ரூ.25 கோடியாக உயர்ந்த சிவாவின் ஊதியம்

ரூ.25 கோடியாக உயர்ந்த சிவாவின் ஊதியம்

2 mins read
dc162e25-1749-416b-b7b9-44d60ad82a6e
சிவ கார்த்திகேயன் -

சில சறுக்­கல்­க­ளைச் சந்­தித்­தா­லும், தனக்­குள்ள மதிப்பை குறைத்­துக்கொள்­ளக்­கூ­டாது என்­ப­தில் தெளி­வாக இருக்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

கோடம்­பாக்­கத்­தைக் கடந்து இப்­போது தெலுங்கு தேசத்­தி­லும் தனது கொடியைப் பறக்கவிட்­டுள்­ளார்.

நீட்டி முழக்­கா­மல் விஷ­யத்­துக்கு வரு­வோம். தான் ஒப்­பந்­த­மாகி உள்ள புதிய படத்­துக்­காக சிவ­கார்த்­தி­கே­யன் பெறப்­போ­கும் சம்­ப­ளம் 25 கோடி ரூபாய்.

நீங்­கள் மட்­டு­மல்ல, மொத்த கோடம்­பாக்­க­மும் இத்­த­க­வ­லைக் கேட்டு வாய் பிளந்­துள்­ளது. இயக்­கு­நர் அனு­தீப்­பின் இயக்­கத்­தில் உரு­வாக உள்ள படத்­துக்­கா­கத்­தான் கை நிறைய பணத்தை அள்­ளப்­போ­கி­றார் சிவா என தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக தமி­ழில் உரு­வா­கும் படத்தை உட­ன­டி­யாக மொழி மாற்­றம் செய்தோ, மறு­ப­திப்­பாகவோ தெலுங்­கில் வெளி­யி­டு­கின்­ற­னர். இத்­த­கைய படங்­களுக்­கான வர­வேற்பு நன்­றாக உள்­ள­தாம். மேலும் வசூ­லும் குறை­வின்­றிக் கிடைக்­கி­ற­தாம்.

இதைக் கவ­னித்த பிர­பல ஸ்ரீ வெங்­க­டேஸ்­வரா படத் தயா­ரிப்பு நிறு­வ­னம், இயக்­கு­நர் அனு­தீப்பை அழைத்­துப் பேசி­யுள்­ளது. புது­மு­கங்­களை வைத்து 'ஜாதி ரத்­னாலு' என்ற வெற்­றிப் படத்­தைக் கொடுத்தவர் அனு­தீப்.

நான்கு கோடி ரூபாய் செல­வில் உரு­வான அந்­தப் படம் அறுபது கோடி ரூபாய் வசூல் கண்­டது. இதனால் ஒரே படத்­தின் மூலம் பிர­ப­ல­மா­கி­விட்­டார் அனு­தீப்.

தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் ஏற்­பாட்­டில் சிவ­கார்த்­தி­கே­யனைச் சந்­தித்த அனு­தீப், தாம் தயார் செய்­துள்ள கதையைக் கூறி­யுள்­ளார்.

சிவா­வுக்­கும் கதை­பி­டித்­துப் போக உட­ன­டி­யாக நடிக்க சம்­ம­தித்­துள்­ளார்.

பிற­கென்ன... ஒரே சம­யத்­தில் தமிழ், தெலுங்கு என இரு ­மொ­ழி­க­ளி­லும் நேர­டிப் பட­மாக உரு­வா­கிறது அனு­தீப் சொன்ன கதை.

இத­னால் சிவ­கார்த்­தி­கே­ய­னின் சம்­ப­ள­மும் உயர்ந்­தி­ருக்­கிறது. முதல் முறை­யாக 25 கோடி சம்­ப­ளத்­தைத் தொட்­டி­ருக்­கி­றார் சிவா.

இப்­ப­டம் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தெலுங்கு, தமிழ் என இரு மொழி­க­ளி­லும் ஒரு படத்தைத் தயாரிக்­கும்­போது அதன் சந்தை மதிப்பு இந்­திப் படங்­க­ளுக்கு இணை­யாக அதி­க­ரிக்­கி­ற­தாம்.

மேலும், இந்தி வெளி­யீட்டு உரிமை­யும் சில கோடி கொட்­டிக் கொடுக்­கிறது என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளிகள்.