கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும், “இது மகிழ்ச்சியான, சிறப்பான தருணம். இது என்றென்றும் நினைவுகூரத்தக்க நாள்,” என்று தமது பதிவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

கவுண்டமணி கடைசியாக நடித்த படம் ‘வாய்மை’. அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் தன் மனதுக்குப் பிடித்தமான ஒரு கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவரை எதற்காக சந்தித்தார் என்று குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை தனது படத்தில் நடிக்குமாறு சிவகார்த்திகேயன் கோரிக்கை விடுத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!