'புகழை இழக்க மனமில்லை'

'புகழை இழக்க மனமில்லை'

1 mins read

விரு­து­க­ளுக்­கா­க­வும் புக­ழுக்­கா­க­வும்­தான் தாம் திரையு­ல­கில் நீடிப்பதாகக் கூறப்­ப­டு­வதை மறுக்­கி­றார் தமன்னா.

தமக்கு அப்­ப­டி­யோர் எண்­ணம் இல்லை என்­பதை ரசி­கர்­கள் புரிந்து­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

"பணத்­துக்­கா­கத்­தான் சினி­மா­வில் நடிக்­கி­றீர்­களா? என்று கேட்­கப்­பட்­டால், 'ஆமாம்' என்று தயங்­கா­மல் ஒப்­புக்­கொள்­வேன். சினிமா என்­பது நான் சார்ந்­துள்ள ஒரு தொழில். அதற்­காக நான் கடு­மை­யாக உழைக்­கி­றேன். அப்­ப­டி­யெனில் எனது உழைப்­புக்கு உரிய பணத்தை நான் பெறு­வ­தில் என்ன தவறு?" என்று கேட்­கி­றார் தமன்னா.

திரை­யு­ல­கில் முதல் இடத்­தைப் பிடிக்க வேண்­டும், ஹாலி­வுட் நடிகை­க­ளுக்கு இணை­யாக சம்­ப­ளம் வாங்க வேண்­டும் என்­பது போன்ற இலக்­கு­கள் எது­வும் தமன்னா­வி­டம் இல்லை.

புக­ழுக்­காக ஆசைப்­ப­ட­வில்லை என்­றா­லும் இது­வரை கிடைத்த புகழை இழக்க மன­மில்லை என்றும் சொல்­கி­றார்.