கௌதம் படத்தில் சிம்பு: பத்து கோடி ரூபாய் சம்பளம்

கௌதம் படத்தில் சிம்பு: பத்து கோடி ரூபாய் சம்பளம்

1 mins read
ce75584a-0c27-4a51-9478-01981a6b54d0
'மாநாடு' படத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன். -

முதன்­மு­றை­யாக சிம்­பு­வின் சம்­ப­ளம் பத்து கோடி­யைக் கடந்­துள்­ளது. கௌதம் மேனன் இயக்­கும் படத்­துக்­காக இந்­தப் பெரும் தொகை­யைப் பெற உள்­ளார் சிம்பு. அவ­ரும் கௌத­மும் மூன்­றா­வது முறை­யாக இணை­கின்­ற­னர்.

படத்­துக்கு 'நதி­க­ளிலே நீரா­டும் சூரி­யன்' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர். இந்­தக் கூட்­ட­ணி­யு­டன் ஏ.ஆர்.ரகு­மா­னும் மூன்­றா­வது முறை இணை­கி­றார். ஐசரி கணேஷ் தயா­ரிக்­கும் இந்­தப் படத்­துக்­காக சில ஆச்­ச­ரி­யங்­கள் நிகழ்ந்­துள்­ளன.

கௌதம் மேன­னைப் பொருத்­த­வரை படப்­பி­டிப்பு நடக்­கும்­போ­து­தான் முழுக் கதை­யை­யும் எழுதி முடிப்­பார். அதற்கு முன்பு அவ­ருக்கே முழுக் கதையும் தெரி­யாது எனும் விமர்­ச­னம் இப்­போது உடை­பட்­டுள்­ளது.

இம்­முறை முழுக் கதை­யை­யும் திரைக்­கதை வச­னங்­க­ளோடு முழு­மை­யாக எழுதி முடித்து அதைப் புத்­த­க­மாக சிம்­பு­வி­ட­மும் தயா­ரிப்­பா­ள­ரி­ட­மும் கொடுத்து விட்­டா­ராம். வழக்­கம்­போல் காத­லும் அடி­த­டி­யும் உள்ள பட­மாக உரு­வா­கிறது 'நதி­களிலே நீரா­டும் சூரி­யன்'.

இப்­ப­டத்­துக்­காக இரண்டு மாதங்­கள் கால்­ஷீட் கொடுத்­தி­ருக்­கி­றார் சிம்பு. அவ­ருக்கு பத்து கோடி ரூபாய் சம்­ப­ளம் பேசப்­பட்­டுள்ளதாகத் தகவல்.