தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைகொடுத்த 'அசுரன்'

2 mins read
2806cd43-9b95-47b4-a4c4-fb336d1bc4cd
-

பர­த­நாட்­டிய பயிற்சி, வீணை வாசிப்பு என ஊர­டங்­கின்­போது பய­னுள்ள வகை­யில் பொழு­தைக் கழித்­த­தா­கச் சொல்­கி­றார் நடிகை மஞ்சு வாரி­யர்,

'அசு­ரன்' படத்­தில் நடித்த பிறகு தென்­னிந்­திய திரை­யு­ல­கில் மீண்­டும் முன்­னணி நடி­கை­க­ளின் பட்­டி­ய­லில் இவ­ரது பெய­ரும் இடம்­பெற்­றுள்­ளது.

கேர­ளா­வில் தொற்­றுப்­ப­ர­வல் மோச­ம­டைந்­துள்ள நிலை­யில், தமது சமூக வலைத்­த­ளப் பக்­கங்­களில் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் வித­மாக பதி­விட்டு வரு­கி­றார் மஞ்சு.

திடீ­ரென சில பாடல்­களைப் பாடி காணொ­ளி­யாக அவர் வெளி­யிட்­ட­தற்கு ரசி­கர்­க­ளி­டம் வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

"எனக்கு சுமா­ராக பாட வரும். சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆஸ்­‌தி­ரே­லியா சென்­றி­ருந்­த­போது அங்­குள்ள கடற்­க­ரை­யில் 'என்ன விலை அழகே' என்ற ஏ.ஆர்.ரகு­மான் பாட­லைப் பாடி­னேன். அந்த இனி­மை­யான தரு­ணம் வாழ்க்­கை­யில் மறக்க முடி­யாத ஒன்று.

"அப்­போது எடுக்­கப்­பட்ட காணொ­ளிப்­ப­திவை ஊர­டங்­கின்­போது வெளி­யிட்­டேன். அதற்கு கிடைத்த வர­வேற்பு தொடர்ந்து மேலும் சில பாடல்­களை இவ்­வாறு வெளி­யிட வைத்­தது," என்று சொல்­லும் மஞ்சு வாரி­யர், கடந்த இரு மாதங்­க­ளாக வீட்­டுக்­குள்­தான் முடங்கி இருக்­கி­றா­ராம்.

மலை­யா­ளத் திரை­யு­ல­கம் பல மாதங்­க­ளாக இயங்­கா­மல் இருப்­பது வருத்­தம் அளிப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், நேர்­மறை சிந்­த­னை­கள்­தான் இது­போன்ற நெருக்­க­டியாO தரு­ணங்­க­ளைக் கடந்து செல்ல உத­வும் என்­கி­றார்.

"எந்த மொழிப் பட­மாக இருந்­தா­லும், நட்­சத்­திர மதிப்­பை­யும் கடந்து, நல்ல கதை என்­றால் ரசி­கர்­கள் நிச்­ச­யம் ஆத­ரவு அளிக்­கி­றார்­கள். இதற்கு அண்­மைய உதா­ர­ண­மாக 'தி கிரேட் இண்­டி­யன் கிச்­சன்' படத்­தைக் குறிப்­பி­ட­லாம்.

"சினிமா உல­கில் ஏற்­பட்­டுள்ள சில மாற்­றங்­களும் ரசி­கர்­க­ளின் ரச­னை­களும் நிச்­ச­ய­மாக கலை­ஞர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­தும். அண்­மை­யில் நான் நடித்த 'ப்ரதி பூவன்­கோழி' படம் உட்­பட, அன்­றாட வாழ்க்­கை­யில் நம்­மைச் சுற்றி நடக்­கும் விஷ­யங்­களில் இருந்தே சமூ­கத்­துக்­குச் சொல்ல வேண்­டிய, பட­மாக்க வேண்­டிய கதை­கள் நிறைய உள்­ளன," என்­கி­றார் மஞ்சு வாரி­யர்.

ஒரு படத்­தில் பல்­வேறு கதா­பாத்­தி­ரங்­கள் இருக்­க­லாம். எனி­னும் ஒரு கதா­பாத்­தி­ரத்­துக்கு கச்­சி­த­மா­கப் பொருந்­தி­னால் அவர்­தான் படத்­தின் நாய­கன் என்று குறிப்­பி­டு­ப­வர், மற்ற கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் நாம் இந்­தக் கோணத்­தில்­தான் அணுக வேண்­டும் என்­கி­றார்.

"அண்­மை­யில்­தான் 'சூர­ரைப் போற்று' படத்­தை­யும் 'பாவக் கதை­கள்' இணை­யத் தொட­ரை­யும் பார்த்­தேன். இவை இரண்­டுமே தர­மான படைப்­பு­கள்.

"அடுத்து, சந்­தோஷ்­சி­வன் இயக்­கத்­தில் நான் நடித்­துள்ள 'ஜாக் அன்ட் ஜில்' உட்­பட மூன்று படங்­கள் வெளி­யீடு காண உள்­ளன. ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் நடிக்­கத் தொடங்­கி­ய­தில் இருந்து 'ஹவ் ஓல்ட் ஆர் யூ', 'அசு­ரன்' என நல்ல வாய்ப்­பு­கள் அமைந்து வரு­கின்­றன.

"என்னை நம்பி தனி நாய­கி­யாக நடிக்க வைக்­கி­றார்­கள். அந்­தப் படங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைப்­பது நான் செய்த பாக்­கி­யம். ஏரா­ள­மான கலை­ஞர்­க­ளின் உழைப்­பால்­தான் நான் சுடர்­வி­டு­கி­றேன். என் உழைப்­பும் திரை­யு­ல­குக்­கான பங்­க­ளிப்­பும் தொட­ரும்," என்­கி­றார் மஞ்சு வாரி­யர்.