'சூர்ப்பனகை'க்கு உதவிய சேதுபதி

'சூர்ப்பனகை'க்கு உதவிய சேதுபதி

2 mins read

தமிழ் சினி­மா­வின் தலை­ந­க­ரான கோடம்­பாக்­கம் மீண்­டும் களை­கட்டி உள்­ளது.

ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­ட­தால் தமி­ழ­கம் முழு­வ­தும் பல்­வேறு படங்­க­ளின் படப்­பி­டிப்­பு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

முன்­னணி நாய­கன், நாய­கி­கள் நடித்­துக்கொண்­டி­ருக்­கும், அடுத்து நடிக்க இருக்­கும் படங்­கள் குறித்த அறி­விப்­பு­களும் அடுத்­த­டுத்து வெளி­வ­ரு­கின்­றன. அப்­ப­டிப்­பட்ட சில தக­வல்­கள்.

கார்த்­திக் ராஜு இயக்­கத்­தில் உரு­வா­கும் 'சூர்ப்­ப­னகை' படத்­தில் நடித்து வரு­கி­றார் ரெஜினா. ஒரே சம­யத்­தில் தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் வெளி­யா­கும் படம் இது. படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பை நடி­கர் விஜய் சேது­பதி வெளி­யிட்டு உத­வி­யுள்­ளார்.

லட்­சக்­க­ணக்­கான ரசி­கர்­கள் இத்­தொ­குப்பு சிறப்­பாக இருப்­ப­தா­கப் பாராட்டி உள்­ளது உற்­சா­கம் அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் ரெஜினா. கதைப்­படி அகழ்­வா­ராய்ச்­சி­யா­ள­ரான அவர், அரிய பொருளை ஆய்­வின்­போது கண்­டெ­டுக்­கி­றார். அதன் பிறகு சில சுவா­ர­சி­ய­மான திருப்­பங்­கள் ஏற்­ப­டு­கின்­றன.

ஒரு கட்­டத்­தில் சில­ரால் அவர் பாதிக்­கப்­ப­டு­கி­றார். அதன் பிறகு அவர் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கி­றார் என்­ப­து­தான் கதை­யாம்.

இயக்­கு­நர் அமீர் தற்­போது நடிப்­பி­லும் கவ­னம் செலுத்தி வரு­கி­றார். சூர்யா, வெற்­றி­மா­றன் கூட்­ட­ணி­யில் உரு­வா­கும் 'வாடி வாசல்' படத்­தில் அவர் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­ப­தா­கத் தக­வல்.

கதைப்­படி சூர்­யா­வுக்கு இதில் மாடு­பிடி வீரர் கதா­பாத்­தி­ர­மாம். இதற்­காக அண்­மைய சில வாரங்­க­ளாக அவர் பயிற்சி பெற்று வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் அமீ­ரும் இப்­ப­டத்­தில் இணைந்­துள்­ளார்.

சர­வ­ணன் இயக்­கத்­தில் விஷால் நடிக்­கும் 'வீரமே வாகை சூடும்' படத்­தின் இறு­திக்­கட்ட பணி தொடங்கி உள்­ளது. டிம்­பிள் ஹயதி நாய­கி­யாக நடிக்­கும் இப்­ப­டத்­தில் அதி­ரடி சண்­டைக் காட்­சி­கள் அதி­கம் இடம்­பெ­றும் எனத் தக­வல். நடுத்­தர வர்க்க இளை­ஞன் தவறு செய்­யும் அதி­கா­ரி­க­ளைத் தட்­டிக் கேட்­கி­றான். அத­னால் ஏற்­படும் விளை­வு­க­ளை­யும் எதிர்­கொள்­கி­றான் என்­ப­து­தான் கதை.