நெகிழ வைத்த ஜோதிகா

நெகிழ வைத்த ஜோதிகா

3 mins read
0374237c-ce8e-4121-b798-8841ef9eeb0e
, :   ஜோதிகா -

ஜோதி­கா­வின் ஐம்­ப­தா­வது பட­மாக உரு­வாகி வரு­கிறது 'உடன்­பி­றப்பே'. 'கத்­துக்­குட்டி' படம் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­களைத் தன் பக்கம் திரும்­பிப் பார்க்க வைத்த இரா. சர­வ­ணன் இயக்­கும் இரண்­டா­வது படம் இது.

இது ஜோதி­கா­வுக்கு ஐம்­ப­தா­வது படம் என்­ப­தால் தமக்கு எந்­த­வித அழுத்­த­மும் இல்லை என்­கி­றார் சர­வ­ணன். முதற்­கட்ட படப்­பி­டிப்பு முடிந்த பிற­கு­தான் இந்த விவ­ரம் இவ­ருக்­குத் தெரிய வந்­த­தாம்.

"தனது ஐம்­ப­தா­வது படத்தை இயக்­கும் பொறுப்பை அவர் என்­னி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளார் என்­பது பெருமை தரும் விஷ­யம். அந்த அள­வுக்கு அவ­ருக்கு என் கதை மீது நம்­பிக்­கை­யா­க­வும் இந்த வாய்ப்பை பார்க்­கி­றேன்.

"தமி­ழ­கத்­தில் கஜா புயல் வீசி­ய­போது, சூர்யா ரசி­கர் மன்­றத் தலை­வர் பர­மு­வும் அவ­ரது குழு­வி­ன­ரும் எங்­க­ளு­டைய கிரா­மங்­க­ளுக்கு வந்­த­னர்.

'அப்­போது ஒரு வீட்­டுச்­சு­வ­ரில் மாட்­டப்­பட்டு இருந்த நாளேட்­டில் மகா­லட்­சு­மி­யின் புகைப்­ப­டத்­தின் மீது ஜோதிகா படத்தை ஒட்டி வைத்­தி­ருந்­த­னர்.

'அதைக் கண்டு ரசி­கர் மன்­றத்­தி­ன­ருக்கு ஆச்­ச­ரி­யம்.

"அந்த அள­வுக்கு கிரா­மங்­களில் ஜோதி­காவை மரி­யா­தை­யும் அன்­பு­மா­கப் பார்க்­கி­றார்­கள்.அந்த அன்பை இந்­தப் படம் பன்­ம­டங்­காக அதி­க­ரிக்­கும் என நம்­பு­கி­றேன்.

'இந்­தப் படத்­தில் நெஞ்­சைப் பிழி­யும் வச­னங்­கள் இருக்­காது. ஆனால், வெறும் பார்வை­யா­லும் தத்­த­ளிப்பை வெளிப்­ப­டுத்­தும் முக பாவங்­க­ளா­லும் நம்மை கண்­க­லங்­கச் செய்­து­வி­டு­வார் ஜோதிகா. அத­னால்­தான் அவரை தங்­கள் மண்­சார்ந்த மனுஷி­யாக மக்­கள் பார்க்­கி­றார்­கள். அவ­ரும் அது­வா­கவே மாறி இருக்­கி­றார்," என்­கி­றார் இரா.சர­வ­ணன்.

படப்­பி­டிப்பைத் தொடங்­கும் முன்­னர் கம்­பீ­ர­மான கிரா­மத்­துப் பெண்­ணாக ஒப்­பனை போட வேண்­டும் என்று ஜோதி­கா­வி­டம் கேட்­டுக் கொண்­டா­ராம்.

மேலும், எப்­படி தோற்­ற­ம­ளிக்க வேண்­டும் என்­பதை சிறு கோடு­க­ளைக் கொண்ட சிறிய ஓவி­ய­மாக வரைந்து காட்­டி­னா­ராம். மறு­நாள் ஜோதிகா அதே­போன்ற தோற்­றம், ஒப்­ப­னை­யு­டன் வந்து அசத்­தி­னா­ராம்.

இரட்டை மூக்­குத்தி, தங்­கச்­சங்­கிலி நெற்­றிப்­பொட்டு என தனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக அச்சு அசல் தஞ்­சா­வூர்த் தமி­ழச்­சி­யாக மாறி­உள்­ளார் ஜோதிகா.

"ஒப்­பனை தொடங்கி தனக்­கான உடை­கள் வரை அனைத்­தும் கச்­சி­த­மாக இருக்க வேண்­டும் என்­ப­தில் அவர் கவ­ன­மாக உள்­ளார். முதல் நாள் ஜோதிகா வந்­த­போது படப்­பி­டிப்பைப் பார்க்­கத் திரண்டு நின்ற கிரா­மத்து மக்­களே அசந்­து­போ­யி­னர்," என்­கி­றார் சர­வ­ணன்.

'உடன்­பி­றப்பே' படத்­தில் சசி­கு­மார், சமுத்­தி­ர­கனி, சூரி என்று பல முன்­னணி நடி­கர்­களும் உள்­ள­னர். அனை­வ­ருமே கன­மான கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். அத­னால் ரசி­கர்­கள் தர­மான படைப்பை எதிர்­பார்க்­க­லாம் என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார்.

"சமுத்­தி­ர­கனியிரி­டம் மரி­யா­தை­யு­டன் கூடிய அன்பு வைத்­தி­ருக்­கி­றேன். சூரி அண்­ண­னு­டன் சண்டை போட்டு சமா­தா­னம் ஆகிற அள­வுக்கு உரிமை உள்­ளது. இந்­தப் படத்­துக்­கான படப்­பி­டிப்­புக்கு கிளம்­பும்­போதே எனக்­கும் அவ­ருக்­கும் சண்டை. அடுத்த பத்து நாள்­க­ளுக்கு இரு­வ­ரும் பேசிக்­கொள்­ள­வில்லை.

"பிறகு சூரி அண்­ணன் மனை­வி­யும் என் மனை­வி­யும் தொலை­பேசி வழி இடை­வி­டா­மல் தொடர்பு கொண்டு பேசிய பிற­கு­தான் இரு­வ­ரும் சமா­தா­ன­மாகி பேசத் தொடங்­கி­னோம். 'இவ­ரைப் போல் வாழ வேண்­டும்' என நான் நினைக்­கும் ஒரே மனி­தர் என்­றால் அது நடி­கர் சசி­கு­மார். திரை­யில் மட்­டு­மல்ல, நிஜ வாழ்க்­கை­யி­லும் நேர்­மை­யான, பாச­மான மனி­தர்.

'கத்­தி­யால் குத்­தி­விட்டு 'மன்­னிப்பு' கேட்­டால்­கூட, 'சரி விடுங்க' என்று சொல்­லும் வெள்­ளந்தி மனி­தர். படப்­பி­டிப்பு முடிந்­த­தும் மிகுந்த மன­நி­றை­வு­டன் இருப்­ப­தாகக் குறிப்­பிட்டு என்­னைப் பாராட்­டி­னார். மேலும், ஒரு தங்­கச் சங்­கி­லி­யும் அணி­வித்­தார்.

'நான் வேண்­டாம் என்று மறுத்­த­போது, 'உங்­களை நம்­பிப் பத்­துப் படம்­கூட தயா­ரிக்­க­லாம்' என்று தட்­டிக்­கொ­டுத்­த­போது, உண்­மை­யா­கவே கண்­க­லங்­கி­விட்­டேன். இவை எல்லாம்தான் நம் உழைப்புக்கு கிடைக்கும் உண்மையான வரவேற்பு," என்­கி­றார் இரா. சர­வ­ணன்.