மாக இழுத்­தி­ருக்­கிறது. சுமார் நூறு மீட்­டர் தூரத்­துக்கு அவ்­வாறு இழுத்­துச் செல்­லப்­பட்­ட­தால் வலி­யில் அல­றித் துடித்­தி­ருக்­கி­றார் ஆரவ். படக்­கு­ழு­வி­னர் அதிர்ந்­து­போ­யி­னர். அவரை மீட்­ப­தற்­கும் முயன்­றுள்­ள­னர். ஆனால் யானை­யின் பிடி இறு­கி­ய­து­டன் முன்­பைவிட பல­மாக அவரை இழுத்­தி­ருக்­கிறது.

"ஒரு­க­ணம் உல­கமே இருண்டு போனது. நல்­ல­வே­ளை­யாக அந்­தப் பயிற்­சி­யா­ளர் துரி­த­கதி­யில் செயல்­பட்டு சில உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­தார். அதன்­பி­ற­கு­தான் யானை என்னை விடு­வித்­தது. பிற­கு­தான் ஒரு விவ­ரத்தை அறிந்­தோம். 'கையைப் பிடித்­துக்­கொள்' என்று சொல்­வ­தற்­குப் பதி­லாக, 'பிடித்து இழு' என்று பொருள்­பட யானைக்­குத் தவ­றாக உத்­த­ர­விட்­டுள்­ளார் அந்­தப் பயிற்­சி­யா­ளர். அத­னால்­தான் குழப்­பம் நேர்ந்­துள்­ளது," என்­கி­றார் ஆரவ்.

மற்­றொரு சம்­ப­வத்­தில் யானை­யின் மீதிருந்த இவர் தவறி கீழே விழுந்­து­விட்­டா­ராம். எங்கே யானை தன்னை மிதித்து விடுமோ என்ற பயத்­தில் மயங்கி உள்­ளார்.

"ஒரு­நாள் எனக்கு எதிரே இருந்த கேம­ரா­வைப் பார்த்­துக்­கொண்டே யானை மேல் இருந்த நான் கீழே இறங்க முயன்­ற­போது பிடி­மா­னம் இன்றி விழுந்­தேன். யானை­யின் கால்­களுக்கு அரு­கில் விழுந்து கிடந்­த­போது அச்சமாக இருந்­தது. உட­ன­டி­யாக, வேக­மாக உருண்டு, அதன் கால்­களில் இருந்து வில­கிச் சென்று எழுந்து நின்­ற­தும் மயங்­கி­விட்­டேன். நிறைய சிராய்ப்­பு­கள், காயங்­க­ளு­டன் நடித்து முடித்­தி­ருக்­கி­றேன். நடந்­த­வற்றை நினைத்து வருத்­தப்­பட ஒன்­று­மில்லை.

"இவை­யெல்­லாம் வாழ்­நா­ளில் ஒரு­முறை மட்­டுமே கிடைக்­கும் அனு­ப­வங்­கள். யானை­களு­டன் நடித்­த­போது சில ஆபத்­து­களை எதிர்­கொண்­டேன் எனில், இப்­போது பாம்­பு­க­ளு­டனும் புலி­க­ளு­ட­னும் நடிக்­கக் கேட்டு சிலர் அணுகி உள்­ள­னர்," என்று சிரிக்­கி­றார் ஆரவ்.

, :   

ஆரவ்