தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கைதி' படத்தின் கதை: உரிமை கோரும் நிஜக் கைதி

2 mins read
25607780-7ae2-4b09-b1bd-9679c1c370df
'கைதி' படத்தின் படப்பிடிப்பின்போது கார்த்தி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ். -

'கைதி' படத்­தின் கதை தன்­னு­டை­யது என்று உண்­மை­யா­கவே சிறைக் கைதி­யாக இருந்த ஒரு­வர் உரிமை கோரி இருக்­கி­றார். இது கோடம்­பாக்­கத்­தில் மட்­டு­மல்­லா­மல் மலை­யா­ளத் திரை­யு­ல­கத்­தி­லும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

விஜய் நடித்த 'மாஸ்­டர்' படத்தை இயக்­கி­ய­வர் லோகேஷ் கன­க­ராஜ். அதற்கு முன்பு அவர் இயக்­கிய இரு படங்­களில் ஒன்­று­தான் 'கைதி' என்­ப­தும் அதில் கார்த்தி நடித்­தி­ருந்­தார் என்­ப­தும் தெரிந்த செய்­தி­தான்.

விமர்­சன மற்­றும் வசூல் ரீதி­யில் 'கைதி' படத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது. படத்­தின் முடி­வில் இரண்­டாம் பாகம் வரும் என்­பதை உணர்த்தி இருப்­பார் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ்.

இந்­நி­லை­யில் இரண்­டாம் பாகத்­துக்­கான பணி­களை அவர் தொடங்கி இருப்­ப­தாக அண்­மை­யில் ஒரு தக­வல் வெளி­யா­னது. இது­கு­றித்து அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கும் என கார்த்­தி­யின் ரசி­கர்­கள் ஆர்­வ­மா­கக் காத்­தி­ருந்­த­னர். ஆனால் அது நடக்­க­வில்லை. மாறாக ஒரு சர்ச்­சை­தான் வெடித்­தி­ருக்­கிறது.

'கைதி' படத்­தின் கதை ராஜீவ் என்ற நிஜ சிறைக்­கைதி ஒரு­வ­ரு­டை­ய­தாம். ராஜீவ், 'கைதி'யின் தயா­ரிப்­புத் தரப்­பைச் சந்­தித்து கதையை விவ­ரித்து முன்­ப­ணம் பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆனால் பிறகு தனக்கே தெரி­யா­மல் லோகேஷ் கன­க­ராஜை வைத்து படத்தை எடுத்து முடித்­து­விட்­ட­னர் என்று குற்­றம் சாட்­டு­கி­றார் ராஜீவ்.

வெறும் பேச்­சோடு நிற்­கா­மல் கதை உரிமை தொடர்­பாக சூட்­டோடு சூடாக கேரள நீதி­மன்­றத்­தில் வழக்­கும் தொடுத்­துள்­ளார்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யின் முடி­வில் 'கைதி' இரண்­டாம் பாகத்­துக்­கும் மறு­ப­திப்பு செய்­ய­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்த தக­வல்­கள் சமூக வலைத்­த­ளங்­களை ஆக்­கி­ர­மித்த நிலை­யில் தன் தரப்பு விளக்­கத்தை அளித்­துள்­ளார் தயா­ரிப்­பா­ளர் எஸ்.ஆர்.பிரபு.

படத்­தின் கதை உரிமை தொடர்­பான வழக்கு நீதி­மன்ற விசா­ர­ணை­யில் இருப்­ப­தால் அதி­க­மான தக­வல்­களை பகிர்ந்­து­கொள்ள இய­லாது என்­றும் தங்­கள் மீதான குற்­றச்­சாட்டை மிக உறு­தி­யாக மறுப்­ப­தா­க­வும் எஸ்­ஆர். பிரபு கூறி­யுள்­ளார்.

தங்­கள் தரப்பு உண்­மையை சட்­டப்­படி நிரூ­பிக்க இய­லும் என்­றும் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார். எனவே ஊட­கங்­கள் 'கைதி' படம் சார்ந்த எவ­ரை­யும் செய்தி வெளி­யி­டா­மல் ஊடக தர்­மத்­தைக் காப்­பாற்ற வேண்­டும் என்று தயா­ரிப்­புத் தரப்­பில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

"நீதி­மன்­றத்­தில் சில விஷ­யங்­கள் சொல்­லப்­பட்­ட­தாக செய்­தி­கள் வந்­துள்­ளன. ஆனால் சட்­ட­பூர்­வ­மாக எங்­க­ளுக்கு இது­வரை எந்­தத் தக­வ­லும் வந்து சேர­வில்லை. அதனால் கருத்து சொல்ல இய­லாத நிலை­யில் உள்­ளோம்.

"எங்­க­ளைப் பொறுத்­த­வரை லோகே­ஷி­டம் கதை கேட்­டோம். குறு­கிய காலத்­தில் முடிவு செய்து அதைப் பட­மாக எடுத்­தோம், அவ்­வ­ள­வு­தான். நீதி­மன்­றத்­தில் இருந்து உரிய தக­வல்­கள் கிடைத்­த­தும் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வோம். அது­வரை எதுவும் சொல்­வ­தற்கு இல்லை," என்று தெளி­வாகப் பேசு­கி­றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.