ஈழத்து உண்மைக் கதையைச் சொல்லும் 'ஒற்றைப் பனைமரம்'

ஈழத்து உண்மைக் கதையைச் சொல்லும் 'ஒற்றைப் பனைமரம்'

1 mins read
ce67cdb4-1588-46ca-9164-75cbe1a666f7
'ஒற்றைப் பனைமரம்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

ஈழத்­தில் நிகழ்ந்த உண்­மைச் சம்­ப­வங்­களை மைய­மாக வைத்து உரு­வாகியுள்ளது 'ஒற்­றைப் பனை­ம­ரம்'.

நேரடி வெளி­யீடு காணா­ம­லேயே இது­வரை நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட அனைத்­து­லக திரைப்­பட விழாக்­களில் பங்­கேற்­றுள்­ளது இப்­ப­டம்.

அது மட்­டு­மல்ல, சிறந்த நடி­கர், சிறந்த ஒளிப்­ப­திவு, சிறந்த இசை என 17 விரு­து­க­ளை­யும் வாங்­கிக் குவித்­தி­ருக்­கிறது.

சிறந்த இயக்­கு­நர் விருது பெற்ற 'மண்' பட இயக்­கு­நர் புதி­ய­வன் ராசை­யா­வின் இயக்­கத்­தில் இப்­படம் உரு­வா­கி­ உள்­ளது.

"ஈழத்­தில் இறு­திப்­போர் நடந்­த­போது ஏரா­ள­மான விஷ­யங்­கள் நடந்­தே­றின. இப்படம் போர் முடி­வு­றும் இறு­தி நாள்­களில் தொடங்­கும். சம­காலச் சூழ­லில் முன்­னாள் போரா­ளி­களும் மக்­களும் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கும், வார்த்­தை­களால் விவ­ரிக்க இய­லாத பல­வற்றைச் சொல்­லப் போகி­றோம். தெள்­ளத் தெளி­வாக நக­ரும் கதை­யாக 'ஒற்­றைப் பனை­ம­ரம்' உருவாகி­ உள்­ளது," என்று சொல்­லும் இயக்­கு­நர் புதி­ய­வன் ராசையா, இப் படத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை­யும் ஏற்று நடித்­துள்­ளார்.

மேலும் நவ­யுகா, அஜா­திகா புதி­ய­வன், பெரு­மாள் காசி, மாணிக்­கம் ஜெகன், தனு­வன் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருக்­கின்­ற­னர். அஷ்­வ­மித்ரா இசை­ய­மைக்க, சுரேஷ் அர்ஸ் படத்­தொ­குப்­பை­ கவனிக்­கி­றார்­கள். இப்­ப­டத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் நடை­பெற்று வரு­கின்­றன.