சூர்யா, பாலா கூட்டணி

சூர்யா, பாலா கூட்டணி

3 mins read
5d1f8998-3b82-4c41-b6a4-b879e5120529
சூர்யா -

கொரோனா பிடி­யில் இருந்து முழு­மை­யாக விடு­படும் நேரம் நெருங்­கி­விட்­ட­தா­கவே கோடம்­பாக்­கத்­தில் பேசப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து புதுப்­ப­டங்­கள் குறித்த அறி­விப்­பு­கள் தொடர்ந்து வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் இயக்­கு­நர் பாலா­வின் அடுத்த படத்­தில் நடிக்க சூர்யா ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

பாலா­வின் படங்­க­ளுக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் எப்­போ­துமே ஒரு­வித எதிர்­பார்ப்பு இருக்­கும். மேலும், அவ­ரது படைப்­பு­கள் குறித்து கல­வை­யான விமர்­ச­னங்­களும் வெளி­வ­ரும். எனி­னும் பாலா இவை எதை­யும் கண்­டு­கொள்­ளாத ரகம். தன் போக்­கில் படங்­களை இயக்கி வரு­கி­றார்.

'சேது' படத்­தின் மூலம்­தான் விக்­ர­மின் திரைப்­ப­ய­ணம் உச்­சத்­துக்­குச் சென்­றது. அத­னால் தனது மகன் துருவ்­வும் பாலா படத்­தில்­தான் அறி­மு­க­மாக வேண்­டும் என்று அவர் மிக­வும் விரும்­பி­னார்.

தெலுங்­கில் வெற்­றி­பெற்ற 'அர்­ஜுன் ரெட்டி' படத்­தின் மறு­ப­திப்பு உரி­மை­யைப் பெற்று 'வர்மா' என்ற பெய­ரில் துருவ் நடித்த படத்தை இயக்­கி­னார் பாலா. ஆனால் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப அமை­ய­வில்லை என வருத்­தம் அடைந்­தார் விக்­ரம்.

படத் தயா­ரிப்­புத் தரப்போ, மீண்­டும் முழுப் படத்­தை­யும் உரு­வாக்­க­லாம் என்ற யோச­னையை முன்­வைத்­தது. இத­னால் கோப­ம­டைந்த பாலா, படக்­கு­ழு­வில் இருந்து விலக, வேறொரு இயக்­கு­நர் துருவ்வை வைத்து 'ஆதித்ய வர்மா' படத்தை எடுத்­தது தனிக்­கதை. ஆனால் இந்த விவ­கா­ரத்­துக்­குப் பிறகு பாலா கடும் மன உளைச்­ச­லில் இருந்­தா­ராம். அடுத்த சில மாதங்­க­ளுக்கு அவ­ரைப் பற்றி எந்­தத் தக­வ­லும் இல்லை.

பின்­னர் ஆர்யா, அதர்வா இரு­வ­ரை­யும் வைத்து அவர் ஒரு படத்தை இயக்­கு­வ­தா­கக் கூறப்­பட்­டது. பின்­னர் அருள்­நி­தி­யு­டன் கூட்­டணி அமைத்­துள்­ளார் என்­ற­னர். தனது இயக்­கத்­தில் நடித்த கதா­நா­ய­கர்­க­ளு­டன் மீண்­டும் இணை­வ­தைத்­தான் அவர் விரும்­பு­தா­க­வும் கூறப்­பட்­டது.

"இந்­நி­லை­யில் பாலா­வும் சூர்­யா­வும் மீண்­டும் இணைந்து பணி­யாற்ற இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. இது வழக்­கம் போல் ஓர் ஆரு­டத் தக­வல் அல்ல. இரு­வ­ரும் அண்­மை­யில் நேரில் சந்­தித்­துப் பேசி­னர். அப்­போது பாலா கூறிய கதை தமக்­குப் பிடித்­தி­ருப்­ப­தா­கச் சூர்யா சொல்லி இருக்­கி­றார்.

"எனி­னும் சூர்­யா­வு­டன் இணை­யும் பட வேலை­களை சற்று ஒத்­தி­வைத்­தார் பாலா. கார­ணம், அதற்கு முன்­பா­கவே அதர்­வாவை வைத்து ஒரு படம் இயக்க உள்­ளார். இந்­தப் படத்தை சூர்­யா­வின் சொந்­தப் படத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான 2டி தயா­ரிக்­கிறது.

"அதற்­கான முதற்­கட்­டப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இந்­தப் படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது. சிறிய இடை­வெ­ளிக்­குப் பிறகு பாலா மீண்­டும் கள­மி­றங்கி உள்­ளார். அத­னால் படம் குறித்த எதிர்­பார்ப்பு அதி­க­ரித்து வரு­கிறது," என்­கி­றார்­கள் கோடம்­பாக்க விவ­ரப் புள்­ளி­கள்.

இதற்­கி­டையே சூர்­யா­வின் தம்பி கார்த்தி 'சர்­தார்' படத்­தில் நடித்து வரு­கி­றார். இதில் அவ­ருக்கு இரட்டை வேடங்­கள் எனத் தெரி­ய­ வந்­துள்­ளது.

சரி, முக்­கிய விஷ­யத்­தைப் பார்ப்­போம். தற்­போது 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் கார்த்தி. அதை முடித்­த­வு­டன் கொம்­பன் முத்­தையா இயக்­கும் படத்­தின் படப்­பி­டிப்­பில் பங்­கேற்க உள்­ளார்.

அதை முடித்த பிறகே 'சர்­தார்' வேலை­களில் ஈடு­ப­டு­வா­ராம்.

கிரா­மத்­துப் பின்­ன­ணி­யில் உரு­வா­கும் இப்­ப­டத்­தில் அதி­ரடி சண்­டைக் காட்­சி­கள் அதி­க­மாம்.

'சர்­தார்' படத்­தில் வய­தான வேடத்­தி­லும் தோன்­று­வார் கார்த்தி. இப்­ப­டத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டிக்­குப் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இதற்­கி­டையே தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்க உள்­ளார் நடி­கர் வடி­வேலு. இது முன்­னணி ஓடிடி நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பாம்.

முழு­நீள நகைச்­சுவை நிகழ்ச்­சி­யாக உரு­வா­கிறது. இளம் தலை­மு­றை­யி­னர் மத்­தி­யில் உள்ள சிறந்த நகைச்­சு­வைக் கலை­ஞர்­களை அடை­யா­ளம் காண்­ப­து­தான் இந்த நிகழ்ச்­சி­யின் நோக்­கமாம்.