சந்தானத்துடன் நடிக்க மறுக்கும் நாயகிகள்

2 mins read
10040393-b9a7-403f-9f9f-2061620f9b9b
'டிக்கிலோனா' படத்தின் ஒரு காட்சியில் சந்தானம். -

சந்­தா­னத்­து­டன் இணைந்து நடிக்க இளம் நாய­கி­கள் பலர் தயங்­கு­வது தமக்கு வருத்­தம் அளிப்­ப­தாக இயக்­கு­நர் கார்த்­திக் யோகி கூறு­கி­றார். சந்­தா­னம் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'டிக்­கி­லோனா' படத்­தின் இயக்­கு­நர் இவர்­தான்.

இந்­தப் படத்­துக்­கான கதையை எழு­தும்­போது சந்­தா­னம்­தான் தன் நினை­வுக்கு வந்­த­தா­கச் சொல்­பவர், அவ­ரது உழைப்பு தம்மை பிர­மிக்க வைத்­த­தாக அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"என் நண்­பர் ஒரு­வ­ரு­டைய வாழ்க்­கை­யில் நடந்த சம்­ப­வங்­களைக் கொண்டு இந்­தப் படத்­தின் கதையை உரு­வாக்­கி­னேன். ஒரு­நாள் நண்­பர்­கள் பலர் ஒன்­றாக அமர்ந்து பேசிக் கொண்­டி­ருந்­தோம். அப்­போது கால இயந்­தி­ரம் ஒன்று கிடைத்­தால் என்ன செய்­வீர்­கள் என்ற கேள்­வியை எழுப்பி விவாதம் நடத்­தி­னோம். அப்­போது ஒரு நண்­பர், 'அப்­ப­டிப்­பட்ட வாய்ப்பு கிடைத்­தால், எனக்கு நடந்த திரு­ம­ணத்தை நிறுத்­தி­வி­டு­வேன்' என்­றார். அதை அடிப்­ப­டை­யாக வைத்து­தான் 'டிக்கி­லோனா' படத்­துக்­கான கதைக்­களத்தை அமைத்­தேன்.

"பல ஆண்­டு­க­ளுக்கு முன் வெளி­யான, 'ஜென்­டில்­மேன்' படத்­தில் 'டிக்­கி­லோனா' எனும் வார்த்தை­யைப் பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பார்­கள். அதில் இடம்­பெற்ற ஒரு காட்­சி­யில், செந்­தில் சார் 'டிக்­கி­லோனா டிக்­கி­லோனா' என்று தலை­கு­னிந்­த­படி சொல்­லிக் கொண்டே பின்­னோக்கி வரு­வார். அப்­போது கவுண்­ட­மணி அவரை எட்டி உதைப்­பார்.

"எனது கதை­யும் கால இயந்­தி­ரத்­தின் உத­வி­யோடு பின்­னோக்­கிச் செல்­கிறது என்­ப­தால் இந்த தலைப்பை தேர்வு செய்­தோம். இதைக் கேட்ட அனை­வ­ருமே பொருத்­த­மான தலைப்பு என்று பாராட்­டு­கி­றார்­கள்," என்­கி­றார் கார்த்­திக் யோகி.

இதில் சந்­தா­னம் மூன்று வித­மான தோற்­றங்­களில் வரு­வ­து­டன் மாறு­பட்ட நடிப்­பி­லும் அசத்தி உள்­ள­தா­கச் சொல்­லும் படக்­கு­ழு­வி­னர், தின­மும் தமது சிகை­ய­லங்­கா­ரத்தை­யும் உடை­க­ளை­யும் குறைந்­த­பட்­சம் இரு­பது முறை மாற்­றி­ய­போ­தும் சந்­தா­னம் சலிப்­ப­­டை­ய­வில்லை என்­கி­றார்.

"இந்­தப் படத்­துக்­காக நான் மேற்கொண்ட முயற்­சி­களை வார்த்தைக­ளால் விவ­ரிக்க இய­லாது. கிட்­டத்­தட்ட எட்டு ஆண்டுக்­கால போராட்­டம் இது.

"ஆனால் இந்­தப் போராட்­டத்தை­விட, எனது படத்­துக்கு கதா­நா­ய­கியை தேடிப்­பி­டிப்­ப­தற்­கு­த்தான் அதி­கம் அலைந்து திரிந்­தேன் என்று சொல்­ல­லாம். இரு­பத்து ஐந்து நாயகி­க­ளை­யே­னும் சந்­தித்து இருப்­பேன். ஆனால் ஒரு­வர்­கூட என் படத்­தில் நடிக்க முன்­வ­ர­வில்லை.

"ஒருசிலர் சந்­தா­னம்­தான் கதா­நா­ய­கன் என்று சொன்­ன­தும் கதை பிடித்­தி­ருந்த போதும் நடிக்­கத் தயங்­கி­னர்.

"நகைச்­சுவை நடி­கர் என்று பெய­ரெ­டுத்த சந்­தா­னம், அந்­தப் பிம்­பத்தை உடைத்­தெ­றிந்­து­விட்டு நாய­க­னாக நடிக்­கத் தொடங்கி உள்­ளார். இதற்­காக அவ­ரை உற்­சா­கப்­ப­டுத்த வேண்­டும்.

"அவர் எவ்­வ­ளவு புக­ழு­ட­னும் வாய்ப்­பு­க­ளு­ட­னும் வலம் வந்­தார் என்­ப­து நமக்­குத் தெரி­யும். அவர் எடுத்­துள்ள இந்த முடி­வால் எவ்­வளவு இழந்து இருப்­பார் என்­பது எனக்­குத் தெரி­யும். லட்­ச­ணக்­க­ணக்­கில் சம்­ப­ளம் பெற்ற ஒரு­வர் அதை­யெல்­லாம் உத­றி­விட்டு, நாய­கனாக நடிப்­பது பெரிய விஷயம்," என்கிறார் கார்த்திக் யோகி.