கன்னித்தீவு: மக்களுக்காகப் போராடும் நான்கு இளம் பெண்களின் கதை

கன்னித்தீவு: மக்களுக்காகப் போராடும் நான்கு இளம் பெண்களின் கதை

2 mins read
7591fb3f-f9c3-42cb-b263-7fb2b9cb5f64
'கன்னித்தீவு' படத்தின் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா தத்தா, வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஆஷ்னா சவேரி. -

சுந்­தர் பாலு தயா­ரித்து இயக்­கும் படம் 'கன்­னித்­தீவு'. வர­லட்­சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்­வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு கதா­நா­ய­கி­கள் நடித்­துள்­ள­னர்.

மேலும் மொட்டை ராஜேந்­தி­ரன், சூப்­பர் சுப்­ப­ரா­யன், சர்­மிளா உள்­ளிட்ட பல­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

வட சென்­னை­யில் உள்ள ஒரு குடி­யி­ருப்­பில் வசிக்­கும் நான்கு பெண்­களை மையப்­ப­டுத்­திய கதை இது.

சிறு வய­தில் இருந்தே தோழி­களான வர­லட்­சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்­வர்யா தத்தா, சுபிக்‌ஷா ஆகிய நான்கு பேரும் சமூக அக்­கறை உள்­ள­வர்­கள்.

"உல­கத்தைக் காப்­பாற்ற முடியா­விட்­டா­லும் தாங்கள் வசிக்கும் இடத்தை­யா­வது நன்­றாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்ற எண்­ணம் கொண்­ட­வர்­கள்.

"இந்­நி­லை­யில் வட சென்­னை­யில் நீண்ட நாள்­க­ளாக நீடிக்­கும் ஒரு பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­காக போராட்­டத்­தில் ஈடு­படும் அவர்­க­ளுக்கு அப்­ப­குதி மக்­க­ளின் ஆத­ர­வும் கிடைக்­கிறது. போராட்­ட­மும் வெற்றி பெறு­கிறது.

"ஆனால், நால்­வ­ரும் சில திடீர் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கிறது. இதனால் தோழி­கள் நால்­வ­ரும் அல்­லா­டு­கி­றார்­கள்.

"முத­லில் அச்­ச­ம­டை­யும் அவர்­கள், பிறகு தாங்­கள் எதிர்­கொள்ளும் புதிய போராட்­டத்­தி­லும் வெற்றி பெறு­கி­றார்­கள். இதை அடி­தடி, கீழ்த்­தட்டு மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் ஆகி­ய­வற்­று­டன் சொல்­லப் போகிறோம்.

"படத்­தின் முதல் காட்­சி­யில் இருந்து இறு­தி­வரை விறு­வி­றுப்­பாக இருக்­கும். தேவை­ய­யற்ற வச­னங்­கள், காட்­சி­கள் எது­வும் இருக்காது," என்­கி­றார் இயக்­கு­நர் சுந்­தர் பாலு.

படத்­தின் தலைப்­புக்கு ஏற்ப இறு­திக்­காட்­சியை ஒரு தீவில்­தான் பட­மாக்­கி­னார்­க­ளாம். மேலும் பெரும் பொருட்­செ­ல­வில் நான்கு சண்­டைக் காட்­சி­களும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

"பொது­வாக பெரிய நாய­கர்­கள் நடிக்­கும் படங்­க­ளில்­தான் சண்­டைக் காட்­சி­க­ளுக்­காக பெரிய தொகை செல­வி­டப்­படும். ஆனால் இந்­தப் படத்­தி­லும் அப்­ப­டிப்­பட்ட காட்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன.

"நாய­கி­கள் நால்­வ­ருமே தைரி­ய­மாக நடித்­த­னர். கேர­ளா­வில் பட­மாக்­கப்­பட்ட இரண்டு சண்­டைக் காட்­சி­களும் ரசிக்­கும்­ப­டி­யாக இருக்­கும்," என்­கி­றார் சுந்­தர் பாலு.

ஊர­டங்கு முழு­மை­யாக முடிவுக்கு வந்த பிறகு இப்­ப­டம் வெளி­யா­கும் எனத் தக­வல்.