நயன்தாரா திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டார் என்று தகவல் வெளியான நிலையில், அவரது தந்தை குரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து துபாயில் உள்ள நயன்தாரவின் சகோதரர் உடனடியாக நாடு திரும்புகிறார். தந்தையின் உடல்நலம் கருதியே, இனியும் தனது திருமணத்தைத் தள்ளிப் போடக்கூடாது என நயன்தாரா முடிவு செய்தாராம்.
தன் மகள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் குரியன். அவரது ஆசையை உடனடியாக நிறைவேற்ற நயன்தாரா முடிவு செய்திருப்பதாகத் தகவல்.
எனவே இவரது திருமணம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகக்கூடும் என நெருக்கமானவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
இப்படத்தை நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள உள்ள விக்னஷ் சிவன்தான் இயக்குகிறார். எனவே நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக முடித்துவிட விக்னேஷ் சிவன் முடிவு செய்திருப்பதாகத் தகவல்.