ரத்தம் சிந்தி நடித்த ஆஷ்னா

ரத்தம் சிந்தி நடித்த ஆஷ்னா

3 mins read
645fee58-cc04-479e-86c6-75fe28f40c05
-

"சினி­மா­வில் நடிப்­பதை சிலர் சாதா­ரண விஷ­ய­மா­க­வும் சொகு­சான வேலை என்­றும் கரு­து­கி­றார்­கள். ஆனால், ஒவ்­வொரு படத்­துக்­கா­க­வும் எந்த அள­வுக்கு கடு­மை­யாக உழைக்­கி­றோம் என்­பது எங்­க­ளுக்­குத்­தான் தெரி­யும்," என்­கி­றார் ஆஷ்னா சவேரி.

சந்­தா­னத்­து­டன் நடித்­த­தன் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மாகி உள்ள இவர், இப்­போது 'கன்­னித்­தீவு' படத்­தில் நடித்து வரு­கி­றார். வர­லட்­சுமி சரத்­கு­மார், சுபிக்‌ஷா, ஐஸ்­வர்யா தத்தா என மேலும் மூன்று நாய­கி­கள் உள்­ள­னர்.

அண்­மை­யில் இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு கேர­ளா­வில் உள்ள கட­லோ­ரக் கிரா­மப் பகு­தி­யில் நடை­பெற்­றது. அங்கு எடுக்­கப்­பட்ட ஒவ்­வொரு காட்­சிக்­கா­க­வும் இந்த நான்கு நாய­கி­களும் கடு­மை­யாக உழைக்க வேண்­டி­யி­ருந்­த­தாம். அந்த அனு­ப­வங்­களை அண்­மைய பேட்­டி­யில் விவ­ரித்­துள்­ளார் ஆஷ்னா.

"கேரள கடற்­ப­கு­தி­யில் முக்­கி­ய­மான சண்­டைக்­காட்சி ஒன்­றைப் பட­மாக்­கி­னர். பட­கில் அமர்ந்­தி­ருக்­கும் நாங்­கள் திடீ­ரென தண்­ணீ­ரில் குதித்து எதி­ரி­க­ளின் இடத்தை அடை­வது போன்ற காட்சி அது. இயக்­கு­நர் 'ஆக்­‌ஷன்' என்று சொன்­ன­தும் நால்­வ­ரும் குதித்­து­விட்­டோம். ஆனால் ஒரு 'டேக்'கிலேயே அக்­காட்­சியை பட­மாக்க முடி­ய­வில்லை.

"அத­னால் மீண்­டும் மீண்­டும் தண்­ணீ­ரில் மூழ்கி எழுந்­த­தால் கடல் நீரை என்­னை­யும் அறி­யா­மல் குடித்­து­விட்­டேன். இத­னால் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டு­வி­டக் கூடாது என்­ப­தால் அவ்­வப்­போது சில மருந்­து­களை உட்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது," என்­கி­றார் ஆஷ்னா.

அது மட்­டு­மல்ல, கட­லில் உள்ள விஷத்­தன்மை வாய்ந்த செடி­கள், தாவ­ரங்­க­ளுக்கு அருகே செல்ல வேண்­டாம் என்­றும் படக்­கு­ழு­வி­னர் எச்­ச­ரித்து இருந்­த­ன­ராம். இத­னால் ஒவ்­வொரு நிமி­ட­மும் பயந்­த­ப­டியே இருந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், சில சம­யங்­களில் கட­லுக்கு மத்­தி­யில் உள்ள சிறிய மரத்­தில் இருந்து குதிப்­பது போன்ற காட்சி பட­மாக்­கி­ய­போது உட­லில் சிராய்ப்­பு­கள் ஏற்­பட்­டது என்­கி­றார்.

"ஒரு­முறை அப்­படி நடித்­த­போது கால் மூட்டு பிச­கி­விட்­டது. வலி­யால் துடித்­தேன். நல்ல வேளை­யாக அன்­றைய தினம் அந்­தக் காட்­சி­யு­டன் படப்­பி­டிப்பு முடி­வுக்கு வந்­தது.

"இதே­போல் சென்­னை­யில் உள்ள ஒரு தொழிற்­சா­லை­யில் மற்­றொரு சண்­டைக்­காட்­சி­யைப் பட­மாக்­கி­னர். நான்கு கதா­நா­ய­கி­களும் அதில் பங்­கேற்­றோம். இம்­முறை உடல் உழைப்பு அதி­கம் தேவைப்­பட்­டது. அங்­கும் இங்­கும் பறந்து பறந்து சண்­டை­யிட்­ட­தில் எல்­லோ­ருமே சோர்ந்­து­விட்­டோம்.

"அப்­போது என்­னு­டன் சண்­டை­யிட்ட ஒரு சண்­டைக் கலை­ஞரை தவ­று­த­லாக முகத்­தில் குத்­தி­விட்­டேன். அவ­ருக்கு கடும் வலி ஏற்­பட்­டி­ருக்­கும். ஆனா­லும் அதை மறைத்­துக்­கொண்டு தொடர்ந்து நடித்­தார்.

"காட்சி பட­மாக்­கப்­பட்­ட­தும் அவ­ரி­டம் மன்­னிப்பு கோரி­னேன். அவர் 'பர­வா­யில்லை' என்று சொல்­லி­விட்­டா­லும், இப்­போ­தும்­கூட அவ­ருக்­காக என் மனம் வருந்­து­கிறது," என்­கி­றார் ஆஷ்னா.

ஒரு சண்­டைக்­காட்­சி­யில் ஆஷ்னா வேக­மாக ஓடி வந்து பெரிய கண்­ணா­டித் தடுப்பு ஒன்­றில் மோது­வது போல் நடிக்க வேண்­டி­யி­ருந்­த­தாம். தகுந்த முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் அதில் தைரி­ய­மாக நடித்­தா­ராம்.

"சண்­டைப் பயிற்­சி­யா­ளர் சொல்­லிக் கொடுத்­த­படி சரி­யான நேரத்­தில் கண்­ணா­டி­யில் மோத வேண்­டும்.

"இல்­லை­என்­றால் பலத்த காயம் ஏற்­படும். இதை முன்­கூட்­டியே என்­னி­டம் விவ­ரித்­து­விட்­ட­னர். காட்சி பட­மாக்­கப்­பட்­ட­போது நான் நேரம் தவ­றா­மல் கச்­சி­த­மாக நடித்­தேன்.

"ஆனால், அந்த பெரிய கண்­ணாடி தடுப்பு உடைந்து நொறுங்­கி­ய­போது அதன் துண்­டு­கள் பறந்­தன.

"என் மீது அவை பட்­டு­வி­டா­மல் இருக்க கையை உயர்த்தி தடுத்­த­போது, அவை என் உள்­ளங்­கை­க­ளைப் பதம்­பார்த்­தன. இப்­படி ரத்­தம் சிந்தி இந்­தப் படத்­தில் நடித்­தி­ருக்­கி­றேன்.

"படம் வெற்றி பெற்­றால் இந்த உழைப்பு வீண் போக­வில்லை என்ற மகிழ்ச்சி ஏற்­படும்," என்­கி­றார் ஆஷ்னா சவேரி.

தற்­போது தமிழ், தெலுங்கு படங்­களில் கவ­னம் செலுத்­தும் இவர், சம்­பள விஷ­யத்­தில் கறார் காட்­டு­வ­தில்லை என நல்ல பெயர் வாங்கி உள்ளார்.

ஆஷ்னா சவேரி

, :   