தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சரண்: சொத்துகளை நான் அழிக்கவில்லை

2 mins read
09cf7656-ec17-4d16-bbbb-6ffd1ea10960
தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் சரண் (இடது). -

தன்­னைப் பற்­றி­யும் தனது குடும்­பத்தை மையப்­ப­டுத்­தி­யும் வெளி­வரும் உண்­மைக்­குப் புறம்­பான தக­வல்­கள் குறித்து வேத­னையை வெளிப்­ப­டுத்தி உள்­ளார் காலஞ்­சென்ற பாட­கர் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் மகன் எஸ்.பி.பி.சரண்.

சொந்­த­மாக திரைப்­ப­டங்­கள் தயா­ரித்­த­தன் மூலம் தன் தந்தை சேர்த்து வைத்த சொத்­து­களை தாம் அழித்­து­விட்­ட­தாகக் கூறப்­படு­வதை அவர் மறுத்­துள்­ளார்.

"நான் சில படங்­களைத் தயா­ரித்­தது அனை­வ­ருக்­கும் தெரி­யும். அவை அனைத்­துமே தர­மான படைப்­பு­கள். விமர்­சன ரீதி­யில் பாராட்­டு­கள் கிடைத்தபோதும் எனக்கு லாபம் கிடைக்­க­வில்லை.

"இயக்­கு­நர் சமுத்­தி­ரக்­கனி சொன்ன கதை பிடித்­துப்­போய் 'உன்னை சர­ண­டைந்­தேன்' படத்தை தயா­ரித்­தேன். அதற்கு மாநில அரசு விருது கிடைத்­தது. ஆனால் லாபம் வர­வில்லை.

"தெலுங்­கில் வந்த 'வர்­ஷம்' படத்தை தமி­ழில் அதிக பணம் செலவு செய்து 'மழை' என்ற பெய­ரில் எடுத்­தோம். அதில் முத­லீடு செய்த மொத்த பண­மும் போய்­விட்­டது. அப்­போது கூட அப்பா நஷ்­டம் என்­பது எல்லாத் துறை­யி­லும் ஏற்­ப­டக்­கூ­டி­யது. அதற்­காக வருத்­தப்­ப­டக் கூடாது என்று ஆறு­தல் கூறி­னார்.

"அதன்­பி­றகு வெங்­கட்­பி­ரபு இயக்­கிய 'சென்னை 28' படத்தை எடுத்­தேன். படம் வெற்றி பெற்­றது. ஆனால், எதிர்­பார்த்த பணம் வர­வில்லை. தொடர்ந்து 'ஆரண்ய காண்­டம்' படம் தயா­ரித்­தேன். அது தேசிய விரு­து­க­ளைப் பெற்­ற­தால் புகழ் வந்­தது. ஆனால் நான் எதிர்­பார்த்த லாபம் மட்­டும் கிடைக்­க­வில்லை. இத­னால் மன அழுத்­தத்­துக்கு ஆளா­னேன்," என்­கி­றார் எஸ்.பி.பி.சரண்.

இதை­ய­டுத்து குடும்­பத்­துக்கு வரு­மா­னம் தந்துகொண்­டி­ருந்த தன் தந்தைக்குச் சொந்­த­மான கோதண்­ட­பாணி ஸ்டூ­டி­யோ­வி­லும் பணி­கள் ஏதும் நடக்­கா­தது வேதனை அளித்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அந்­தச் சம­யத்­தில்­தான் குடும்பச் சொத்­துகளை தாம் அழித்­து­விட்­ட­தாக சிலர் பேசத் தொடங்­கி­ய­தாக தெரி­வித்­துள்­ளார்.

"எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யம் இத்­தனை ஆண்­டு­க­ளாக சம்­பா­தித்து வைத்த பணத்தை எல்­லாம் அவர் பெற்ற மகனே அழித்து அவரை திவா­லாக்­கி­விட்­டான். எல்லா பண­மும் போய்­விட்­டது. மொத்த சொத்­தும் கரைந்­து­விட்­டது.

"இனி­மேல் எஸ்.பி.பால­சுப்­பி­ர­மணி­யம் அவ்­வ­ள­வு­தான். பெற்ற மகனே அவர் எங்கு தன் கலை வாழ்க்­கையைத் தொடங்­கி­னாரோ, அந்த இடத்­துக்கே அவ­ரைக் கொண்டு வந்­துள்ளான் என விமர்­சித்துப் பேசி­னர். அதைக் கேட்டு வேதனை அடைந்­தேன். ஆனால், அப்­போ­தும்­கூட அப்பா, அம்மா ஆத­ர­வாக இருந்­த­னர். மேடைக் கச்சே­ரி­கள்­தான் பொரு­ளா­தார ரீதியாக எங்­க­ளுக்கு உத­வின," என்று சரண் தெரி­வித்­துள்­ளார்.

மீண்­டும் பின்­ன­ணிப் பாட­க­ராக பய­ணத்தைத் தொட­ர­லாம் என்று முடி­வெ­டுத்த போது­தான் தந்தையை இழக்க நேரிட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இப்­போது தொலைக்­காட்­சி­யில் ஒளி­யே­றும் இசை தொடர்பான நிகழ்ச்­சி­களில் பங்­கேற்பதாகக் கூறி­யுள்­ளார்.

"இனி அந்த நிகழ்ச்­சி­களில் கவ­னம் செலுத்­து­வேன். மேலும், என் தந்தை குர­லில் பாட­வும் முடிவு செய்து இருக்­கி­றேன்," என்­கி­றார் எஸ்.பி.பி.சரண்.