'கம்பீரமாக வருவார் சூர்யா'

'கம்பீரமாக வருவார் சூர்யா'

3 mins read
fb509209-3ae4-4243-b9c0-3d5468925622
-

'ஜெய்­ பீம்' என்ற தலைப்பே சூர்­யா­வின் ரசி­கர்­களை மிடுக்­காக நடை­போட வைத்­துள்­ளது. இணைய ­வெ­ளி­யில் இந்­தப் படம் குறித்த விவா­தங்­கள், புது தக­வல்­கள் பர­வ­லாக காணப்­ப­டு­கின்­றன.

படத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்டி­யில் வழக்­க­றி­ஞ­ருக்­கான உடை­யில் காணப்­ப­டு­கி­றார் சூர்யா. அடி­தட்டு மக்­கள் வரி­சை­யாக அணி­வ­குத்து நிற்­ப­தை­யும் காணமுடி­கிறது.

சூர்யா கௌரவ வேடத்­தில் நடிக்­கி­றார். சில காட்­சி­களில் மட்­டுமே தோன்று­வார் என்ற தக­வலை படக்­கு­ழு­வி­னர் மறுத்­துள்­ள­னர்.

இது முழுக்க சூர்­யா­வின் பட­மா­கவே உரு­வா­கிறது என தெளி­வு­ப­டுத்தி உள்­ளார் இயக்­கு­நர் ஞான­வேல்.

சினிமா துறை­யில் காலெ­டுத்து வைக்­கும் அடுத்த ஊட­க­வி­ய­லா­ளர் இவர். படத்­தின் தலைப்­பிலேயே ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்கவேண்­டும் என விரும்­பி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"இது உணர்­வுபூர்­வ­மாக வைக்­கப்­பட்ட தலைப்பு. அத­னால் 'ஜெய் பீம்' என்­பது எல்­லாச் செயல்­பாட்­டிற்­கு­மான முழக்­க­மா­கவே பார்க்க வேண்­டும். மாறாக, பட்­டி­ய­லி­னத்­தின் அடை­யா­ள­மாக மட்­டுமே சுருக்கி­வி­டக் கூடாது.

"ஒரு பழங்­கு­டியினப்­ பெண்­ணுக்கு இ­ழைக்­கப்­பட்ட அநீ­தி­யும் அதற்கு எதி­ரான சட்­டப்­போ­ராட்­ட­மும்­தான் கதை. உரி­மை­கள் மறுக்­கப்­பட்­ட­வர்­க­ளின் ஆயு­த­மாக, அம்­பேத்­கரின் சிந்­த­னை­களே என் நினை­வுக்கு வரு­கிறது. அத­னால்­தான் இந்த தலைப்பை வைத்­தோம்," என்­கிறார் ஞான­வேல்.

சூர்­யா­வி­டம் இந்தத் தலைப்பைச் சொன்­ன­போது அவர் கொஞ்­சம்கூட தயங்காமல், பொருத்தமான தலைப்பு என்றா­ராம்.

கதைக்­கேற்ற தலைப்­பாக உள்­ளது என்­றும் இதை சாதிய அடை­யா­ளமா­கப் பார்க்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றும் கூறி­னா­ராம்.

'ஜெய் பீம்' என்­பது பொதுவெளியில் அனைத்துத் தரப்பு மக்­க­ளுக்­கு­மான முழக்­க­மா­கப் பார்க்­கப்­பட வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்று சொல்­லும் ஞான­வேல், தமி­ழில் இது­போன்ற படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்க வேண்­டும் என விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"சூர்­யா­வைப் பொறுத்­த­வரை அவர் தயா­ரிப்­பா­ள­ரா­கவே இந்­தப் படத்­துக்­குள் முத­லில் வந்­தார். பிறகு தமி­ழகத்­தின் முக்­கி­ய­மான சட்ட ஆளு­மை­களில் ஒரு­வ­ரும் கீழ்த்­தட்டு மக்­கள் மீது மிகுந்த அக்­கறை கொண்­ட­வ­ரு­மான நீதி­ய­ர­சர் சந்­துரு குறித்து பேசப்­போ­கும் படம் என்­ற­தும் அவ­ரது ஆர்­வம் அதி­க­ரித்­தது.

"நாங்­கள் வெளி­யிட்­ட 'இவர்­தான் சந்­துரு' புத்­த­கம் அவ­ரது பார்­வைக்கு வந்­த­தும், அதை முழு­மை­யா­கப் படித்­துப் பார்த்­தார். இது­போன்று நம்­மால் கொண்­டா­டப்­பட வேண்­டி­ய­வர்­கள் நிறைய பேர் உள்­ள­னர் என்ற கூற்றை அவ­ரும் ஏற்­றுக் கொண்­டார்.

"அர்ப்­ப­ணிப்­பான மனி­தர்­க­ளின் வாழ்வு பற்­றிய பதி­வு­கள் நம்­மி­டம் புத்­த­கங்­களில் இருக்­கிறது. கலைப்­ப­டைப்­பாக இல்லை. அந்­தப் பணியை தாம் முன்­னெ­டுக்க வேண்­டும் என்ற ஆவ­லு­டன் சூர்யா இந்த முயற்­சி­யில் இணைந்­தார்.

"சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் நடை­மு­றை­கள் குறித்து எந்­தப் பட­மும் முழு­மை­யாக விவரித்­த­தில்லை. முதன் முறையாக அந்­தப் பணியை நாங்கள் செய்­தி­ருக்­கி­றோம்.

''சூர்யா மாதி­ரி­யான ஒரு கதா­நா­ய­கன் அடித்­தட்டு மக்­கள் குறித்து பேசும் ஒரு கதை­யில் நடிக்­கும்­போது ஒரு மாயா­ஜா­லம் நிகழ்­கிறது. வெறு­மனே பாடம் நடத்­து­வ­தாக இல்­லா­மல், நல்­ல­தொரு கலைப்­படைப்பாக உரு­வாக்கி இருக்­கி­றோம். சூர்யா கம்பீரமான நாயகனாக வலம் வருவார்.

"இதில் இரு­ளர்­ பழங்குடியின மக்க­ளின் வாழ்க்கை­யும் பேசப்­பட்­டி­ருக்­கிறது. பழங்­கு­டிச் சமூ­க­மாக இருப்­ப­தால் அவர்­கள் மீது பல பொய் வழக்­கு­களை காவல்­து­றை­யி­னர் பதிவு செய்­துள்­ள­னர். சிறு­பான்­மை­யி­னர் என்­ப­தால் அவர்­க­ளால் அணி­தி­ரண்டு போராட முடி­ய­வில்லை.

"பசிக்­கும்­போது எலி, அணில், முயல் என்று வேட்­டை­யாடி சாப்­பிட்­டு­விட்டு, அரிசி ஆலைக்­குக் கூலி வேலைக்­குப் போய்­வி­டு­கி­றார்­கள். 'சொல்­லில் சிறந்த சொல் செயல்' என்­பார்­கள். அதன்­படி வெறும் சொல்­லாக இருக்­கும் சட்­டம் செய­லாக மாறும்­போது­தான் எல்­லாமே பலன் அளிக்­கிறது," என்­கி­றார் இயக்­கு­நர் ஞான­வேல்.

மிக விரை­வில் சமூக அக்­க­றையை முன்­னி­றுத்தி, திரை­யில் தோன்­றிப் பேசப்­போ­கும் வச­னங்­கள் பெரிய விவா­தங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் அதி­க­ரித்­துள்­ளன.

, :   

சூர்யா