'வாழ்க்கை கலை தெரியாமல் போனது'

'வாழ்க்கை கலை தெரியாமல் போனது'

2 mins read
73c931ae-8faa-46e0-895e-9722c95e92ff
அமலா பால் -

தந்­தை­யின் மறை­வுக்­குப் பிறகே வாழ்க்­கை­யைப் புரிந்து கொள்­ளத் தொடங்­கி­ய­தா­கச் சொல்­கி­றார் அமலா பால்.

2020ஆம் ஆண்டு தமது வாழ்க்கை­யில் மறக்­கவே இய­லாத ஆண்டு என்­றும் அண்­மைய பேட்டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நான் 17 வய­தில் சினிமா துறைக்கு வந்­தேன். சொந்த வாழ்க்கை­யில் சந்­தித்த விஷ­யங்­களை எல்­லாம் சினிமா வாழ்க்­கை­யி­லும் பார்த்­தேன்.

"சினிமா வாழ்க்­கையை என்­னால் சொந்த வாழ்க்­கை­யில் இருந்து பிரித்­துப் பார்க்க முடி­ய­வில்லை. இரண்­டுமே ஒன்­று­தான் எனக் கரு­தி­னேன். அது தவ­றான அணு­கு­முறை என்று தோன்­றி­யதே இல்லை.

"2019ஆம் ஆண்டு வரை அப்படித்­தான் இருந்­தேன். ஆனால் அடுத்த ஆண்டு நிகழ்ந்த சில விஷ­யங்­கள் வாழ்க்­கை­யைப் புரட்­டிப்­போட்­டது. அந்த வரு­டம்­தான் எனது தந்தை மர­ணம் அடைந்­தார். அவ­ரது மறை­வுக்குப் பிற­கு­தான் என்னை நானே சுய­ப­ரி­சோ­தனை செய்ய ஆரம்­பித்­தேன்," என்­கி­றார் அமலா பால்.

அவ்­வாறு சுய­ப­ரி­சோ­த­னையை தொடங்­கியபோது­தான் தமது சொந்த வாழ்க்கை ஒரு திறந்த புத்­த­கம் போல் இருப்­பதை உணர்ந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அது­வரை தமக்­கென தனிப்­பட்ட வாழ்க்கை இல்லை என்­ப­தை­யும், வாழ்க்கை தவ­றாகப் புரிந்துகொள்­ளப்­பட்டு இருப்­ப­தை­யும் உணர ஆரம்­பித்­த­தா­கச் சொல்­கி­றார்.

"கடந்து வந்த பாதை­யைத் திரும்பிப் பார்க்­கை­யில் மோச­மாக உணர்­கி­றேன். தற்­போது எனது சொந்த வாழ்க்­கை­யை­யும் சினிமா வாழ்க்­கை­யை­யும் பிரிக்­கும் முயற்சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றேன்.

"அனை­வ­ரும் தங்­கள் வாழ்க்கை­யில் அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளுக்குப் போய் இருக்­கி­றார்­கள். நானும் போக வேண்­டும். அதற்கு நான் வாழ்க்­கை­யைப் புரிந்­து­கொள்­ளும் கலையைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும்.

"2019ஆம் ஆண்டு வரை வாழ்க்கை­யைப் பற்­றிய புரி­தல் இல்­லா­மல் போன எனக்கு அப்­பா­வின் மர­ணம்­தான் கண்­களைத் திறந்து வைத்த நிகழ்­வாக மாறி­யது. நான் சில­வற்றைச் சரி­யா­கச் செய்­தி­ருப்பதாகத் தோன்­று­கிறது.

"ஆனால் அதை­யும் மீறி வாழ்க்­கையை என்­னால் சரி­யான கோணத்­தில் புரிந்­து­கொள்ள முடி­யா­மல் போனது என்­பதை உணர்ந்­தேன்," என்று அமலா பால் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே இவ­ரும் இணை­யத் தொடர்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார். இணை­யத் தொடர்­கள் மூலம் ஏரா­ள­மான திறமை­சாலிகள் வெளி­உலகத்துக்குத் தெரிய வரு­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

தெலுங்­கில் அம­லா­பால் நடிப்­பில் உரு­வாகியுள்ள தொடர் 'குடியட­மைத்தே'.

ராம் விக்­னேஷ் இயக்­கி­யுள்ள இத்­தொ­ட­ரில் காவல் அதி­காரி­யாக நடித்­துள்­ளார்.

அம­லா­வுடன் ஈஸ்­வர் ரச்­சி­ராஜு, ப்ர­தீப் ருத்ரா உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர். இத்­தொ­டர் கடந்த வெள்­ளிக்­கிழமை வெளி­யாகி உள்­ளது.

இனி சினிமாவைப் போல் இணையத் தொடர்­களிலும் தம்மை அதி­கம் காண முடி­யும் என்­கி­றார் அமலா பால்.