துஷாரா: எண்ணிக்கை முக்கியம் அல்ல

2 mins read

"மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நான் நடிக்­கும் புதுப்­ப­டம் வெளி­யா­னா­லும் பர­வா­யில்லை. ஆனால் அந்­தப் படத்­தில் எனது நடிப்பு அனை­வ­ரை­யும் கவ­னிக்க வைக்­கும் வகை­யில் இருக்க வேண்­டும். எனக்கு எண்­ணிக்கை முக்­கி­யமே அல்ல," என்­கி­றார் துஷாரா.

இன்று வெளி­யா­கும் 'சார்­பட்டா பரம்­பரை' படத்­தின் நாயகி இவர்­தான். இதற்கு முன்பு இவர் நடித்து வெளி­யான 'போதை ஏறி புத்தி மாறி' படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளி­யா­னது. அதன் பிறகு இயக்­கு­நர் பா. ரஞ்­சித் பார்­வை­யில் பட்டு, நடிப்பு, ஒப்­ப­னைத் தேர்­வுக்­குப் பிறகு அவ­ரது இயக்­கத்­தில் நடித்து முடித்­துள்­ளார்.

மீண்­டும் வட­சென்­னையை மையப்­ப­டுத்­தும் கதை­யு­டன் கள­மி­றங்கி உள்­ளார் ரஞ்­சித். அப்­ப­குதி மக்­க­ளின் வட்­டார மொழி, உடல்­மொழி என பல்­வேறு விஷ­யங்­களில் கவ­னம் செலுத்த வேண்­டி­யி­ருந்­த­தாம். தவிர, அனு­பவ நடி­கர்­கள் பல­ரு­டன் இணைந்து நடித்த அனு­ப­வ­மும் தம்மை உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­தா­கச் சொல்­லும் துஷாரா, தமி­ழ­கத்­தின் திண்­டுக்­கல் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்.

"என்­பு­கைப்­ப­டம் ஒன்­றைப் பார்த்­துள்­ளார் ரஞ்­சித் சார். இதை­ய­டுத்து அவ­ரது உத­வி­யா­ளர் தொடர்பு கொண்­டார். நேரில் சந்­தித்­த­போது 'சார்­பட்டா' கதையை இரு­பது நிமி­டங்­க­ளுக்கு விவ­ரித்­தார். நான் அந்­தக் கதை­யில் 'மாரி­யம்மா' என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளேன். நடிப்பு, ஒப்­ப­னைத் தேர்­வு­க­ளுக்­குப் பிற­கு­தான் என்­னைத் தேர்வு செய்­தார்.

"'கபாலி' படத்­தில் அஞ்­சலி பட்­டீல் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­க­ளுக்கு நினை­வி­ருக்­கும். மாரி­யம்­மா­வும் அப்­ப­டிப்­பட்ட ஒரு பெண்­தான். மிக தைரி­ய­சாலி. சென்னை தமி­ழில் சொல்ல வேண்­டு­மா­னால் 'செம கெத்­தான பொண்ணு'. படம் பார்க்­கும்­போது நான் இப்­ப­டிச் சொல்­வ­தற்­கான கார­ணம் புரி­யும்," என்­கி­றார் துஷாரா.

வட­சென்னை மக்­க­ளின் வழக்­க­மான நட­வ­டிக்­கை­கள், அவர்­க­ளின் நடை, உடை, பாவ­னை­கள், தமிழ் பேசும் விதம் என அனைத்­தை­யும் கவ­னித்து நடிக்க வேண்­டும் என பா.ரஞ்­சித் தொடக்­கத்­தி­லேயே வலி­யு­றுத்­தி­னா­ராம். அத­னால் அனைத்து வகை­யி­லும் மெனக்­கெட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"திண்­டுக்­கல் பெண் என்­ப­தால் சென்­னைத் தமிழ் அறவே பழக்­க­மில்லை. எழுத்­தா­ளர் தமிழ் பிர­பா­தான் எப்­ப­டிப் பேச வேண்­டும், உச்­ச­ரிப்பு குறித்­தெல்­லாம் எனக்கு சொல்­லிக் கொடுத்­தார்.

"முன்­ன­தாக, சில நாள்­க­ளுக்கு ஒத்­திகை பார்த்­தோம். நடிப்­புப் பட்­ட­றை­யின்­போது வட சென்­னை­யைச் சேர்ந்த சிலர் நேரில் வந்து பல­வற்­றைக் கற்­றுக் கொடுத்­த­னர்.

"இத­னால் நீள­மான வச­னங்­க­ளைப் பேசு­வ­தும் கூட பின்­னர் எளி­தாக இருந்­தது. வட சென்னை மக்­கள் எப்­படி உட்­கா­ரு­வார்­கள், நிற்­பார்­கள், சிகை­அ­லங்­கா­ரம் செய்து கொள்­வார்­கள் என அனைத்­துமே இப்­போது எனக்கு அத்­துப்­படி.

"குறு­கிய காலத்­துக்கு மாரி­யம்மா என்ற பாத்­தி­ர­மா­கவே மாறி­விட்­டேன். காலை­யில் எழுந்­த­வு­டன் வீட்டு வாச­லில் கோல­மி­டு­வது, விற­கு­கள் கொண்டு சமைப்­பது, வீட்­டைச் சுத்­தப்­ப­டுத்­து­வது என்று எனது சூழ்­நி­லைக்கு நேர்­மா­றான வாழ்க்­கையை சினி­மா­வுக்­காக வாழ்ந்­தி­ருக்­கி­றேன். இந்த அனு­ப­வம் அலா­தி­யா­னது.

"நாய­கி­யா­கத்­தான் நடிப்­பேன் என நிபந்­தனை விதிக்­க­மாட்­டேன். அதே­ச­ம­யம் எனது பாத்­தி­ரங்­கள் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும் வகை­யில் இருக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன்," எனத் தெளி­வாகப் பேசு­கி­றார் துஷாரா.