'வணிக நாயகி ரெஜினா'

'வணிக நாயகி ரெஜினா'

3 mins read
98513018-c3b1-4f27-8ae5-81ae0d30b27b
-

இயக்­கு­நர் அறி­வ­ழ­க­னும் அருண் விஜய்­யும் 'பார்டர்' படம் மூலம் மீண்­டும் இணைந்­துள்­ள­னர். இம்முறை உள­வுத்­துறை, ராணு­வம், எல்­லைப் பிரச்­சினை குறித்து அல­சு­கி­றார் அறி­வ­ழகன்.

'ஈரம்', 'வல்­லி­னம்', 'ஆறாது சினம்' என்று வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­களைக் கையாள்­வ­தில் கெட்­டிக்­கா­ர­ரான இவர், நீண்ட நாள்­க­ளா­கவே ராணு­வப் பின்­னணி கொண்ட ஒரு படத்தை உரு­வாக்க வேண்­டும் என திட்­ட­மிட்டு வந்­தா­ராம். அதற்­கான நேரம் இப்­போ­து­தான் கைகூ­டி­யுள்­ளது என்­கி­றார்.

"அருண் விஜய்யும் நானும் நல்ல நண்­பர்­க­ளா­கப் பழகி வரு­கி­றோம். ஒரு கதா­நா­ய­கன் எப்­படி இருக்க வேண்­டுமோ அப்படி இருப்­பார்.

"அடி­தடி, காதல், நகைச்­சுவை, பிரம்­மாண்டப் படைப்பு என எத்­த­கைய கதைக்­க­ள­மாக இருந்­தா­லும் கொஞ்­சம் கூட யோசிக்­கா­மல், தயங்­கா­மல் அவரை ஒப்­பந்­தம் செய்­ய­லாம். கார­ணம், அவர் அப்­படிப்­பட்ட ஒரு திற­மை­சாலி.

"எனக்கு என்ன தேவை என்­பது அவருக்­குத் தெரி­யும். அவரை எவ்­வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சூட்­ச­மம் எனக்கு அத்­துப்­படி. அவ­ரது நடிப்பு எனக்கு ரொம்­பப் பிடிக்­கும்," என்­கி­றார் அறி­வ­ழ­கன்.

'குற்­றம் 23' பட வெற்­றிக்­குப் பிறகு மீண்­டும் இணைந்து செயல்­பட வேண்டும் என இரு­வ­ரும் முடிவு செய்­து­விட்­ட­னர். அதன் பிறகு தனக்குத் தேவைப்­பட்ட கால அவ­கா­சத்தை எடுத்­துக் கொண்டு 'பார்­டர்' படக்­கதையை உரு­வாக்கி உள்­ளார் அறி­வ­ழ­கன்.

"இந்­தப் படத்­தில் இந்­திய அர­சாங்­கத்­தின் உள­வா­ளி­யாக நடித்­துள்­ளார் அருண் விஜய். கடந்த ஆண்டு மார்ச் மாதமே படப்­பி­டிப்பு தொடங்­கி­விட்­டது. புதுடெல்லியில் படப்­ப­டிப்பு நடந்து கொண்­டி­ருந்­த­போதுதான் கொரோனா நெருக்­கடி தலை­தூக்­கி­யது. இத­னால் மிக வேக­மாக காட்சி­களை எடுத்து முடித்த கையோடு ஊர் திரும்­பி­விட்­டோம். அதற்­க­டுத்த இரு தினங்­களில் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது. ஆறு மாத காத்­தி­ருப்­பு­க்­குப் பின்­னர் மீண்­டும் படப்­பி­டிப்பைத் தொடங்கி­ய­போது நிறைய கட்­டுப்­பா­டு­கள்.

"இதுவோ ராணு­வம், உள­வுத்­துறை தொடர்­பான கதை என்­ப­தால் அடி­தடி சண்­டைக் காட்சி­க­ளுக்­குப் பஞ்­சமே இருக்­காது. ஆனால் அதி­கப்­படி­யான துணை நடி­கர்­கள், சண்­டைக் கலை­ஞர்­களை வைத்து வேலை செய்­யக்­கூ­டாது என்ற கட்­டுப்­பாடு இருந்­தது. எப்­ப­டியோ சமா­ளித்து காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­னோம். அருண் விஜய் உட்­பட அனை­வ­ருமே மிகுந்த ஒத்­து­ழைப்பை அளித்­த­னர். அதற்­காக அனை­வ­ருக்­கும் எனது நன்றி," என்­கி­றார் அறி­வ­ழ­கன்.

படத்­தின் கதா­நா­யகி ரெஜி­னா­வை­யும் வெகு­வா­கப் பாராட்­டு­கி­றார். மிகச்­சி­றந்த நடிகை, அர்ப்­பணிப்­பான கலை­ஞர் என்று பாராட்­டுப் பத்­தி­ரம் சற்று நீள­மா­கத்­தான் இருக்­கிறது.

"அடி­தடி, வணி­கப் படங்­கள் என்­றால் எனக்கு உடனே அருண் விஜய்­யின் நினைவு வரும். அதே­போல் நடி­கை­களில் ரெஜி­னா­வின் முகம்­தான் கண்­முன்னே நிற்­கும். இந்­தப் படத்­தில் அவ­ரும் ஓர் உள­வா­ளி­யாக நடித்­துள்­ளார். கதைப்­படி, அரு­ணுக்கு தேவை­யான உத­வி­க­ளைச் செய்­வார். ரெஜி­னா­வால் எந்­த­வொரு கதா­பாத்­தி­ரத்­தி­லும் சிறப்­பாக நடிக்க முடி­யும். அதி­லும் அடி­தடி படங்­கள் என்­றால் அவர் மிகப் பொருத்­த­மான தேர்­வாக இருப்­பார். கோடம்­பாக்­கத்து வணிக நாயகி என்று அவ­ரைக் குறிப்­பி­ட­லாம்," என்று சொல்­லிச் சிரிக்­கி­றார் அறி­வ­ழ­கன்.

'பார்­டர்' படத்­தில் நடிக்கும் மற்­றொரு நாயகி ஸ்டெஃபி படேல். அழ­கிப் போட்­டி­களில் பங்­கேற்று அசத்­தி­ய­வர். வெறும் காதல், பாட்டு, ஒப்புக்கு சில காட்­சி­கள் என்று வந்து போகா­மல், முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளா­ராம்.

படம் எப்­போது வெளி­யா­கும்?

"நாங்­கள் தயா­ரா­கத்­தான் உள்­ளோம். ஆனால் திரை­ய­ரங்­கு­க­ளில்­தான் வெளி­யிட வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக உள்­ளோம். அதே­ச­ம­யம் நாங்­கள் 'ஓடிடி' தளங்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­கள் அல்ல.

"இன்­றைய சூழ்­நி­லைக்கு இப்­ப­டிப்­பட்ட புதிய களங்­கள் தேவை. ஏரா­ள­மா­னோர் வீட்­டில் இருந்­த­படியே படம் பார்க்க விரும்­பு­கி­றார்­கள். அதே­சமயம் சில படங்­களை திரை­ய­ரங்­கில் பார்ப்­ப­து­தான் முழு­மை­யான மன­நி­றை­வைத் தரும். பார்­டர் படத்­தில் இந்­திய தேசி­யக் கொடி­யில் உள்ள மூன்று நிறங்­களும் காட்­சி­க­ளு­டன் பய­ணம் செய்­வதைப் பார்க்க முடி­யும். மூன்று பகு­தி­க­ளாக கதை நக­ரும்­போது இந்த நிறங்­களும் மாறு­ப­டு­வதை திரை­ய­ரங்­கில் பார்க்­கும்­போதுதான் தெளி­வாக உணர முடி­யும். 'ஓடிடி' தளங்­கள் படைப்­பா­ளி­க­ளுக்கு கூடு­தல் சுதந்­தி­ரம் தரு­கின்­றன. கருத்து சுதந்­தி­ரம் இருப்­ப­தால் அவற்­றின் வளர்ச்­சியை நான் நல்­ல­வி­த­மா­கவே பார்க்­கி­றேன்," என்­கி­றார் இயக்­கு­நர் அறி­வ­ழ­கன்.