தமிழில் சூர்யா, மலையாளத்தில் துல்கர் சல்மான், தெலுங்கில் நானி ஆகிய மூவர்தான் தமக்குப் பிடித்தமான நடிகர்கள் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
மேலும், அந்த நடிகர்களிடம் தம்மைக் கவர்ந்த குணங்கள் குறித்தும் அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"சூர்யா யார் விஷயத்திலும் தேவையின்றி மூக்கை நுழைக்கமாட்டார். துல்கர் சல்மான் தான் நடிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர்கொடுக்க மிகவும் மெனக்கெடுவார். நானி இயல்பாகப் பேசிப் பழகுவார். மூவருமே சிறந்த நடிகர்கள்," என்று பாராட்டுகிறார் கீர்த்தி சுரேஷ்.