'ஓடிடி'யில் வெளியாகும் 'சார்பட்டா பரம்பரை'

'ஓடிடி'யில் வெளியாகும் 'சார்பட்டா பரம்பரை'

2 mins read
29867c21-f156-4a08-8de6-828e960c4378
'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யா, பசுபதி. -

'சார்­பட்டா பரம்­பரை' படத்­தின் வெளி­யீட்­டுக்­காக அதன் நாய­கன் ஆர்யா மட்­டு­மல்­லா­மல் ஒட்­டு­மொத்த கோடம்­பாக்­க­மும் காத்­தி­ருக்­கிறது. கார­ணம், இப்­ப­டம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது.

யாரும் எதிர்­பார்க்­காத அள­வுக்கு மிகப்­பெ­ரிய தொகைக்கு வெளி­யீட்டு உரிமை கைமா­றி­ இருப்­ப­தா­கத் தக­வல். மேலும் பா. ரஞ்­சித் இயக்­கத்­தில் உரு­வான படம் என்­ப­தால் எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ள­தாக கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள் கூறு­கி­றார்­கள்.

ஆர்யா நாய­க­னாக நடித்­தி­ருக்­கும் இப்­ப­டத்­தில் கலை­ய­ர­சன், பசு­பதி, ஜான் விஜய், காளி வெங்­கட் என பெரிய நடி­கர் கூட்­டமே கள­மி­றங்கி உள்­ளது.

கடந்த 1970, 80களில் வட­சென்னை பகு­தி­யில் பிர­ப­ல­மாக இருந்­தது ஆங்­கில குத்­துச் சண்டை. இதில் பங்­கேற்­ப­வர்­கள் மிகுந்த ஆவே­சத்­து­டன் மோதிக்­கொள்­வார்­கள். அந்­தக் குத்­துச் சண்­டை­தான் படத்­தின் கதைக்­களம்.

சார்­பட்டா பரம்­பரை, இடி­யப்ப பரம்­பரை என இரண்டு முக்­கி­யப் பரம்­ப­ரை­க­ளுக்கு இடையே ஆண்­டாண்டு கால­மாக பகை நீடித்து வரு­கிறது. இரு பரம்­ப­ரை­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் தொடர்ந்து குத்­துச்­சண்டை மேடை­யில் மோதிக் கொள்­வ­தும் அவர்­க­ளுக்கு மத்­தி­யில் நில­வும் கோபத்­தை­யும் பகை­யை­யும்­தான் சித்­தி­ரிக்­கிறது திரைக்­கதை. சந்­தோஷ் நாரா­ய­ணன் இசை­ய­மைத்­துள்­ளார்.

இந்த ஆண்டு தொடக்­கத்­தி­லேயே படப்­பி­டிப்பை முடித்­து­விட்­டார் ரஞ்­சித். அதன் பின்­னர் தொழில்­நுட்­பப் பணி­கள் முழு­வீச்­சில் நடை­பெற்று வந்­தன. இத­னால் மார்ச் மாதமே இப்­ப­டம் திரை­கா­ணும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் கொரோனா இரண்­டா­வது அலை, ஊர­டங்கு உத்­த­ரவு என சில கார­ணங்­க­ளால் வெளி­யீடு தடை­பட்­டது.

இந்­நி­லை­யில் மூன்­றா­வது அலை வரக்­கூ­டும் என்­றெல்­லாம் பேசப்­ப­டு­வ­தால் நேர­டி­யாக இணை­யத்­தில் இப்­ப­டத்தை வெளி­யிட உள்­ள­னர்.

இது­கு­றித்து விவ­ர­ம­றிந்த முன்­னணி 'ஓடிடி' நிறு­வ­னங்­கள் வெளி­யீட்டு உரி­மைக்­குப் போட்­டி­யிட்­ட­தில் தயா­ரிப்­புத் தரப்பே எதிர்­பா­ராத வகை­யில் நல்­ல­தொ­கைக்கு விலை போயி­ருக்­கி­ற­தாம்.

ஆர்­யா­வின் நடிப்பு இப்­ப­டத்­துக்­குப் பெரும் பலம் சேர்த்­தி­ருப்­ப­தாக படக்­கு­ழு­வி­னர் தெரி­விக்­கின்­ற­னர். படப்­பி­டிப்­பைத் தொடங்­கும் முன்பே எதிர்­பார்ப்­பு­கள் என்­னென்ன என்­பது குறித்து ஆர்­யா­வி­டம் விவ­ர­மா­கச் சொல்­லி­விட்­டா­ராம் ரஞ்­சித்.

அதை­ய­டுத்து கடு­மை­யாக உடற்­ப­யிற்சி மேற்­கொண்டு ரஞ்­சித் எதிர்­பார்த்த உடற்­கட்­டு­டன் தயா­ரா­கி­விட்­டார் ஆர்யா. அவ­ரது அர்ப்­ப­ணிப்­பு­டன் கூடிய உழைப்பை ரஞ்­சித் வெகு­வா­கப் பாராட்­டு­கி­றார்.

அதே­போல் பசு­ப­தி­யின் நடிப்­பும் அவர் கதைப்­படி வகுக்­கும் சில வியூ­கங்­களும் ரசி­கர்­களை நிச்­ச­யம் கவ­ரும் என்று இயக்­கு­நர் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது. இந்­தப் படம் தனது திரைப்­ப­ய­ணத்­தில் மற்­றொரு முக்­கிய மைல் கல்­லாக அமை­யும் என்று தனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் நம்­பிக்­கை­யு­டன் கூறி வரு­கி­றா­ராம் ஆர்யா.