நடிகர் ஆன மருத்துவர்

நடிகர் ஆன மருத்துவர்

3 mins read
648b4b4a-6512-4c3f-9fa4-042288a4bf68
-

'நெற்­றிக்­கண்' படம் மூலம் மீண்­டும் தமிழ் சினிமா ரசி­கர்­க­ளின் பார்­வையைத் தன் பக்­கம் திருப்பி உள்ளார் அஜ்­மல்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் வெளி­யான 'கோ' படம் அஜ்­மலை பெரிய உய­ரத்­துக்­குக் கொண்டு செல்­லும் என கணிக்­கப்­பட்­டது. எனி­னும் அடுத்து நடித்த சில படங்­கள் வணிக ரீதி­யில் வெற்றி பெற­வில்லை. அத­னால் சினி­மா­வில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

இடை­யில் சில படங்­களில் நாய­க­னாக நடித்த போதி­லும், அஜ்­ம­லுக்கு வில்­லன் கதா­பாத்­தி­ரம்­தான் நன்கு ஒத்­துப்­போ­கிறது, பொருத்­த­மாக உள்­ளது என சில இயக்­கு­நர்­கள் முடி­வு­கட்ட, அதற்கு அஜ்­மல் தரப்­பில் எந்­த­வித எதிர்ப்­பும் இல்லை. இயக்­கு­நர்­க­ளின் அந்த முடிவை அப்­ப­டியே ஏற்­றுக்­கொண்­டார். நயன்­தா­ரா­வு­டன் நடித்த 'நெற்­றிக்­கண்' படத்­தி­லும் இவர்­தான் வில்­லன்.

"தொடர்ந்து வில்­ல­னாக மட்­டும்­தான் நடிப்­பீர்­களா என்று ரசி­கர்­கள் சிலர் கேட்­கின்­ற­னர். அப்­ப­டி­யெல்­லாம் நான் எந்த முடி­வும் எடுக்­க­வில்லை. என் அறி­மு­கப் பட­மான 'அஞ்­சாதே'வில் நடித்­த­போது எனக்கு சினிமா துறை குறித்த புரி­தல் ஏதும் இல்லை. இயக்­கு­நர் மிஷ்­கின் என்ன சொல்­லிக் கொடுத்­தாரோ அதை அப்­ப­டியே செய்­தேன், அவ்­வ­ள­வு­தான்.

"அடுத்த படம் 'திரு­திரு துறு­துறு'. அது ஒரு நகைச்­சு­வைப் படம். அர்­ஜுன் என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தேன். இயல்­பா­கவே நானும் கொஞ்­சம் கல­க­லப்­பான ஆள்­தான். அத­னால் அர்­ஜுன் கதா­பாத்­தி­ரத்­து­டன் ஒன்றி நடிக்க முடிந்­தது.

"இந்­தப் படத்தைப் பார்த்து­தான் இயக்­கு­நர் கே.வி.ஆனந்த் என்னை 'கோ' படத்­தில் நடிக்க வைத்­தார். அதன் பிறகு எனது திரை­யு­ல­கப் பய­ணம் வேகம்­பி­டித்­தது," என்­கி­றார் அஜ்­மல்.

தாம் முதல்­வ­ராக நடித்­தால் ரசி­கர்­கள் அதை ஏற்­பார்­களா என்ற சந்­தே­கம் இவ­ருக்கு இருந்­த­தாம். அதை கே.வி.ஆனந்­தி­டம் தயக்­க­மின்றி வெளிப்­படுத்தி இருக்­கி­றார்.

அவரோ, 'உங்­க­ளுக்கு ஏன் அந்­தக் கவலை, சொல்­வ­தைச் செய்­யுங்­கள்... நல்ல பெயர் கிடைக்­கும்' என்­றா­ராம். ஆனால் கே.வி.ஆனந்த் சொன்­னது போன்று தமக்கு பெரிய அள­வில் பாராட்டு கிடைத்­த­தா­கச் சொல்­கி­றார் அஜ்­மல்.

கடந்த பதி­னைந்து ஆண்­டு­காக நடித்து வரும் இவ­ரைப் பற்றி சில விஷ­யங்­கள் பல­ருக்­குத் தெரி­யாது. அஜ்­மல் அடிப்­ப­டை­யில் ஒரு மருத்­து­வர். நடிப்பை நம்பி படிப்பை கோட்டை விட்­டு­வி­டக் கூடாது என்று குடும்­பத்­தார் கவ­லைப்­பட்­டுள்­ள­னர். அத­னால் மருத்­துவ மேல்­ப­டிப்­புக்­காக வெளி­நாடு சென்­றுள்­ளார். ஆனால் அங்­கி­ருந்த போதும்­கூட, திரை­யு­ல­கைப் பிரியமுடி­யா­மல் தவித்­துப்போனா­ராம். அதை உணர்ந்த குடும்­பத்­தார், 'நீயே முடி­வெ­டுத்­துக்கொள்' என்று பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­னர்.

"அதன்பிறகு எந்­தச் சிக்­க­லும் இல்லை. ஆங்­கி­லத்­தில் சொல்­வ­தா­னால் 'டாக்­டரா... ஆக்­டரா...' என்­ப­தில் நான் எதைத் தேர்வு செய்­தேன் என்­பது அனை­வ­ருக்­கும் புரிந்­தி­ருக்­கும்.

"வெளி­நாட்­டில் இருந்து திரும்­பிய பிறகு எனது திரை­யு­ல­கப் பய­ணத்தை மீண்­டும் தொடக்­கத்­தில் இருந்து கட்­ட­மைக்க வேண்டி இருந்­தது. முத­லில் 'இர­வுக்கு ஆயி­ரம் கண்­கள்' படத்­தில் நடித்­தேன். நல்ல குழு, நல்ல படம் என்­ப­தால் ரசி­கர்­கள் என்­னைப் பற்றி மீண்­டும் பேசத் தொடங்­கி­னர். அடுத்து, 'தேவி-2' படத்­தில் பிர­பு­தேவா, இயக்­கு­நர் ஏ.எல்.விஜய் என்று மேலும் ஒரு நல்ல குழு­வு­டன் பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைத்­தது," என்று கூறும் அஜ்­மல், அதன்பிறகு எந்த வாய்ப்­பை­யும் ஏற்­க­வில்லை.

மீண்­டும் ஒரே மாதி­ரி­யான வேடங்­களே தேடி வந்­த­ன­வாம். அத­னால் சிறிய இடை­வெளி விட­லாம் என்று அப்­போது முடிவு செய்­தி­ருக்­கி­றார்.

"அப்­போ­து­தான் 'நெற்­றிக்­கண்' இயக்­கு­நர் மிலிந்தை சந்­தித்­தேன். அந்­தச் சம­யத்­தில் 'அவள்' என்ற திகில் படத்தை இயக்கி முடித்­தி­ருந்­தார்.

"எனக்­கான கதா­பாத்­தி­ரம் அமை­யும், நிச்­ச­யம் அழைப்­ப­தா­கக் கூறி இருந்­தார். சொன்­ன­ப­டியே அவர் தொடர்பு கொண்ட போது ஆச்­ச­ரி­ய­மா­க­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் இருந்­தது.

"எனி­னும் வில்­லன் கதா­பாத்­தி­ரம் என்று அவர் சொன்­ன­போது தயங்­கி­னேன். உடனே மிலிந்த், 'உங்­க­ளுக்கு எதி­ராக நடிக்­கப்போவது நயன்­தாரா. இது எலிக்­கும் பூனைக்­கும் இடை­யே­யான துரத்­தலை விவ­ரிக்­கும் கதை' என்றாா்.

"வில்­ல­னாக நடித்­தால் பெண்­க­ளுக்கு என்­னைப் பிடிக்­கா­மல் போய்­வி­டுமோ என்ற தயக்­கம் இருந்­தது உண்மை. கார­ணம், ­நா­ய­க­னாக நடிக்கவேண்­டும் என்ற எண்­ணம் இன்­னும் உள்­ளது. எனி­னும் நயன்­தா­ரா­வு­டன் இணைந்து நடித்­த­தால் என் தயக்­கத்­தைக் கைவிட்டு நடித்­தேன்," என்­கி­றார் அஜ்­மல்.

அடுத்து ஒரு மலை­யா­ளப் படத்­தி­லும் நயன்­தாரா­வு­டன் இணைந்­துள்­ளா­ராம். என்ன ராசியோ தெரியவில்லை. இதுவரை நான்கு முறை முதல்­வ­ராக நடித்­து­விட்­டார். அதி­லும், ராம்­கோ­பால் வர்மா இயக்­கத்­தில் 'அம்மா ராஜ்­யம் லோ கடபா பிட்­டலு' என்ற தெலுங்­குப் படத்­தில் ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யாக நடித்து அசத்தி இருந்­தார்.

, :   