சென்னை சாலிகிராமத்தில் வசித்துவந்த 'சேரன் பாண்டியன்' பட நடிகை சித்ரா, 56, மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை காலமானார்.
1980களில் தமிழ்ச் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் சித்ரா.
'சேரன் பாண்டியன்' படத்தின் மூலமாக பிரபலமடைந்த நடிகை சித்ரா, அதன்பிறகு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடிக்க, 'நல்லெண்ணெய் சித்ரா' என்பது இவரது அடைெமாழி பெயராக மாறிப்போனது.
கணவர் விஜயராகவன், மகள் மகாலட்சுமியுடன் வசித்துவந்த சித்ராவின் உடல், நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த மே 21ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சித்ரா, "21ஆம் நூற்றாண்டு, வருடமும் 21, நாளும் மே 21 என்று சொல்லி சிலர் வாழ்த்தியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,'' என விகடன் நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இப்போது அதே 21ஆம் தேதியில் சித்ரா மரணமடைந்திருப்பது அவரது அபிமானி களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
'அவள் அப்படித்தான்' படத்தில் கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ரஜினிகாந்த் நடித்த 'ஊர்க்காவலன்', 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' உட்பட 300க்கும் மேலான தமிழ், மலையாள மொழிப்படங்களில் நடித்துள்ளார் சித்ரா.
இவர் கடைசியாக நடித்த 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' என்ற படம் கடந்த 2020ல் வெளியானது.

