அகழ்வாராய்ச்சியாளர் வேடத்தில் சிபிராஜ்

அகழ்வாராய்ச்சியாளர் வேடத்தில் சிபிராஜ்

2 mins read
d0b28cc3-ab92-458a-bde8-c523d9e57438
-

கிஷோர் இயக்­கத்­தில் சிபி­ராஜ் நடிக்­கும் படம் 'மாயோன்'. தான்யா நாய­கி­யாக நடிக்­கி­றார்.

முதன்­மு­றை­யாக இதில் அகழ்­வா­ராய்ச்­சி­யா­ளர் கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார் சிபி­ராஜ். இதற்­காக தமது உடல் மொழியை மாற்­றிக்­கொண்­டா­ராம்.

மேலும், இடை­வி­டாத படப்­பிடிப்பு கார­ண­மாக சோர்ந்து போன­தா­க­வும் படக்­கு­ழு­வைச் சேர்ந்த அனை­வ­ருமே நூறு விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான உழைப்­பைத் தந்­துள்­ள­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

"இந்­தப் படத்­துக்­காக நூறு அடி உயர சிலை ஒன்றை உரு­வாக்க வேண்­டி­யி­ருந்­தது. இந்­தக் கடி­ன­மான பணியைக் கலை இயக்­கு­நர் தொடங்­கிய நிலை­யில், நாங்­கள் படப்­பி­டிப்­புக்­காக கிளம்­பி­னோம்.

"புதுக்­கோட்­டை­யி­லும் கும்­ப­கோணத்­தி­லும் தான் பெரும்­பா­லான காட்­சி­கள் எடுக்­கப்­பட்­டன. எனி­னும், எதிர்­பா­ராத மழை­யால் படப்­பி­டிப்பு பாதிக்­கப்­பட்­டது. இத­னால் புதுக்­கோட்­டை­யில் எடுக்க வேண்­டிய காட்­சி­களைத் திட்­டமிட்­ட­படி எடுக்க முடி­ய­வில்லை. அதற்­குள் கும்­ப­கோ­ணத்­தில் படப்­பிடிப்பைத் தொடங்க வேண்­டிய நிலை.

"இத­னால் தின­மும் கும்­ப­கோணத்­தில் இருந்து அதி­கா­லை­யி­லேயே புறப்­பட்டு புதுக்­கோட்டை செல்­வோம். அங்கு சில காட்­சி­க­ளைப் பட­மாக்கி கையோடு கும்­ப­கோ­ணம் வந்­து­வி­டு­வோம். பின்­னர் அங்­கும் படப்­பி­டிப்பு நீடிக்­கும். இப்­படி இடை­வி­டா­மல் பய­ணம் மேற்­கொண்­ட­தா­லும் படப்­பி­டிப்பை நடத்­தி­ய­தா­லும் படக்­கு­ழு­வில் இருந்த அனை­வ­ருமே சோர்ந்­து­விட்­டோம்.

"ஒளிப்­ப­தி­வா­ளர் 'கிரேன்' வாக­னத்­தில் ஏறி அமர்ந்து காட்­சி­களை எடுப்­பார். சிறிது நேரம் இடை­வெளி கிடைத்­தால், 'கிரேனி'ல் அமர்ந்­த­படி அந்­த­ரத்­தி­லேயே அவர் தூங்கு­வதை பல­முறை பார்த்­தி­ருக்­கி­றேன்.

"அகழ்­வா­ராய்ச்­சி­யா­ளர் என்­ப­தால் எனது தோற்­றத்­தில் சில மாற்­றங்­கள் இருப்­பது கண்­ணுக்­குத் தெரி­யும். அதை­விட முக்­கி­ய­மாக இந்­தப் படத்­தில் எனது உடல்­மொழியை மாற்ற ஓர­ளவு மெனக்­கெட்­டேன். எப்­போ­தும் ஏதோ ஒரு சிந்­த­னை­யில் மூழ்கி இருப்­பது போன்­றும் அறி­வாற்­றல் நிறைந்த இளை­ஞ­னா­க­வும் காட்­சி­ய­ளிப்­பேன்.

"அகழ்­வா­ராய்ச்­சி­யில் கிடைத்த பொருள்­கள் குறித்து நான் சில காட்­சி­களில் பேச வேண்டி இருந்­தது. இத­னால் படப்­பி­டிப்­புக்கு முந்­தைய நாளே என்­னென்ன பொருள்­கள் குறித்­துப் பேச வேண்­டும் எனக் கேட்­டுக்கொள்­வேன்.

"பின்­னர் வாள், கேட­யம் உள்­ளிட்ட அந்­தப் பொருள்­களை ஒரு­முறை நேரில் பார்த்­து­வி­டு­வேன். இதன் மூலம் அவற்றை என் கையில் வைத்­துக்கொண்டு வச­னங்­க­ளைப் பேசும்­போது அவை எனக்கு முன்பே தெரிந்த பொருள்­கள் என்ற உணர்­வு­டன் இயல்­பாக நடிக்க முடிந்­தது," என்­கி­றார் சிபி­ராஜ்.

கதா­நா­யகி தான்யா குறித்து?

"நல்ல நடிகை. குறிப்பிட்ட ஒரு காட்சியில் நான் சில நிமி­டங்­கள் நீடிக்­கும் வச­னங்­க­ளைப் பேச வேண்டி இருந்­தது. அதற்­காக மிக­வும் சிர­மப்­பட்டு அவற்றை மனப்­பா­டம் செய்­தி­ருந்­தேன். ஆனால் கடைசி நேரத்­தில் காட்­சியை மாற்றி விட்டனர். தான்யா அந்த வச­னங்­களைப் பேசு­வார் என்­பதை அறிந்­தேன். இப்படி கடைசி நேரத்­தில் சொன்­ன­போ­தி­லும், அந்த வச­னங்­களை சிறப்­பா­கப் பேசி நடித்­தார் தான்யா," என்கிறார் சிபிராஜ்.