நடிகை நயன்தாராவை நயாகரா அருவியுடன் ஒப்பிட்டு கவிதை மழையை பொழிந்துள்ளார் அரசியல்வாதியும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பலர் வந்த வேகத்தில் சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் நிலையில், சும்மா கிள்ளியாக 15 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நாயகியாக மட்டுமே நடித்து, தனக்கான மார்க்கெட்டை சரிய விடாமல், ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளவர் நயன்தாரா.
இவர் அறிமுகமாகும்போது, இந்த அளவுக்கு இவர் வளர்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேபோல் காதல் தோல்விகளில் துவண்டாலும் அதில் இருந்து மீண்டு இன்று நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் தொழிலில் முதலீடு செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறார் நயன்தாரா. முன்னணி கதாநாயகர்களுக்கு நிகராக இவரை மட்டுமே நம்பி படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் போட்டி போட்டு நிற்கின்றனர்.
இந்நிலையில் பிரபல அரசியல்வாதியும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்திடம் ஊடகம் ஒன்று நயன்தாராவைப் பற்றி கேட்டபோது, "நயன்தாரா தமிழ்நாட்டின் திரை வரலாற்றில் அதிசயம் செய்தவர்! பொதுவாக நடிகை
கள் சில படங்களில் நடிப்பார்கள். பின்னர் தூக்கி வீசப்படுவார்கள். யாராலும் தூக்கி வீசமுடியாத அளவிற்கு தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திய அதிசயத்திற்கு பெயர் நயன்தாரா," என்று கூறியதுடன் "நயன்தாரா... அவள் நயாகரா.. அதில் நனைய பலர் விரும்புகிறார்கள்... ஆனால் நயாகராவில் நனைய அனுமதியில்லை! நயன்தாரா... எதையும் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு எனக்கு
வசதியில்லை! ஆனால் நயன்தாராவுக்கு கொடுக்க உலகத்தை வாங்கலாமா என ஆசைப்படு
கிறேன்!'' என்று கவிதையையும் கூறியது நயனின் ரசிகர்களுக்கு காதில் தேனை ஊற்றியதுபோல் இருந்தது.

