ரெஜினா நடிப்பில் உருவாகி உள்ள 'சூர்ப்பனகை' படத்தின் முதல் தோற்றச்சுவரொட்டி நேற்று வெளியானது.
இதற்கு இணையத்தில் கிடைத்துள்ள வரவேற்பு தமக்குப் பெரும் உற்சாகம் அளித்திருப்பதாகச் சொல்கிறார் ரெஜினா.
"முதன்முறையாக இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக நடித்துள்ளேன். இதன் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
"இயக்குநர் கார்த்திக் ராஜு என்னிடம் கதை சொன்னபோது காட்சிகளை எவ்வாறு விவரித்தாரோ, நூறு விழுக்காடு அதேபோன்று படமாக்கி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. இந்தப் படம் எனது திரையுலக வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு செய்த படைப்பாக இருக்கும்," என்கிறார் ரெஜினா.
'சூர்ப்பனகை'யில் இவருடன் அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து முதல்தோற்றச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

