'பிச்சைக்காரன்-2' படம் மூலம் இயக்குநராகிறார் விஜய் ஆண்டனி. கடந்த 2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கிலும் வெற்றி பெற்றதை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது.
'பாரம்' படத்துக்காக தேசிய விருது வென்ற பிரியா கிருஷ்ணசாமி இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் விலகிக்கொள்ள, 'கோடியில் ஒருவன்' இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கப் போவதாகக் கூறினர். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜய் ஆண்டனி பிறந்தநாளை முன்னிட்டு 'பிச்சைக்காரன் 2' படத்தின் இயக்குநர் யார் என அறிவித்துள்ளனர். அதன்படி விஜய் ஆண்டனியே இப்படத்தை இயக்கி, இசையமைக் கவும் உள்ளார். இதற்கான அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருக தாஸ் வெளியிட்டுள்ளார்.

